வியாழன், ஏப்ரல் 22, 2010

ஜின்னா பற்றி,ஒரு ஹிந்துவின் கருத்து

1 கருத்து :
இந்தியாவில் மிகவும் அறியப்பட்டவரான,பா ஜா கவின்,முக்கிய பிரமுகருமாக இருந்த முன்னால் ராணுவ அதிகாரி ஜஸ்வந்த் சிங்,முஹம்மது அலி ஜின்னா பற்றி குறிப்பிட்டவை இங்கே...
சரி இப்போது ஜின்னாவை பற்றி பேசவேண்டிய அவசியம் என்னவென்று தோன்றலாம்.அவருக்கு வக்காலத்து வாங்க இந்தப்பதிவல்ல
இது எனது முந்தைய பதிவில் சகோ விருச்சம் அவர்கள் ஜின்னா பற்றி செய்த விமர்சனத்துக்கு விளக்கமாகவும் அமையும்.
அத்துடன் ஒரு விஷயத்தில் நாம் கொண்ட வேறுபட்ட எண்ணத்தில் தெளிவும் பிறக்க ஒரு வாய்ப்பாகவும் அமையும் என்ற எண்ணத்திலே இதை பதிகிறேன்,,,,,,,,,
ஜஸ்வந்த் சிங்'கின் கருத்துடன் ஜின்னா விவகாரத்தில் எனது கருத்தும் ஒன்றி நிற்கிறது...
கரன் தாப்பர் பேட்டி விவரம்: சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியில் கரன் தாப்பரின் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் ஜஸ்வந்த் சிங் அளித்த பேட்டியின் சில பகுதிகள்... ஜின்னா சுதந்திர இந்தியாவுக்காக இங்கிலாந்து ஆட்சியாளர்களை எதிர்த்து தீவிரவமாக போராடியவர். அதேசமயம், இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் நலனுக்காகவும் போராடினார். அதற்காக இந்துக்களை ஜின்னா ஒருபோதும் வெறுத்ததில்லை. அவர் ஒருபோதும் இந்துக்கள் மீது துவேஷம் கொள்ளவே இல்லை. காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமே அவருக்கு கருத்து வேறுபாடு இருந்தது. இதை தனது கடைசிக்காலத்தில் வெளியிட்ட அறிக்கைகளிலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையிலும் அவர் தெளிவுபடத் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியுடன்தான் அவருக்கு மிகப் பெரிய கருத்து வேறுபாடு இருந்தது. காந்தியை ஒரு அரசியல் சுயநலவாதி என்று அவர் விமர்சித்துள்ளார். ஜின்னா ஒரு மாபெரும் மனிதர் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் வலிமைக்கும், இங்கிலாந்து ஆட்சியாளர்களின் அசாதாரண பலத்தையும் தாண்டி அவர் உயர்ந்து நின்றார். உண்மையில் இவர்கள் இருவருமே ஜின்னாவை விரும்பாதவர்கள்.
ஜின்னாவிடம் பல விஷயங்கள் எனக்குப் பிடிக்கும். அவர் சுயமாக வளர்ந்தவர். எந்தவித பின்னணியும் இல்லாமல் கடுமையாக உழைத்து வளர்ந்தவர். ஆனால் காந்தி அப்படி அல்ல. அவர் ஒரு திவானின் மகன். அதேபோல நேரு மிகப் பெரிய கோடீஸ்வரரின் வாரிசு. அவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்கள். ஆனால் ஜின்னா அப்படி அல்ல. தானே முயன்று, கடுமையாக உழைத்து தனக்கென ஒரு அரசியல் வரலாற்றை படைத்தவர் ஜின்னா. அவ்வளவு பெரிய மும்பையில், பரம ஏழையாகத்தான் அவரும் வாழ்ந்தார். அங்கு அவர் தாக்குப்பிடிக்க காரணம் அவரது மன வைராக்கியம் மற்றும் கடுமையான முயற்சிகளே. மும்பையில் அவர் வாட்சன்ஸ் ஹோட்டலின் மொட்டை மாடியில் தான் ஒரு அறையில்தான் தங்கியிருந்தார். ஜின்னா என்றில்லை, சுயமாக உயர்ந்த, கடுமையாக உழைக்கக் கூடிய யாரையும் நான் பாராட்டவே செய்வேன், அவர்களை மதிப்பேன். இந்தியாவும், இந்தியர்களும் முழுமையாகவே ஜின்னா குறித்து தவறான கருத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம். யாராவது ஒருவர் மீது பழியைப் போட வேண்டுமே என்பதற்காக ஜின்னாவை பழித்துக் கொண்டிருக்கிறோம். இது தவறானது. 1946ல் நடந்த தேர்தலில் ஜின்னாவின் முஸ்லீம் லீக் கட்சி அனைத்து முஸ்லீம் தொகுதிகளிலும் வென்றது. ஆனால் அவர்களால் ஆட்சியில் அமர முடியாத நிலை. காரணம், காங்கிரஸ் கட்சி ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட நிறுத்தாமல் பெரும்பாலான இடங்களில் வென்றிருந்தது. எனவே முஸ்லீம் லீக்கால் ஆட்சியில் இடம் பிடிக்க முடியவில்லை. அப்போதுதான் அவர் தேர்தலில் நின்றால் மட்டும் போதாது என்பதை ஜின்னா உணர்ந்தார். முஸ்லீம்களுக்கும் ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்பதை காங்கிரஸுக்கும் உணர்த்தினார். இதையடுத்தே இடஒதுக்கீடு உத்தரவாதம் தரப்பட்டது. முதலில் 25 சதவீதம் என்று அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீடு பின்னர் 33 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் இது சரிவர கடைப்பிடிக்கப்படவில்லை. பாரபட்சம் காட்டப்பட்டது, இது தான் நாடு பிளவுபடக் காரணமானது. நேருவுக்கும், ஜின்னாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. நேரு, அதிகாரம் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்திருக்க வேண்டும் என்று கருதினார். ஆனால் ஜின்னா அதிகராபப் பரவல் நிறைந்த பெடரல் அரசியலை வலியுறுத்தினார்.
முஸ்லீம்களுக்கு அதிகாரம் வழங்க காந்தி ஒப்புக் கொண்டார். ஆனால் அதை நேரு விரும்பவில்லை. இந்தியா பிரியும் வரை தனது கருத்தில் நேரு உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருந்தார்.
இந்தத் தவறை பின்னால்தான் நேரு உணர்ந்தார், அதை ஒப்பும் கொண்டிருக்கிறார். இந்தியா இரண்டாகப் பிரிந்ததற்கு நேருவும், அதேபோல ஜின்னாவும்தான் முக்கிய காரணம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. இதை நான் குற்றச்சாட்டாக கூறவில்லை. உண்மையைப் பதிவு செய்கிறேன். அந்த சமயத்தில் என்ன நடந்தது, எந்தச் சூழ்நிலை பிரிவினைக்கு இட்டுச் சென்றது என்பதைக் கூறுகிறேன். எனது கருத்து என்னவென்றால் ஜின்னா மட்டுமே பிரிவினைக்குக் காரணம் அல்ல. அப்படிப்பட்ட கருத்தை நாம் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே. மேலும் ஜின்னா பாகிஸ்தான் என்ற வார்த்தையை நெடுங்காலத்திற்கு பயன்படுத்தவில்லை. முஸ்லீம்களுக்கு தனி இடம் வேண்டும் என்று மட்டுமே கோரினார். சில மாகாணங்களை முஸ்லீம்களுக்காக ஒதுக்க வேண்டும். அவை இஸ்லாமிய மாகாணங்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். மேலும், இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றார். சிறுபான்மையினருக்கும் அதிகாரத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தால்தான் பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமுதாயத்தில் கெளரவத்துடனும், அதிகாரத்துடனும் இருக்க முடியும் என அவர் நினைத்தார். அதுதான் அவரது முதன்மையான நோக்கமாக இருந்ததே தவிர பிரிவினை அவரது முதல் எண்ணமாக இல்லை. அதாவது இந்தியாவுக்குள் சுயாட்சி கொண்ட ஒரு பாகிஸ்தானையே அவர் விரும்பினார். அந்தக் கருத்து சாத்தியமானதுதான் என்றும் அவர் நினைத்தார். அவரது எண்ணத்திற்கு மதிப்பளித்திருந்தால் பிரிவினையே ஏற்பட்டிருக்காது. இந்துக்களை அவர் ஒருபோதும் வெறுத்ததில்லை. காங்கிரஸ் மீதும், காங்கிரஸ் தலைமை மீதும்தான் அவரது கோபம் இருந்தது. இந்துக்களை நான் எதிரியாகவே நினைக்கவில்லை என்று அவர் தொடர்ந்து கூறி வந்திருக்கிறார் என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். முதன் முதலாக காந்தியிடம் ஜின்னாவை கோகலே அறிமுகப்படுத்தியபோது, காந்தி சொன்ன வார்த்தை இது- ''ஒரு முஸ்லீம் தலைவரை வரவேற்பதில் பெருமை அடைகிறேன்''. அங்கேயே பிரிவினை வந்து விட்டது. ஜின்னாவை ஒரு முஸ்லீம் என்ற கோணத்தில்தான் காந்தியே பார்த்திருக்கிறார். ஆனால் தான் ஒரு முழுமையான இந்தியர் என்ற எண்ணத்துடன் இருந்தவர் ஜின்னா. தன்னை ஒரு முஸ்லீமாக பார்ப்பதை அவர் விரும்பாதவர். ஜின்னாவுக்கும், காந்திக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஜின்னா ஒரு சிறந்த பேச்சாளர், சிறந்த நாடாளுமன்றவாதி, நாடாளுமன்ற அரசியலில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். பிரிவினைவாதத்தை எந்த நிலையிலும் அவர் ஏற்காதவர். ஆனால் காந்தி, தனது கருத்துக்களைக் கூற மதத்தைத் துணைக்கு அழைத்தவர். ஆனால் ஜின்னா மதம் என்ற சொல்லை கடைசி நேரத்தில்தான் கையில் எடுத்தார். ஆனால் காந்திக்கோ, அவரது அரசியலின் ஆரம்பத்திலிருந்தே மதமும் கலந்தே இருந்தது. ஆனால் ஜின்னா, அரசியலில் மதம் கலக்கக் கூடாது என்று உறுதியாக இருந்தவர். இந்திய, பாகிஸ்தான் பிரிவினையை நான் ஜின்னாவின் மாபெரும் வெற்றியாக கூற மாட்டேன். அதேபோல தான் நினைத்ததை ஜின்னாவும் சாதிக்கவில்லை. பாகிஸ்தான் உருவான சில காலத்திலேயே ஜின்னாவின் கொள்கைகள், நோக்கங்கள் அடிபட்டுப் போய் விட்டன. அந்த வகையில் காந்தியும் சரி, ஜின்னாவும் சரி தோல்வியடைந்தவர்களே...
- ஜஸ்வந்த் சிங்
இதை ஒரு முஸ்லிமான நான் சொன்னால் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மனம் வராது.இந்திய முஸ்லிம்களே இப்படித்தான்,பாவி இந்தியாவை கூறுபோட்டவனை கொண்டாடுகிறார்கள் என சொல்வார்கள்.எனவே தான் ஒரு ஹிந்துவான ஜஸ்வந்த் அவர்களின் கருத்தை முன்வைக்கிறேன்.அவரது கருத்துக்கு வழிமொழிகிறேன்,,,,
நன்றி
அன்புடன்
ரஜின்.

