புதன், மார்ச் 17, 2010

தூக்கில் இடப்பட்ட இந்திய அரசியல் சட்டம் - இதுக்கு நாமளும்...

தாய்- மகள் கற்பழிப்பு: போலீஸ், அரசு வக்கீல், மாவட்ட நீதிபதியின்
பொறுப்பின்மையால் குற்றவாளிகள் விடுதலை...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஒரு கிராமத்துக்கு வெளியே ஜெயராஜ் என்பவருக்கு தனியாக வீடு உள்ளது. இங்கு ஜெயராஜ் (46), அவரது மனைவி சுகந்தி (42), மகள் சாந்தி (17) மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீட்டின் ஒரு பகுதியில் ஐடிஐ மாணவர் தங்கிப் படித்து வந்தார். அப்போது சாந்தி பிளஸ்டூ மாணவியாக இருந்தார். இந்த நிலையில், கடந்த 22.11.95 அன்று அதிகாலை 2.30 மணிக்கு 8 பேர் கொண்ட கும்பல், வீட்டுக்கு வந்து வீட்டு காலிங் பெல்லை அழுத்தினர். தங்களை போலீசார் என்றும் விசாரணைக்காக வந்திருப்பதாகவும் தெரிவித்தனர். வீட்டுக் கதவை திறக்க யாரும் முன்வரவில்லை என்பதால், அவர்கள் முகமூடி அணிந்தபடி கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துவிட்டனர். உள்ளே நுழைந்த அந்தக் கும்பல் ஜெயராஜை அடித்து உதைத்தது. பின்னர் மனைவி, குழந்தைகள் முன்னிலையில் அவரை நிர்வாணமாக்கி வீட்டின் கூரையில் இருந்த மின்விசிறியை தொங்கவிடும் கொக்கியில், மனைவியின் சேலையை வைத்துக் கட்டி, ஜெயராஜை தொங்க விட்டனர். அத்தோடு நில்லாமல், அவரது கால்களையும் கட்டி அடி வயிற்றில் கட்டையால் தாக்கினர். இந்த நிலையில், சுகந்தியை 4 பேரும், மகள் சாந்தியை 4 பேரும் பிடித்துக் கொண்டனர். அடுத்த 2 சிறு குழந்தைகளையும் (ஒரு மகள், ஒரு மகன்) அறை ஒன்றில் போட்டு அடைத்தனர். ஐ.டி.ஐ. மாணவரை மற்றொரு அறையில் போட்டு அடைத்தனர். பின்னர் அந்தக் கொடூரர்கள், சுகந்தியையும், சாந்தியையும் கற்பழித்தனர். பின்னர் அவர்கள் அணிந்திருந்த நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். அரசு வக்கீல், உதவி செஷன்ஸ் நீதிபதி, காவல்துறை ஆகியோரின் குளறுபடிகளால் தற்போது கொடூரமான கற்பழிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே விடுதலையாகியுள்ளனர்.
முழு செய்தியும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...
ம்ம்ம்....இந்திய அரசியல் சட்டம்...அதன் தத்துவார்த்தமான சொல்லான "வாய்மையே வெல்லும்" இது ஒவ்வொரு நீதி மன்றங்களிலும், காவல் நிலையங்களிலும்,எழுத்தப்பட்டு இருக்கும்..எழுத்தோடு சரி...
அதுவல்லாது இன்னொரு உத்தமமான சொல்லாடலும் உண்டு..
"ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்...ஆனால் ஒரு நிரபராதியும் தண்டிக்கப் படக்கூடாது"..அடடா..இத கேட்டாலே...இன்ப தேன்வந்து பாயுது காதுல....இந்த தத்துவ??த்த எவன் சொன்னான்னு தெரியல...அவன் இருந்தான்னா?அவன் செவுள் தெரிக்கிற அளவுக்கு அறையனும் போல இருக்கு.....
அந்த முதல் லைன்லயே தெரியல பெரிய ஓட்டயவே சட்டமா உருவாக்கி இருக்காங்கன்னு... ஏண்டா?1000 "குற்றவாளி"இங்க இத கவனிக்கனும்...குற்றவாளி என்பவன் யார்...எவனோ ஒரு மனிதனுக்கு அநீதம் இழைப்பவனே குற்றவாளி...இல்லையா? அது திருட்டு,கற்பழிப்பு,கொலை, வழிப்பறி, ஏமாற்றுதல்,என எதுவானாலும்,ஒரு அப்பாவி பாதிக்கப்படுகிறான்...அதனால் அந்த அநீதம் இழைக்கப்பட்டவனுக்கு,கிடைக்கும் ஒரே நிவாரணம்.தனக்கு அநீதம் இழைத்தவன், தண்டனைக்குள்ளாக்கப்பட்டான்.என்பதே..அவன் இழந்ததை நிச்சயமாக ஈடுசெய்ய முடியாது.. அப்படிப்பட்ட,இந்த "1000 குற்றவாளிகள்"எளிதாக தப்பிக்கலாம்....அல்லது தப்பிக்கிறார்கள்,என்றால் என்ன அர்த்தம்..அவர்களால் அநீதம் இழைக்கப் பட்ட 1000 நிரபராதிகளும் தண்டிக்கப் படுகிறார்கள் என்பதே...