செவ்வாய், ஏப்ரல் 13, 2010

இந்திய முஸ்லிம்கள் குறித்த ஹிந்துத்துவாக்களின் பார்வை...

58 கருத்துகள் :
இந்த பதிவு இந்திய முஸ்லிம்கள் குறித்த ஹிந்துக்களின்,இல்ல ஹிந்துத்துவாக்களின் பார்வையை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடித்துண்டாக இருக்கும்..என்னை வந்தடைந்த,முஸ்லிம்கள் குறித்த இந்தக் கண்ணோட்டமே மொத்த ஹிந்துத்துவாக்களுக்கும் கற்பிக்கப் படும் பாடமாக இருக்கிறது,எனபது இவரின் வாதத்தில் இருந்து எனக்கு புலப்படுகிறது...
சரி விஷயத்துக்கு வருவோம்..
எனது முந்தைய பதிவில் தமிழ்ஹிந்து தளத்தின் தரம் பற்றி எழுதியிருந்தேன்...இருப்பினும் அவர்களின் கட்டுரைகளை படித்து,இயன்ற அளவு அவர்களின் தளத்திலே பதில்தர முயல்வேன்..அங்கு எனது கருத்துக்கள் பலவேலைகளில் திரிபு செய்யப்பட்டாலும் பதில் தருவேன்,ஏனென்றால் எனது தரப்பு நியாயங்கள,அங்கு வரும் ஒரு ஹிந்து சகோதரனுக்காவது புரியாத என்ற ஆதங்கத்திலே..ஆனால் அதைவிட எதிர்ப்புகளும்,கண்டங்களும் அதிகம் வரும் அவை இந்த ஹிந்துத்துவாக்களின் செயல் என தெரியும்.இருந்தாலும் அவற்றுக்கும் பதில் அளிப்பேன்..
ஆனால்,கடந்தமார்ச் 29 அன்று தமிழ்ஹிந்து தளம் வெளியிட்ட அங்காடித்தெரு பட விமர்சனம் வெளியிட்டது..அதில் எனது ஆதங்கத்தை பின்னூட்டமாக்கி இருந்தேன்..அது மட்டுறுத்தப்பட்டது வேறுவிடயம்..ஆனால் அதற்கு பதில் வந்தது பாருங்கள்..அப்படியே ஹிந்துத்துவ பிம்பம்..
படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கி நீங்களே பாருங்கள்...
அவரது அந்த கேள்விகளுக்கு பதிலும் விளக்கமும் அளிக்க கடமைப்பட்டுள்ளேன்..
அவரது கேள்விகள் சிவப்பு வண்ண எழுத்தில் குறிப்பிட்டுள்ளேன்...
திரு ரஜின் அவகளுக்கு எனது வேண்டுகோள். தயவு செய்து எந்தச் சார்பும் இன்றி சுய பரிசோதனை செய்துகொள்ளவும். ஹிந்துக்களின் தேசமான இங்கு, ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ள இங்கு, சிறுபான்மை யினர் என்ற தகுதியில் உங்களுக்கு உள்ள, ஹிந்துக்களுக்கு இல்லாத உரிமைகளை எண்ணிப் பாருங்கள்.
ஐயா இந்தியா ஹிந்துக்களின் தேசம் தான்.ஆனால் தாங்கள் கூறுவதுபோல் ஹிந்துத்துவாக்களின் தேசம் அல்ல.முதலில் ஹிந்து என்பதன் அர்த்ததை புரிந்து கொள்ளுங்கள்..இதெல்லா ஒங்களுக்கு சொல்லித்தரவே மாட்டங்க...ஏன் ஹிந்துக்களின் தேசம் என்கிறேன் என்றால்,இந்திய நிலப்பரப்பு சார்ந்து இந்தியகுடிமகனான,ஒரு முஸ்லிமான நானும் ஹிந்துதான்,அதற்கான விளக்கம் "நானும் ஒரு ஹிந்து" எனும் எனது பதிவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.படித்துவிட்டு தொடருங்கள்...
அப்படி இருக்கும் போது நீங்கள் மதம் சார்ந்து ஹிந்துக்களின் தேசம் எனச் சொல்வீர்களானால்.உங்க மேல கேஸ் போட்டு உள்ள தள்ள முடியும்..என்னய பாத்து நீ இந்தியனே இல்லங்ர...(சாரிங்க மரியாத குடுக்க மனசு வரல)இந்தியா, இங்கு பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் பாரபட்சமின்றி உரிமையானது,,
வெறும் மதம் சார்ந்து இருக்கும் ஒரேகாரணத்துக்காக இந்தியாவே ஹிந்துத்துவாக்களோடதா?..என்னடா பைத்தியக்காரத்தனமா இல்ல..(சாரிங்க மரியாத குடுக்க மனசு வரல)
ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தா? சிறுபான்மையாக இருக்கிறவன் என்ன அகதியா வாழனும்கிறீர்களா? ஹிந்துக்களுக்கில்லாத உரிமைகள் எதை இந்திய அரசியல் சட்டம் எங்களுக்கு கொடுத்துவிட்டது?..அதையும் சொல்லிருக்கலாமே?..3.5% இட ஒதுகீடுக்கு நாய் மாதிரி போராடி,அதை அப்படி இப்படி குடுத்துவிட்டால் ...அதை வைத்து என்ன இந்தியாவையே வாரி சுருட்டீரப்போரோமா?
வேறு எந்த நாட்டிலாவது பெரும்பான்மையினர் இந்த அளவுக்கு சிறுபான்மையினரை நடத்துகின்றனரா?
ஐயா.. மத்த நாட்ல உள்ள சிருபான்மையினருக்கும்,இந்தியாவில் உள்ள சிருபான்மையினருக்கும் வித்தியாசம் தெரியாம இருக்கீங்களே....
உங்களுக்கு புரியும்படியே சொல்றேன்....மலேசியாவில உள்ள ஹிந்துக்கள் சிருபான்மையினர்...அது ஒரு முஸ்லிம் நாடு..அந்த நாட்ல,உள்ள பூர்வீக குடிகளான மலாய் களுக்கு சிலவற்றில் முன்னுரிமை உண்டு..ஆனால் அங்கு வசிக்கும் குடியேரிகளான இந்திய மக்களுக்கு சிலவற்றில் மலாய்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை வழங்குவதில்லை..அதற்காக அங்கு மக்கள் ஒடுக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது,
மலேசியாவின் பூர்வீக குடிகள் அனைவரும் முஸ்லிம்களும் அல்ல...அங்கு குடியேரிய மக்கள் அனைவரும் ஹிந்துக்களும் அல்ல..இந்திய முஸ்லிம்களும் அங்கு குடியேரிகளாக உள்ளனர்.அவர்களுக்கும்,இதே நிலைதான்,,,
ஆனால் அந்த நாட்டின் நிலையுடன்,இந்திய முஸ்லிம்களின் நிலையை ஒப்பிட முடியாது..இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் ஒன்றும் வந்தேரிகள் அல்ல.முதலில் அதை விளங்கிக் கொள்ளவேண்டும்..
சில தலை முறைகளுக்கு முன்னர் குப்பனாகவும் சுப்பனாகவும் இருந்த என்னுடைய மூதாதையர்..இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு,தனது மார்க்கமாக அதை தேர்வு செய்து கொண்டவர்கள்.அவ்வளவுதான்.....
எப்படி இப்பொ பேராசிரியர் பெரியார்தாசன்,அப்துல்லாஹ் ஆனாரோ..அதே மாதிரிதான்..என்னோட மூதாதையர்களான முனியாண்டி,முஹம்மதாக மாறினர்.அவ்ளோதா...என்னை பார்த்து இரண்டாம்தர குடிமகனா இருக்க சொல்ரீங்க...
ஹிந்துக்கள் தங்கள் மத சம்பந்தமான ஊர்வலம் செல்லக் கூட ஆயிரம் தடங்கல் செய்கிறீர்கள். மீறிச் சென்றால் பெருங் கலவரத்தில் இறங்கிவிடுகிறீர்கள் (ஹைதராபாத் சமீப உதாரணம்). உங்கள் ஊர்வலம் இவ்வாறு ஹிந்துக்களால் பாதிக்கப்படுவதுண்டா? ஏன் சிறிதளவு சகிப்புத்தன்மையும் இல்லாமல் இருக்கிறீர்கள்?
அடேயப்பா ரெம்ப நல்லவன் மாதிரியே பேசுரீங்களே எப்புடிப்பா?ஐயா நீங்க சொல்லவர்ரது என்ன விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் தான...அது கலவரத்த உருவாக்கவே உருவாக்கப்பட்ட ஊர்வலமாச்சே,.....அது தா ஹிந்துக்களின் ஊர்வலம் இல்லயே..ஹிந்துத்துவாக்களின் வெறிவலம் ஆச்சே...
எனக்கு தெரிஞ்சு 1980களுக்கு பிறகுதான தமிழ்நாட்ல விநாயகசதூர்த்தி ஊர்வலங்கள் நடக்குது..அது 1991க்கு அப்பரம் ரொம்ப தீவிரமா வன்முறை கட்டவிழ்த்து விட ஏதுவானமுறையில் நடத்தப்படுகிறது....
முஸ்லிம்களின் ஊர்வலத்துல எதும் காலித்தனம் பன்றதில்லயேப்பா?ம்ம்..ஊர்வலம் போரவர்கள்,மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் சென்றால் யார் என்ன சொல்லப் போகிறோம்.அப்படி தொல்லை நேரும்போது என்னன்னு கேக்காம "சகிப்புத்தன்மையோட" இரண்டாம் தர குடிமகனா இருக்க சொல்ரீங்களா...
சகிப்புத்தன்மை என்பது என்ன?ம்ம்.சகிக்கமுடியாத ஒன்று நிகழும் போது சகித்து பொருத்துக் கொள்வதே சகிப்புத்தன்மை.அப்போ அங்க சகிக்கமுடியாம எதும் நடந்தாலும் கண்டுக்காது சும்மா இருக்க சொல்ரீங்களா?
அமைதியான முறைல நடந்தா யார் என்ன சொல்ல போரான்....
ஹிந்துக்களை பெரிதும் மதிக்கிறோம்.ஹிந்துத்துவாக்களை அல்ல...ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்துச்சொல்லும் பழக்கமே எங்களுக்கு உண்டு,....
ஜமாத் என்று நீங்களாக ஒன்று கூடிக்கொண்டு போட்டி ராஜாங்கமே நடத்துகிறீர்கள். சிவில் சட்டத்திற்கு ஷரியாவை வற்புறுத்திக் கடைப்பிடிக்கும் நீங்கள், அதன் கிரிமினல் பிரிவை மட்டும் வெகு சாமர்த்தியமாக மறந்துவிடுகிறீர்கள். நாங்கள் இஸ்லாமியர் எனவே கிரிமினல் குற்றங்களுக்கு ஷரியாவின் படியே எங்களை நடத்துங்கள் என்று ஏன் கோருவதில்லை?
இந்த ஜமாத்'கள பத்தி எனக்கு சொல்லிதராதீங்க.அதுல உள்ள உள்குத்து எல்ல உங்களுக்கு தெரியாது..எனக்குதா தெரியும்.அப்டியே ஒன்னா இருந்துட்டாலும்...
ஐயா அறிவாளி...எந்த முஸ்லிம்'ங்க கிரிமினல் சட்டத்துக்கு ஷரியா சட்டம் வேணான்னு சொல்லுவான்..அதுக்கு ஒரு வாய்ப்பு இருந்தால் சிவப்பு கம்பலம் இட்டல்லவா வரவேற்ப்போம்..அது ஏன் இந்தியாவுல கடைப்பிடிக்கிரதில்லன்னு சொல்ரேன்..
ஒரு விஷயத்த தெளிவா புரிஞ்சுக்கனும்...ஷரியத் சட்டம்,அல்லாஹ் உடைய,அல்லாஹ்வை ஏற்ற முஸ்லிம்களுக்கான சட்டம்.மற்றவர்களுக்கல்ல..முஸ்லிம்கள் மீதான ஜகாத் கடமை எப்படி முஸ்லிம்களல்லாதவர்களுக்கு பொருந்தாதோ,அதுபோல சட்டங்களும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பொருந்தாது.
இந்திய முஸ்லிம்கள் தங்களது மத சுதந்திர அடிப்படையில்,திருமணம்,சொத்து, விவாகரத்து,உள்ளிட்ட 12க்கும் குறைவான விவகாரங்களிலே...ஷரியத் சட்டங்களை கோருகின்றனர்...மீதம் உள்ள அத்துனைக்கும் இந்திய அரசியல் சாசன சட்டத்தையே பின்பற்றுகிறனர்...
சரி...ஏன் இதுமாதிரியான சிவில் சட்டங்களில் மட்டும் ஷரியத்.கிரிமினல் வழக்குகளில் இந்திய சட்டமென கேட்பது சிந்திக்காமல் கேட்கும் கேள்வியானாலும் பதில் சொல்லப்பட வேண்டிய கேள்வி..
முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் சிவில் சம்பந்தமான ஷரியத் சட்டங்கள அனைத்திலும் முஸ்லிம்களே அங்கம் வகிப்பார்கள்..அதாவது வாதியும் முஸ்லிமாக இருப்பான்,பிரதிவாதியும் முஸ்லிமாக இருப்பான்.அப்படி இருக்க அது இங்கே எந்த வித குழப்பத்துக்கும் இடம் இன்றி இருவரும் ஏற்றுக் கொள்ளும் முகமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.உதாரணமாக திருமணமோ,அல்லது தலாக் இது போன்றவை....
சரி கிரிமினல் வழக்கு என்றல்ல,இன்னபிற வியாபாரம் போன்ற சிவில் சட்டம் தொடர்பான விடயங்களில் கூட இந்திய முஸ்லிம்கள் ஷரியத்'ஐ பின்பற்றமுடியாது....ஏனென்னில் மேற்சொன்ன சில சிவில் சட்டங்கள்(திருமணம்,சொத்து போன்றவை) போக..இன்னபிற அனைத்திலும்,எனது ஹிந்து சகோதரனும் பிரதிவாதியா இருப்பான்,கிருத்தவனும் இருப்பான்...
இப்போது,ஒருவன் கொலை செய்தால்,ஷ்ரீயத் சட்டப்படி தலை போய்விடும்..சரி ஒரு முஸ்லிம் செய்தால் தலை எடுத்துவிடலாம் .கேட்க முடியாது..அதுவே ஒரு முஸ்லிமை ஹிந்து கொன்று இருந்தால் அப்போ பாதிக்கப்பட்டவன் முஸ்லிமாக இருக்க அவனுக்கு ஷரியத் சட்டத்தின் படி தீர்ப்பு சொல்வதானால் ஹிந்துவின் தலை இருக்காது..முஸ்லிம் திருடினால் கை இருக்காது..முஸ்லிமின் வீட்டில் திருடினால் ஹிந்துவின் கையும் இருக்காது..ஈவ்டீஸிங் பண்ணூனால்லா தாருமாரா தண்டனை இருக்கும் பரவா இல்லயா?
முஸ்லிம்களுக்கு ஓக்கெ.ஏன்னா இந்த மேட்டர்ல..பொதுவா இல்லனாலும் குறிப்பா முஸ்லிம்கள் மேல கை வெக்க மாட்டாங்கள்ல இந்த ஹிந்துதுவாவாதிகள்..
ஷரியத் சட்டத்துனால அதிகம் பாதுகாப்பு அடைவது முஸ்லிம்களானாலும்..பொதுவாக குற்றங்கள் குறைந்து எல்லாருமே நிம்மதியா இருப்போம்.நாளை குற்றங்களுக்கான தண்டனைகளை பார்த்துவிட்டு,ஹிந்துக்களும் வரவேற்கலாம்...
இப்பொ சொல்லுங்க ஷரியத் சட்டத்தை கிரிமினல் வழக்குகளிலும் கேட்கனுமா?கேட்கிறோம்...
அது இந்தியாவிற்கு சாத்தியம் இல்லாத ஒன்று...