தண்டனை என்பது என்ன? இங்கே சில மதவாதிகளும், அரசியல்வாதிகளும், இன்ன பிற சமூக விரோதிகளும்,செல்போன்,வீட்டு சாப்பாடு,என சகலமுடன் சொகுசாக ஜெயில் வாழ்க்கை அனுபவிக்கிறார்களே,அதுவா...இல்லை..இல்லவே இல்லை....
பாதிக்கப் பட்டவனின் குறைந்த பட்ச நிவாரணமான,குற்றவாளிக்கு தண்டனை என்பதே,அங்கு தவிடு பொடியாக்கப் படும் போது...அந்த மனிதனுக்கு,இந்திய அரசியல் சாசன சட்டத்தின் மீதான நம்பிக்கை தகர்ந்து,தனது மீதி வாழ்நாளை, ஒருவித விரக்தியுடன்,வலியுடன் கழிக்கிரானே..அதை விட ஒரு பெரிய தண்டனை யார் தர முடியும்...
பொதுவாக ஒரு சொல்லாடல் உண்டு.."குற்றம் செய்து அதை உணர்ந்தவனை தண்டிப்பதை விட மன்னிப்பதே பெரிய தண்டனையாக அமையும்" என்று.இதன் பொருள் என்ன,உடல் அளவில் தரப்படும் தண்டனையை விட மனதளவில் ஒருவன் துயருறுவது பெரியது என்பதே..
அப்படி இருக்க இந்த முதல் வாசகம் முற்றிலும் பொய்க்கிறது...ஆயிரம் குற்றவாளி அல்ல ஒரு குற்றவாளியும் தப்பிக்க கூடாது.என்பதே ஒரு நிரபராதியும் தண்டிக்கப் படாமல் இருக்க சரியான தீர்வு...
எனவே இங்கு குற்றம் இழைத்த கயவர்கள் 8 பேரும்,மேல் முறையீடு,என கோரி,அங்கு இருந்த ஒரு பைத்தியக்கார - (தனிக்கை செய்யப்பட்ட வார்த்தை) - நீதிபதி?? ஒருவன் இந்த வழக்கில் அதன் தீர்ப்பை திருத்தி எழுதி,8 குற்றவாளிகளை விடுவித்து,அந்த மொத்த குடுமபத்தையும் தீரா துயரில் தள்ளி,மாறா வடுவாக அவர்கள் வாழும் காலமெல்லாம்,சொல்லி அழ,அருமையான தண்டனையை தந்து,இந்திய அரசியல் சாசன சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.- (வார்த்தை தனிக்கை செய்யப் பட்டுள்ளது) - ங்க...
இபோ அந்த பெண் திருமணம் ஆகி மகிழ்ச்சியாக?? இருக்கிறாளாம்...என்பதை அவர் கேள்விப்பட்டாராம்...அந்த (திரும்ப ஒரு முறை தனிக்கை செய்யப்பட்ட வார்த்தை) நீதிபதி...அதனால் இந்த வழக்கில் மறுவிசாரணை என்ற எண்ணத்தை கைவிட்டு விட்டாராம்...
ஏண்டா கேள்விப்பட்ட,ஒரு செய்தியை கொண்டு...ஒரு முடிவுக்கு வருபவன், நீயெல்லா நீதிபதின்னா?..தெருவோரமா பிச்சை எடுக்கிர பைத்தியக்காரனுக்கு உள்ள குறைந்த பட்ச அறிவுகூட உனகில்லயே...இவன்லா எப்டி நீதிபதி ஆன???..ம்ம் அதுக்கும் இந்திய அரசியல் சட்டத்துல வழி இருக்குமா இருக்கும்...யார் இந்த எழவைலா கண்டது...
ம்ம்..இன்னொரு பக்கம் பாத்தா இந்த பைத்தியக்காரன் சொன்னதுலையும்,ஒரு மேட்டர் கவனிக்கலா,அது என்னானா?
இதுவேர கற்பழிப்பு கேசா பொச்சா?,வாதாடுர வக்கீல் எல்லா சேந்து,நடு கோர்ட்ல வச்சே,,குறுக்கு விசாரணை'ங்ர பேரல இன்னும் பல தடவ அந்த அபலைகள கற்பழிச்சுடுவானுங்க....அது இலலாத வரைக்கும்,கடுகளவு சந்தோஷமே....