கப்பித்தனமா கேள்வி கேக்க கூடாது,,,சரியா?
அன்பு கூர்ந்து குரானை முழுமையாகப் படியுங்கள். உங்கள் மனச்சாட்சியை சுத்ந்திரமாகப் பேச விடுங்கள். குரானில் வரிக்கு வரி உங்கள் மனச் சாட்சிக்கு உடன்பாடானதாகத்தான் உள்ளதா, காலத்திற்கு ஒவ்வாதவையாகவும் பிற சமயங்கள், கலாசாரங்கள் மீது துவேஷத்தினை வளர்ப்பவையாகவும் சில உள்ளனவா இல்லையா என்று தீர்ப்பளிக்கும் உரிமையை உங்கள் மனச் சாட்சியிடம் விடுங்கள். அதன் பின் உங்கள் மீது மற்றவர்கள் கண்ணோட்டம் அமைவதன் நியாய அநியாங்களை மதிப்பீடு செய்யுங்கள்.
நான் குர் ஆன்'அ படித்திருக்கேன்.ஐயா நீங்க முதல்ல குரான பாத்து இருக்கீங்களா?என்னமோ படிச்சு முடிச்சமாதிரி பாடம்லா எடுக்குரீரே...ம்ம்..யாரோ ஏதோ சொன்னத வச்சுகிட்டு வந்து இங்க ஜல்லிஅடிக்க கூடாது.
காலத்திற்கு ஒவ்வாமையா இன்னக்கி உலகம் முழுவதும் 120கோடிக்கும் மேலாக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.காலத்திற்கு ஒவ்வாததாக இருந்திருந்தால் அதன் வளர்ச்சி சரிந்து,காலப்போக்கில் அழிந்தல்லவா போய் இருக்கும்.
பிற சமய கலாச்சாரங்களை பழிப்பதாக குரானில் எங்கு எந்த வாசகம் இருக்கிறது?தயவு செய்து குறிப்பு தாருங்களேன்.அதுக்கும் பதில் சொல்கிறேன்,இன்ஷா அல்லாஹ்...
நீங்கள் அனுசரிக்கும் மதம்தான் அரேபியாவிலிருந்து வந்தது, உங்க்ள் கலாசாரம் இங்குள்ளதுதான். ஆனால் அதை மறப்பதும் மறுப்பதும் ஏன் என்று யோசியுங்கள். சில இஸ்லாமியர் இதனை உணர்ந்து அதனை வெளிப்படுத்தும்போது அவர்களை என்ன பாடு படுத்துகிறீர்கள் என்பதையும் எண்ணிப் பாருங்கள்.
ஐயா இஸ்லாம் அரேபியாவில் இருந்து வந்ததல்ல..அது அரேபியாவில் புதுப்பொலிவு பெற்றது..அவ்வளவே.நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த கலாச்சாரம் அரேபிய கலாச்சாரம் அல்ல.அது இஸ்லாமிய கலாச்சாரம்.இஸ்லாம் ஆன்மீகம்,வாழ்வியல் என இரு தனிப்பாதைகளை கொண்டதல்ல..அது வாழ்வியலுடன் ஆன்மீகத்தை பிணைக்கிறது.இரண்டையும் பிரிக்கவியலாது இரண்டரக்கலந்த ஒன்றுதான் இஸ்லாம்.
சரி இந்திய கலாச்சாரம் என எதை சொல்கிறீர்கள் ஐயா? சிந்து சமவெளி கலாச்சாரத்தையா?ம்ஹும்...அது பார்ப்பனர்களின் கலாச்சாரம்.அது ஹிந்துக்களின் கலாச்சாரம் கூட இல்லை.இந்திய பாரம்பரிய உடைகளை அணிகிறோம்.இந்திய பாரம்பரிய உணவுகளை உண்ணுகிறோம்..இந்திய மொழி பேசுகிறோம்..இந்தியராகவே வாழ்கிறோம்.வெரென்ன பண்ணனும்.இதுல எங்க இந்திய கலாச்சாரத்த விட்டுட்டோம்?..
எங்களது மார்க்கம் சில வரைமுறைகளையும் செயல்பாடுகளையும் கொண்டுள்ளது.அதை இந்திய அரசியல் சாசன சட்டத்துக்குட்பட்டு.அதன் முழு அனுமதியுடன் செய்கிறோம்..இதனால் யாருக்கு என்ன பாதிப்பு..?
தாங்கள் குறிப்பிடும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்??களான சல்மான் ருஷ்டி'யும் தஸ்லிமா நஸ்ரினும் தானே?...அவங்கல்லா,ஹிந்து மதத்துல உள்ள குருக்கள் தேவனாதன்,மற்றும் நித்தியை போன்றவர்கள்.அவர்களுக்கு ஹிந்துமக்கள்(ஹிந்துதுவாக்கள் அல்ல.) மத்தியில் இப்போது என்ன அந்தஸ்து இருக்கிறதோ.அதுதான் ருஷ்டிகளுக்கும் இஸ்லாத்தில்....அவ்வளவே...
சிறிதளவாவது சகிப்புத்த்ன்மையுடன் இருக்க நீங்கள் பழகினால் போதும். மேல் விஷாரம் (வேலூர் அருகில் உள்ளது) போன்ற ஊர்களுக்குச் சென்று அங்கு ஹிந்துக் களின் நிலை என்னவென்பதை நேரில் கண்டறியுங்கள்.
ம்ம்.எவ்வளவுங்க...சகிப்புத்தன்மை வேணும் எங்களுக்கு...குஜராத்'ல,கர்ப்பிணிகளை கற்பழித்து,வயிற்று சிசுவை கிழித்தெடுத்து,தரையில் அடித்தும்,நெருப்பில் இட்டும் கொன்றவன்,எம் பெண்மக்களையும் ஆண்மக்களையும் பாலகன்களையும் பெட்ரோல் ஊற்றி கொழுத்தியவன்.வயதான முன்னால் எம் பி,இஹ்ஸான் ஜாஃப்ரி உள்பட பல்லாயிரம் பேரின் உறுப்புகளை சிதைத்து சித்ரவதை செய்து எரித்து நரகவேட்டை ஆடியவன்,எல்லா வக்கனையா பேட்டி குடுத்துகிட்டு.துளியும் தண்டனையின்றி வெளியில் சுத்துரானே,..அதையும் பாத்துகிட்டு கையாளாகாம இருக்கோமே.....இதைவிடவும் சகிப்புத்தன்மை வேணுமா உங்களுக்கு?
மேல்விஷாரம் அத பத்தி தெரியாதுங்க...ஆனா இந்தியாவுல நீங்க தேடித்தேடி ஒரு மேல் விஷாரத்த கண்டு புடிச்சு.கதைக்கிறீர்கள்...ஆனா இந்தியாவுல முஸ்லிம்கள் வசிக்கும் பெரும்பாலான இடங்கள் மேல்விஷாரமாத்தான் இருக்கு....
குஜராத்,ஒரிஸா,அஸ்ஸாம்(நெல்லி),மும்பை,கோவை,பாஹல்பூர்(பிஹார்),மீரட்...என இந்தியாவின் வடகோடியில் இருந்து தென் கோடிவரை பெரும்பாலான முஸ்லிம்களை திட்டமிட்டே இரண்டாம்தர குடிகளாக்கி வைத்திருகிறீர்களே....இந்த கொடுமையை எங்க போய் சொல்ல..
அன்புகூர்ந்து மீண்டும் த்மிழ்ஹிந்துவில் உங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
கடைசியா சொன்னீரே ஒன்னு,...அப்பப்பா?நான் நீங்க கேட்ட கேள்விகெல்லா இவ்வளவு டீடைல்ல பதில் சொல்ல வேண்டி இருக்கு..உங்க தளத்துல சும்மா ஹிந்துத்துவம்னாலே அங்க கருத்து காத்துல பறந்துடும்..இவ்வளவும் சொன்னா.....அனுமதிப்பது சந்தேகமே..
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சகோதரர்களே..மேலே,நான் சொன்ன செய்திகள் அனைத்தும் எந்த ஒரு ஹிந்துவையும் முன்வைத்து பதில் சொல்லப்படவில்லை...ஹிந்துத்துவ சிந்தனை கொண்டு முஸ்லிம்கள் மீது சீற்றம் கொள்பவர்களை நோக்கியே பதில் தரப்பட்டுள்ளது...
இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் பதியப்படவில்லை..
நன்றி
அன்புடன்
ரஜின்

திங்கள், ஏப்ரல் 12, 2010

தமிழ் ஹிந்து தளத்திற்கு எனது வன்மையான கண்டனம்...

13 கருத்துகள் :
தமிழ் ஹிந்து தளம்.
இது பொதுவாக ஹிந்து மதம் பற்றிய செய்திகளை அலசும் ஒரு தளமாக தன்னை அறிமுகபடுத்திக் கொண்டாலும்.அவற்றில் அதிகபட்சமாக மற்ற மதங்களின் மீதான,குறிப்பாக இஸ்லாம் மற்றும் கிருஸ்தவம் பற்றிய அதீத விமர்சனங்களை காணமுடியும்.அவற்றின் மீதான கோபம்,கண்டனம்,வன்மம்,வெறுப்பு,இவையெ அங்கு விரவி காணப்படுகிறது.
இந்த தளம் எனக்கு அறிமுகமானதுகூட அவ்வாறே.இஸ்லாம் குறித்த சில தவறான கண்ணோட்டம் கொண்ட கட்டுரைகளை நான் கண்ணுர நேர்ந்ததே,என்னை அந்த தளத்தின் தொடர் வாசகனாக்கியது.
சரி..எந்த மதத்தையும் விமர்சனம் செய்யலாம்,தவறான பார்வை இருக்கலாம்.கட்டுரைகள் எழுதலாம்..தவறல்ல..ஆனால் அதில் கண்ணியம் இருக்கவேண்டும்..அது சற்றே அங்கு வற்றி காணப்படுகிறது...
சரி..அது அவரவர் கையிருப்பை காட்டுகிறது.போகட்டும்.நமது தரப்பு நியாயங்களாவது அந்த அரங்கில் வைக்க அனுமதிக்கப் படுகிறதா என்றால்..அனுமதிக்கப் படுகிறது..எதுவரை..நமது கருத்து நியாயமானதாக இருந்தாலும்,அவர்களை சுடாதவரை அனுமதிக்கப் படுகிறது..
இது ஒரு ஹிந்து தளமாக ஹிந்து சமயம் பற்றி விவாதிக்கும் மன்றமாக இருப்பின்,அதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும்..இல்லை,நாங்கள் அனைத்து விடையங்களையும் விரிவாக விவாதிப்போம் என தாங்கள் சொல்வீர்களானால்...தவறல்ல...முழுவதுமாக வரவேற்கிறோம்..
ஆனால் அறிஞர் அண்ணா சொன்னது போல "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு"என்பத்ற்கினங்க எங்களது கருத்துகளையும் எவ்வித திரித்தலும் இன்றி அனுமதிக்க வேண்டும்..ஆனால் அது அங்கு நடப்பதில்லை
சரி..சில மூடர்கள்..இழிவான வார்த்தை பிரயோகம் செய்து வசை பாடுவது வழக்கம்..அவை மட்டுறுத்தப்படுவது நியாயம்.எங்களை போன்ற எழுத்து கண்ணியம் பேன எண்ணுபவர்களையும்,நடுநிலையாக கேள்விகளை முன்வைப்பவர்களையும்.தவிர்த்தால்,எங்கோ தப்பு நடக்கிறது..
ஒன்று ஹிந்து மதத்தில் உள்ள தவறுகளை சுட்டி காட்டினால் வலிக்கிறது.அதை மனம் ஏற்க மறுக்கிறது.அல்லது அதை அரங்கேற்றாமல் மறைக்கிறது..
இங்கே நடுநிலைமை, காற்றில் பறந்த வேட்டியாக்கி தங்களது மானமே போகிறது..
அப்படி நடுநிலை தவறிய தங்களின் கட்டுரை நடுநிலையுடன் இருக்கும் என்ன எண்ணுவது மூடத்தனமே அன்றி வேறில்லை என எண்ணுகிறேன்..
சில சமயங்களின் எனது கருத்தை அனுமதித்துள்ளீர்கள்.அது ஹிந்து மதத்தை தாக்காமல் இருக்கும் வரை,ஆனால் வேறு சில சமயங்களிலோ வக்கிரமாக எனது கருத்தை திரித்து,பொருள் மாற்றி,அதை எனக்கெதிராக திருப்பிவிடுவது எவ்வளவு பெரிய அயோக்கியதனம்.???
அதை என்னால் பொருத்துக் கொள்ளவே இயலவில்லை.இத்தனை நாளும் ஒரு அயோக்கியர்களின் கூடாரத்திலா,நமது வாத்தை வைத்துக் கொண்டு இருந்தோம் என எனக்கே வெட்கமாக இருந்தது.
ஒரு கருத்து முரணாக,அல்லது தன்னை பாதிப்பதாக இருப்பினும் ஊடக தர்மத்தின் படி அதை அனுமதிக்கவே வேண்டும்..ஒருவேலை அடிக்கொருமுறை அவர்கள் சொல்லும் ஹிந்து தர்மத்தில் அது பற்றிய குறிப்பு இல்லையொ என்னவோ அதை அவர்கள் செய்வதில்லை..
சரி விரசமாக ஆபாசமாக கருத்துகள் வரும்.அவற்றை கேள்விகணக்கின்றி தவிர்த்துவிடலாம்...
இங்கு நான் சொல்ல வருவது என்னவென்றால்..ஒருவனது கருத்தை தடுக்க அல்லது அனுமதிக்கவே தளத்தினருக்கு உரிமை உள்ளது.அது தவிர்த்து,அவனது கருத்தில் கைவைத்து,அதை திரித்து விளையாடுவது..என்னை பொருத்தவரை விபச்சாரத்துக்கு ஒப்பானது...
சரிதான் இதுவும் ஒருவித கருத்து விபச்சாரம் தானே.ஒருவனது தனிப்பட்ட கருத்து என்பது அவனுக்குறியது,அதில் கைவைக்க யாருக்கும் உரிமை இல்லை.அப்படி இருக்க அதில் கைவைத்து கபடி ஆடுவது.இழிவிலும் இழிவான செயல்...எனக்கு இதுக்கு மேல கடுமையான வார்த்தை,கண்ணியமா வரமாட்டேங்குது...
சரிடா அப்படி என்னத செஞ்சிடானுக,இந்த பொலம்பு பொலம்புரன்னு கேக்குரீங்களா?எனது கருத்தை பலமுறை இந்த தளத்தில் வைக்கும் போது காக்கா வந்து அகஸ்மாத்தா தூக்கிட்டு போய்டுது...சரி போனாலும் ப்ரவாயில்லன்னா,அந்த கருத்து மேலயே இந்த தமிழ்ஹிந்து தளத்தோட எடிட்டர் காக்கா கக்கா போய் அதை கையில எடுத்து என்னோட பின்னூட்டம்னு போட்டுடுது..அது தா காரணம்..
இங்கே..எனது ஒரிஜினல் பின்னூட்டமும்,ஹிந்து தளத்தில் திரித்து வெளியிடப்பட்ட பின்னூட்டமும் தங்களது பார்வைக்கு....
இது என்னோட பின்னூட்டத்தின் பகுதி:
ஏன் இவ்ளோ வெருப்ப எங்க மேல உமிழ்ரீங்க...நா ரொம்ப நாளா இந்த தளத்தில் வாசிப்பாளனா இருக்கேன்.ஆனா,வந்துட்டு வருத்ததோடதா போவேன்.என்ன காரணத்துக்காக நான் சார்ந்துள்ள மார்க்கத்தின் மீது இங்கு சாணியடிக்கப் படுகிறது.நான் கண்ட வரை அப்படி ஒன்னும் சொல்லவில்லையே.எவனொ ஒருவன்,ஏதொ ஒரு காரணத்துக்காக எனது மார்க்கத்தை முன்னிருத்துகிறானென்றால்,அதை இங்கு இவ்வளவும் படித்தவர்கள் சிந்திக்க மாட்டார்களா?என வருத்தப்படுவேன்....
ஹிந்துக்களால் செய்யப்பட்ட எத்தனையோ அநீதங்கள் முஸ்லிம்களின் முன்னிலையில் ஆரா வடுவாக இருப்பினும்,அதை என்னால் ஹிந்து தீவிர வாதம் என முட்டால் தனமாக சொல்ல தோன்றவில்லை.ஏனென்றால்,நான் என் ஹிந்து மக்களை பார்க்கிறேன்.அவர்களோடு உறவாடுகிறேன்.அவர்கள் அப்ப்டி அல்ல என எனக்கு தெரிகிறது.மாறாக இது மதவாத சக்திகள்,மதத்தை கொண்டு,கிளர்ச்சி செய்து,மக்களுக்கு மத்தியில் ஆதாயம் தேட துடிக்கும் கயவர்களின்,அரசியல் பொருக்கிகளின் செய்கை என அறிகிறேன்,செய்பவன் ஹிந்து என்ற ஒரே காரணத்திற்காக,நான் ஹிந்து மதத்தை பழிக்க எத்தனிக்க அவ்வளவு மூடனும் அல்ல.
குஜராத் சம்பவத்துக்கோ,பாபர் மசூதி இடிப்பு,அப்ரொ வந்த கலவரங்களுக்கோ, இங்க என் பக்கத்துள இருக்ர என் நண்பன நா குத்தம் சொல்ல முடியுமா?அது எவ்ளோ பெரிய பைத்தியகாரத்தனம்...
அப்டி இருக்க... இஸ்லாமிய பயங்கரவாதம் என மதத்தை முன்னிருத்தும் போது,எனது ஹிந்து சகோதரன் இயற்கையாகவே..நீங்கள்லந்தானடா?..அப்டீன்னு என்ன நோக்கி பாக்க வெக்கிரீங்களே,ஏன்...
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
இது தமிழ்ஹிந்து தளத்தில் மேலே நான் பதிந்த பின்னூட்டத்தில் சிவப்பு வண்ண எழுத்துக்கள் மட்டும் லாவகமாக நீக்கப் பட்டு,தங்களது தர்மத்தை காக்க நடந்த முயற்சியின் வெளிப்பாடாக அவர்கள் மட்டுறுத்தி பின் வெளியிடப்பட்ட பின்னூட்டம்...
படத்தை க்ளிக் செய்து பெரிதாக பார்க்கவும்..
இதையாவது ஒரு வகைக்கு ஏற்றுக் கொள்ள(முடியாது)லாம் என்றால் அடுத்து வருவது இருக்கே..எப்பா எங்கதா இத தொழில் சுத்தத்த கத்துகிடீங்களோ தெர்ல...
மூச்சுக்கு 300 தடவ சொல்ர ஹிந்து தர்மமா இருக்குமோ...இருக்காது..அப்படி நான் சொன்னா,அது நீங்க செய்ர அதே அவதூரு பிரச்சாரத்த நானும் செய்ரமாறி ஆயிடும்..எனது மார்க்கம் ஒருபோது அதை கற்றுத்தரவில்லை..வன்மையாக கண்டிக்கிறது....
இது தங்களது அயோக்கிய தனத்தின் உச்சமே...எனக்கு தெரிந்த வரை,..இன்னும் இருக்கலாம்..
சரி மேட்டருக்கு வருவோம்...
இது தமிழ்ஹிந்து தளத்தில் காசியை பற்றி சன் டீவீ வெளியிட்ட நிஜம் எனும் நிகழ்ச்சி பற்றிய கட்டுரையில் நான் பதிந்த எனது ஒரிஜினல் பின்னூட்டம்....
- - - - - - - - - - - - - - - - - -
அன்பு சகோதரர்களுக்கு.

காசியில் நடக்கும்,சில விஷயங்களை சுட்டி காட்டி,சன் டீவி,ஒரு நிகழ்ச்சியை தயாரித்து சில வாரங்களாக ஒளிபரப்பியது.இது காசியில் நடக்கும்,அரசுக்கு தெரியாத(தெரிந்த) சில தவறுகளாகும்.அதுவல்லாது அங்கு கடவுளின் பெயரால் நடக்கும் சில மூட பழக்கவழக்கங்களையும்,வேறு சில முட்டால் தனக்களையும் சுட்டி காட்டுவதாய் இருந்தது.

இதை விமர்சித்து சில ஹிந்து தளங்கள் எழுதி இருந்தன.சன் டீவியின் உண்மையான முகம் என.அவர்கள் ஹிந்து மதத்தின் புனிதத்தை கெடுத்து,அவர்கள் மததின் மீது சேறு பூசுவதாக.

சரி இருக்கட்டும்,தமிழகத்தின் முதன்மை தொலைக்காட்சி நிறுவனமாக திகலும் சன் குழுமம்,அடிப்படையில் ஹிந்து மதத்தை சார்ந்தவர்களால் நடத்தப்படுவது.இந்தியாவில் மட்டுமல்ல,உலகம் முழுவதும்,அதனை பெருவாரியாக பார்க்க கூடியவர்கள்,ஹிந்துக்களே.

இது போன்ற,ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பினால்,அதன் மூலம் கிடைக்கும் விழிப்புணர்வை காட்டிலும் எதிப்பலைகள் அதிகம்,என்பது,சராசரி மனிதனுக்கு வெளிச்சம்.அப்படி இருக்க,முதல் நிலை நிறுவனத்தை நடத்திகொண்டு இருக்கும் ஒருவர்,தான் சார்ந்து இருக்கும் மதம் பற்றியே,தவறாக நிகழ்ச்சி ஒளிபரப்புவது,எதற்கு?

அவர்கள் ஒன்றும் ஹிந்து எதிப்பாளர்கள் இல்லயே.அப்படியே இருந்தாலும்,அது அவர்களின் தொழிலை பாதிக்கும் என்பதால்,அதை அவர்கள் செய்யாது தவிர்க்கவே செய்வார்கள்.

சரி.எப்போதும் இயல்பாய் வரும் குற்றசாட்டை,எடுத்து கொள்வோம்.பணத்திற்காக??

இது இவர்களை பொருத்தமட்டில் ஒவ்வாத விவாதம்.இந்தியாவின் மிகபெரும் 20 பணக்காரர்கள் பட்டியலில் அம்ர்ந்து இருக்கும் இவர்கள்,இந்தியாவின் ஒரு பெரும் பகுதியான தமிழகத்தை ஆளும் இவர்கள்,தான் எண்ணியதை அந்த மாத்திரத்திலே செய்து முடிக்கும் பலம் பொருந்திய இவர்க்ள்,யாரிடம் போய் பணத்திற்காக நிற்கப்போகிறார்கள்.தெரியவில்லை...

அதுவல்லாது,அவர்கள் அந்த ஒரு நிகழ்ச்சிக்கு செலவிடும் அந்த தொகை அத்தனை பெரியது.அதை அவர்களே,வர்த்தக விளம்பரம் மூலம் எளிதாக பெரும் பட்சத்தில்,ஹிந்துக்களின் நிறுவனங்களே அனைத்து விளம்பரமும் தருகின்றனர்.

அப்படியிருக்க பணத்துக்காக என்ற அந்த வலுவற்ற குற்றசாட்டும் இங்கே வலுவிழக்கிறது.

இன்னொரு முக்கியமான (பைத்திய) குற்றசாட்டை முன்வைப்பர்கள்.சிருபான்மையினரை கவர் பன்ன...

ம்ம்ம் எவனோ எந்த நாட்டிலோ சிலரை கூட்டி தீவிரவாதம் செய்தான் என்பதற்காக இந்தியாவில் உள்ள மதரசாக்களை தாங்கள் ஒட்டுமொத்த,தீவிரவாத பயிற்சி கூடம் போல குற்றம் சாட்டும்,இத்தனை வீடியோ ஆதாரங்களுடன் அவ்ர்கள் காட்டும்போது,அதில் 100% அல்ல,50% மேனும் உண்மை இருக்குமென்றே தோன்றுகிறது…

இந்திய மதரசாக்களில் என்ன வன்முறை பயிற்சி நடக்கிறது என தாங்கள் சொல்லலாமே?அவர்கள்தான் பீதியில் இருக்கிறார்கள் என்கிறீர்கள்.சரி.உங்களுக்கென்ன.ஒருவேலை,காசியை தாங்கள் நம்பி இருப்பது போல,மதரசாக்களை நாங்கள் நம்பியிருந்தால் அதில் எங்களுக்கு தெளிவு பிறக்குமே.

http://www.tamilhindu.com/2009/12/kasi-nijam-true-face-of-sun-tv/
படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்..
இங்கே சிவப்பெழுத்துகளில் உள்ள எனது பின்னூட்டத்திற்கும்,அவர்கள் கைவைத்து வக்கிரம் புரிந்து,வன்புணர்ந்து வெளியிட்ட பின்னூட்டதையும் பார்த்தாலே தெரியும்..எவ்வளவு கேடுகெட்ட செயலை செய்து விட்டு..ஹிந்து தர்மம் பற்றி அதே வாயாலே...பேசுகிறார்கள் என்று...
மேலே சொன்ன அத்துனை நியாயமான காரணங்களை விடுக்க தெரிந்தவர்களுக்கு,இதையும் விட்டிருக்கலாம்.ஆனால் இவர்களின் குயுக்தி சும்மா இருக்குமா என்ன?அதனால் தான் வேலையை காட்டிவிட்டார்கள்...
நீ என்ன வேனாலும் சொல்லிட்டு போ..நாங்க இப்படித்தான் என தெளிவாக நிரூபித்து விட்டார்கள்...
ஆனால் எனது பின்னூட்டத்திற்கு பதில் தரும் ஹிந்துக்களின் பதில் எத்துனை வக்கிர சாடலாக இருந்தாலும்,,,அதை மனங்குளிர்ந்து வெளியிடுவார்கள்...
இவர்களது இந்த செயலை மக்கள் அறியவேண்டும் என்றே இதை வெளியிடுகிறேன்,,,
இவர்களது இந்த செயலை கண்ணுரும் போது...இவர்கள் சுதந்திரம் வாங்கிதந்த காந்திக்கு துப்பாக்கி குண்டை பரிசளித்த ஹிந்துத்துவா கும்பலாக இருக்குமோ என சந்தேகிக்க தோன்றுகிறது...அவர்களே இது போன்ற செய்கைக்கு முழுத்தகுதி பெற்ற கனவான்கள்..என்ன சந்தேகம் அவர்களேதான்....
நன்றி
அன்புடன்
ரஜின்

புதன், ஏப்ரல் 07, 2010

ஹிந்து பயங்கரவாதிகளின் சட்டீஸ்கர் படுகொலை...ஹிந்துக்களே பதில் சொல்லுங்கள்...

23 கருத்துகள் :
செய்திக்குறிப்பு:
நேற்று சட்டிஸ்கர் மாநிலம் தாண்டேவாடா வனப்பகுதியில் ஹிந்து பயங்கர வாதிகள் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 75 சிஆர்பிஎப் ஜவான்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ஹிந்து பயங்கர வாதிகளுக்கு தக்க பதிலடி தரப்படும் என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை படித்த உடனேயே பதிவு போட வேண்டும் என தோன்றியது..இந்தியாவில் ஹிந்து பயங்கரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்துவிட்டது....
இது தவிர கடந்த சில ஆண்டுகளில் ஹிந்து பயங்கரவாதிகளால் நாடுமுழுவதும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் அதன் பணவிரையம் குறித்த செய்தி இதோ....
ஹிந்து பயங்கரவாத தாக்குதல்கள்: 2600 பேர் பலி

ஹிந்து பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2600 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகமாக பாதிக்கப்பட்டவைகள் சட்டீஸ்கர், பீகார், ஜார்கண்டு, ஒரிசா ஆகிய மாநிலங்கள் தான்.

2006ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் வரை ஹிந்து பயங்கரவாதிகள் தாக்குதலால் சுமார் 2212 பேர் உயிரிழந்துள்ளனர்.

2006ம் ஆண்டு சட்டீஸ்கரில் ஹிந்து பயங்கரவாதிகள் நடத்திய 715 தாக்குதல்களில் சுமார் 388 பேர் பலியாகி உள்ளனர். இதே போன்று 2007ம் ஆண்டு 369 பேரும், 2008ம் ஆண்டு 242 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 180 பேர் பலியாகி உள்ளனர். இதேபோன்று ஜார்கண்டில் ஹிந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2006ம் ஆண்டு 124 பேரும், 2007ம் ஆண்டு 157 பேரும், 2008ம் ஆண்டு ‌207 பேரும் உயிரிழந்துள்ளனர்.

2009ம் ஆண்டு ஆகஸ்ட் வரை ஹிந்து பயங்கரவாதிகளால் 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹிந்து பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க சுமார் 40 ஆயிரம் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் பணியை மேம்படுத்துவதற்காக ரூ.7,300 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது

ஆதாரம்:

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18343

என இவ்வாறாக ஹிந்து பயங்கரவாதிகளால் மக்களுக்கும்,நமது நாட்டுக்கும் பாதுகாப்பின்மை உண்டாகியுள்ளது..ஹிந்து பயங்கரவாதிகளின் செயல்களால் நமது மக்களின் விலை மதிப்பில்லாத உயிர்கள் போவதோடல்லாம,அவர்களது செல்வங்கள் கொள்ளையடிக்கப் படுகின்றன..

ஹிந்து பயங்கரவாதிகளின் இந்த செயல் இந்திய அரசை எச்சரிப்பது போலவும்,எதிர்காலத்தில் அவர்கள் இந்த நாட்டையே ஆயுதம் கொண்டு ஆக்கிரமிக்கும் திட்டமும் இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது..

ஹிந்து பயங்கரவாதிகளின் ஆயுதம் அனைத்தும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்து பெறப்படுகிறது..இந்த பயங்கரவாதிகள் அனைவரும் இஸ்ரேலில் இராணுவ மையத்தில் ஆயுத பயிற்சி பெற்றவர்களாம்..

ஹிந்து பயங்கரவாதிகளுக்கெதிரான இந்தியாவின் போர் வலுப்பெறும்போது.அவர்கள்,இஸ்ரேலிடம் தஞ்சம் புகுந்து,இந்தியாவின் மீது முழு ஆயுத பலத்துடம் போர் மேற்கொள்ள திட்டம் தீட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது...

இது மேலும் இந்திய அரசை அச்சம் கொள்ள செய்துள்ளது.இது குறித்து பா.சிதம்பரம் அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.....

இந்த ஹிந்து பயங்கரவாதிகளின் ஆயுதம் அனைத்தும் அதி நவீன தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப் பட்டவை..அவை மேலும் இந்திய இராணுவத்தில் சேர்க்கப்படாத அதிநவீன ஆயுதங்கள் என தெரிய வந்துள்ளது....

நேற்றைய தினம் 6/04/2010 அன்று நடந்த தாக்குதல் கூட ஆந்திராவை சேர்ந்த 50 முதிய ஹிந்து தீவிரவாதியான சுதர்சன் என்பவனே தலைமை தாங்கி நடத்தியுள்ளான். இவன் ஆந்திராவில் உள்ள ஹிந்து தீவிரவாத இயக்கத் தலைவன் ஆவான்..

மேற்சொன்ன இந்த பயங்கரவாதிகள் அனைவரும் ஹிந்து மத்தை சேர்ந்தவர்கள்.ஹிந்து வேதங்களின் படி ஹிந்து ராஜ்யம் அமைப்பதே அவர்களின் குறிக்கோள் என அவர்கள் பிரகடன படுத்தியுள்ளார்கள்..அவர்களின் போர் முறை அனைத்தும் கீதையில் சொல்லப்பட்ட போர் சம்பந்தமான கீதாஉபச்சாரங்களாகும்..

அவர்கள் அனைவரும் தீவிர ஆயுத பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.இது போன்ற இந்தியாவுக்கு எதிரான சக்திகளை வேரருக்க அனைவரும் ஒன்றுகூடி போராட வேண்டும்..

என்னங்க...எல்லாத்தையும் படிக்க படிக்க...இவன் யாருடா லூசுமாரி எதையோ எதோடையோ சேத்து எழுதுரானேனு தோனுதுங்களா?ம்ம்..

வரிக்கு வாரி ஹிந்து பயங்கரவாதின்னு படிக்கிறது சுருக்கு சுருக்குன்னு குத்துதா?....

இவர்கள் அனைவரும் மாவோயிஸ்ட்,மற்றும் நக்சலைட்டு எனும் இயக்கத்தை சேர்ந்த ஹிந்து பயங்கரவாதிகளாம்.

(ஓ...அப்பாட நக்சலைட்களா? அப்டீன்னு பெருமூச்சு விடுரீங்களா..சரி, தொடர்ந்து படிங்க....)

என்னடா சம்பந்தமே இல்லாம ஹிந்து பயங்கரவாதின்னு சொல்ரானேன்னு....

கையில கெடச்சா நல்லா சாத்தனும் போல இருக்குங்களா?...

இந்த மாறி ஒரு செய்திய படிச்சதுக்கெ ஒங்களுக்கு ரத்தம் சூடாகி,என்ன அடிக்க தோணுதே...

சுத்த பைத்தியகாரதனம்,அவதூறு,அப்டீன்னு சொல்ல தோணூதுல்ல..ம்ம்.சரிதான்.நான் மேல் சொன்ன அத்துனை செய்திகளும் உண்மை..ஆனால் செய்தவர்கள் நக்சலைட்கள்.என்னுடைய பார்வை என்னனா....இஸ்லாத்தை பொருத்தவரை பெரும்பான்மை,மற்றும் மதவாத சக்திகளின் பார்வை.. உதாரணத்துக்கு,ஒரு ஹிந்து முஸ்லிம்க்குள்ள எதோ ஒரு தனிப்பட்ட பகை இருந்து,ரெண்டு பேரும் சண்டை போட்டு,அதுல ஹிந்து முஸ்லிம கொன்னுட்டான்ன,வேற பிரச்சனை.பட் அந்த எடத்துல ஹிந்து மட்டும் செத்துட்டான்னு வெச்சுகங்களே..முடிஞ்சது ஜோலி.. முஸ்லிம் பயங்கரவாதியால் முனியாண்டி கொடூரமாக கொல்லப் பட்டார்...அவ்ளோதா..ஹெட்லைன் நியூஸ்....

இப்படிதாங்க.தினமும் நான் சூடு போடப்படுகிறேன் இந்த பெரும்பான்மை ஊடகங்களால்...

இது மாறி இந்தியா முழுவதும் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களை அதில் ஒரு முஸ்லிம் பெயர்தாங்கி செய்யாவிட்டாலும்,இஸ்லாமிய பயங்கரவாதிகளாக இருக்கலாம்.என்பார்கள்.இல்ல அதுல எவனாச்சு முஸ்லிம் பேர் உள்ளவன் இருந்துட்டான்னா போச்சு...

அப்பட்டமாக இஸ்லாமிய பயங்கரவாதி கைது..இஸ்லாமிய பயங்கரவாதிகளின் சதி...

எங்க பாத்தாலும் "இஸ்லாமிய" இல்லாம இல்ல...

இதெல்லா என்ன இந்தியாவுல உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களோட ஏகோபித்த ஆதரவோடைய நடக்குது...ஹ்ம்ம்...எவ்வளவோ வலி மனசுல..அதா....இஸ்டத்துக்கு எழுதீட்டேன்...

எவனோ ஒரு முஸ்லிம் பேருள்ள ஒருத்தன் செஞ்சுட்டான்.செய்ரான்...சரி..அவனுக்குன்னு ஒரு இயக்கம் இருக்குள்ள அத சொல்லவேண்டிதேணய்யா?....

எங்கோ எவனோ செய்ரான்..அதுக்கு இங்க இருக்குர ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மேல சாணி அடிக்கிரீங்களே ஏன்?..

என்னுடைய மததின் பேர் நீங்கள் முன்னிருத்தி,அவன் செஞ்ச தப்புல பாதி என்னை சார்ந்ததா ஆக்குரீங்களே...ஏன்?...

எவனோ செய்ர தப்புக்கெள்ளா..தோ...இவன்கள சேந்தவந்தாண்டா நேத்து குண்டு வெச்சது..அப்டீன்னு,என்ன பாத்து மத்தவங்கள கைநீட்ட வக்கிரீங்களே ஏன்?

இவன்கள்ளா என்ன இந்திய முஸ்லிம்களுக்காக பாடுபடுரான்களா?...த்தூ...இல்லயே..இந்த நாட்ல நாங்க நல்லதான இருக்கோம்..இது எங்க நாடாச்சே...இந்த நாட்டுக்கு எதிரா நடக்குர கிளர்ச்சி,என் நாட்டோட வளர்ச்சிய பாதிக்குமே..அவன் கொல்ரவங்க எல்லா என்னோட சகோதர சகோதரிகள் ஆச்சே...

அப்படி இருக்கும் போது என்ன செறக்கிரதுக்கு இவன் எனக்காக பாடுபட போறான்.இல்ல என்ன மயித்துக்கு நா அவனுக்கு ஆதரவா இருக்க போரேன்..ஹ்ம்ம்..ரெண்டுமே இல்ல...அப்டி இருக்கும் போது ஏய்யா அவனோட என்ன சேக்குரீங்க.

ஏதோ.ஒரு அரசியல் காரணத்துக்காக,தீவிரவாதிகள் இறையூட்டி வளர்க்கப் படுகிறார்கள்...

அந்த அரசியல் காரணம் வெற்றியோ தோல்வியோ தழுவும் போது அவர்கள் அப்படியே விடப்படுகிறார்கள்.ரஷ்யாவுக்கு எதிராக தாலிபான்கள் அமேரிக்காவால் உருவாக்கப்பட்டது போல்....

அவன் ஹிந்து ஆனாலும் முஸ்லிம் ஆனாலும்,அநியாயமாக கொலை புரியும் பாதகனேயாவான்,அவனுக்கு மத அடையாளம் கொடுப்பது தவறு.

ஆனால் இங்கு நடப்பதோ..முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு எதிரான ஒருவிதமான மனரீதியான போர் என்றே சொல்லலாம்..இதை பெரும்பாலான அந்நிய சக்திகளும்,இந்தியாவில் உள்ள மதவாத சக்திகளும் திட்டமிட்டே செய்கின்றன..

உளவியல் ரீதியாக முஸ்லிம்களை பலகீனமாக்கி அவர்களை குற்ற உணர்வுள்ளவர்களாக,இரண்டாம் தர குடிமக்களாகவே வைத்து,அவர்களின் முன்னேற்றத்தை தடுத்து,வாழ வழியின்றி செய்ய நடக்கும் அப்பட்டமான சதியே இது.....

இல்லை இல்லை..ஊடகங்களான நாங்கள் இப்படித்தான் செய்வோம் என்றால்..நோக்கம் எதுவானாலும் அவன் ஹிந்து பெயர் தாங்கி என்றால் அவனை ஹிந்து பயங்கரவாதி என்று சொல்லத் துணியுமா இந்த கையாளாகாத ஊடகங்கள்....

எனது ஹிந்து சகோதரர்கள் மத்தியிலும்,மற்றவர்கள் மத்தியிலும்,,,தவறிழைக்காத என்னை குற்றவாளிக்கூண்டில் நிற்க்வைக்கும் இந்த சூட்சமம் ஏன்?

எங்களை இந்த நாட்டுமக்களிடம் இருந்து அன்னியப்படுத்தும் சதி ஏன் செய்யப்படுகிறது..

இன்று பிறக்கும்.இஸ்லாமிய குழந்தைகள் ஏன் என்றே தெரியாமல் இந்த இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற குடையின் கீழ் வலுக்கட்டாயமாக நிற்கவைக்கப்படுகிறதே...ஏன்? சரி இவ்ளோ நல்லவனாட்டம் பேசுரியே....அப்போ முஸ்லிம்கள்ல பயங்கரவாதிகளே இல்லயா? நீங்க என்ன பாத்தி கேக்கலாம்...நியாயமான கேள்வி....அதுக்கு பதில் இருக்காங்க.....ஒத்துகிறேன்...ஆனால் உலகின் எல்லா நாடுகளிலும்,இருக்கும் அரசை,ஆட்சியை எதிர்த்து,கிளர்ச்சியும்,போராட்டங்களும்,போராட்டக் குழுக்களும் இருக்கதான் செய்கிறது..அவற்றில் பெரும்பான்மை,ஏதோ ஒரு சமயம் அடிபட்டு,அநீதம் இழைக்கப் பட்டு,அதன் உரிமையை பெற போராடும் இயக்கமாக இருக்கும்.வெகுசில,வீண்கிளர்ச்சி செய்து,அரசியல் ஆதாயத்திற்காக செய்யப் படும்.இவ்வாறாக நியாயமான காரணங்களுக்காக உருவாக்கப் பட்ட இயக்கங்களும்,வரம்பு மீறி,கொலை,கொள்ளைகளின் ஈடுபட்டு,அப்பாவிகளை கொல்ல துணியும்போது.அவர்கள் யாராக இருப்பினும் பயங்கரவாதிகளே.அவன் முஸ்லிமானாலும் சரி..ஹிந்து ஆனாலும் சரி..எனது பார்வையில் பயங்கரவாதிகள்....சிலர்.... ஜார்ஜ் புஷ் - ஏரியல் ஷெரோன் - ராஜபக்சே - ஒஸாமா பின் லேடன் - விடுதலை புலிகள் - காஷ்மீர் ஆக்கிரமிப்பாளர்கள் - தாவூத் இப்ராஹிம் - பால் தாக்ரே - ஆர் எஸ் எஸ் - வி ஹெச் பி - பா ஜா க - சிலவேலை இந்திய ராணுவம் - தாலிபான்கள் - நக்சலைட்டுகள்......இன்னும் போய்கிட்டே இருக்கு....

இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட பதிவல்ல..இது என்னையும் நான் சார்ந்துள்ள மார்க்கம் பற்றியதுமான தன்னிலை விளக்க பதிவு...மற்றும் மதநல்லிணக்கம் ஏற்படுத்தும் சிறு முயற்சி....அவ்வளவே.....

எனது ஹிந்து சகோதரர்களே சிந்தியுங்கள்...பதில் சொல்லுங்கள்....

நன்றி

அன்புடன்

ரஜின்

Counter

பிற பதிவுகள்