இங்கன்னு இல்ல,குற்றம் சாட்டப்படும் எந்த ஒரு வழக்கிலும்,பாதிக்க்ப் பட்டவரும்,சாட்சி சொல்பவருமே...அதிகம் மன உளைச்சலும்,கஷ்டமும்,சந்திக்கிறார்..கேட்டா விசாரண பண்ராங்களாம்..ஏண்டா (வார்த்தை தனிக்கை செய்யப்படுகிறது) தப்பு பண்ணுனவன் எத்துனையோ வழக்குகள்ல,திருவண்ணாமலை தீபம் மாரி தெளிவா தெரிஞ்சாலும்...பாவம்,இந்த அப்பாவிங்கள ஏண்டா சாகடிகிரீங்க...அப்ரோ எவண்டா வந்து கம்ப்ளைண்ட் கொடுப்பான்,எவண்டா வந்து சாட்சி சொல்லுவா?ம்ம்...
இதுனால தானடா,,ஆக்ஸிடண்ட் ஆகி நடு ரோட்ல செத்துகிட்டு இருக்குரவனையும் பாத்துட்டு,ஒருத்தன் அத கடந்து போரான்னா?என்ன காரணம்...என்ன நம்ம நாட்டு மக்களுக்கு ஈவு இறக்கம் இல்லன்ன....ஹ்ம்ம்....இன்னக்கி இவன காப்பாத்தீட்டு,நாளைக்கு நாம சாகனுமேன்னுதா....
அந்த பொண்ணு சந்தோஷமா இருக்காளாம்..சரி,இவ்வளவு பிரச்சனைக்கு பின்னும்,அவ ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ரான்னா,முதல்ல அதுக்கு காரணமான அவளுடைய கணவன்,என்னிடத்தில் பெரும் மதிப்பிற்குறியவனாகிறான்.. அடுத்து அவளது தைரியம் போற்றுதளுக்குறியது..அதை எல்லாம் கடந்து..அந்த சம்பவம் ஏற்படுத்திய தாக்கம் உள்மனதில் இருக்கவே செய்யும்..அதன் ரணமும் ஆறாமல் இருக்கும்..இவர்களுக்கு தரப்படும் இந்த தண்டனையே அவர்களுக்கு,குறைந்த பட்ச மருந்தாக அமையும்...அதை இந்த காட்டெரும நீதிபதி ஏன் சிந்திக்கல?ம்ம்ம்...
சரி இப்டி காரணம் காட்டி இவன்கள விடுதல பண்ரோமே...நாளைக்கு,,இதுவே இவன்களுக்கு,மேலும் தைரியத்தையும் ஊக்கத்தையும்,தராதுன்னு என்ன நிச்சயம்??.இதென்ன கேள்வி..அது அவர்களுக்கு மிகுதியாகவே செய்யும்..ஐயமின்றி...
இது இன்னும் பல இது போன்ற குற்றவாளிகளையும்,,,ஊக்குவிக்கவே செய்யும்.."எப்புடியும் தப்புச்சிடலாம்"அப்டீங்ர எண்ணம் வளருமே...இது மேலும் பல வழக்குகளில் உதாரணமாக எடுத்து வதாடப்படுமே.... இதுனால...குற்றவாளிகளுக்கே பயன் அன்றி மக்களுக்கல்ல....அது அபாயகரமானதும் கூட....
அது மட்டும் இல்லாம,நம்ம இந்திய சட்டத்துல (மத்த நாட்ல இருக்கான்னு தெரியல)..அடிக்கடி கேட்கும் ஒரு வார்த்தை "மேல் முறையீடு"....இதோட அர்த்தம் புரியவே இல்ல....
பென்ச் நீதிமன்றம்,துணை நீதிமன்றம்,உயர் நீதிமன்றம்,உச்ச்ச்ச்ச நீதிமன்றம், (இன்னும் நெரையா இருக்கு,எழவு எனக்குத்தா தெர்ல)என இதனை நீதி மன்றங்கள் ஏன் இருக்குன்னு எனக்கு புரியவே இல்ல.ஒரு நீதி மன்றத்தின் தீர்ப்பு,இன்னொரு நீதி மன்றத்தில் உடைக்கப் படுகிறது...
சரி அப்படி அந்த தண்டனை உடைக்கப் படும்போது,ஒன்று,ஒரு நிரபராதி விடுவிக்கவோ, தண்டிக்கவோ படலாம்,அல்லது ஒரு குற்றவாளி விடுவிக்கவோ, தண்டிக்கவோ படலாம்..இது இரண்டே சாத்தியம்..அப்படி,கீழ் கோர்ட்டில் சொல்லப் பட்ட ஒரு தீர்ப்பு,தகர்க்கப் படுகிறதென்றால்.அங்கு அந்த விசாரணை,முழுமைப் படவில்லை.அங்கு வழங்கப்பட்ட நீதி தவறானது என்பதை செவுட்ட அறஞ்ச மாதிரி,மேல் கோர்ட் தீர்ப்பு,தீர்ப்பு சொல்லுது...இல்லயா?
அப்பரோ என்ன செறக்கிறதுக்கு,இந்த கீழ் கோர்ட்ல ஒரு வழக்கு,ஒரு விசாரணை,வக்க்க்கீலு, நீதி??பதி...சம்பளம்,மயிறு இந்த மட்டை எல்லா?.....எவனா இருந்தாலும்,கீழ் கோர்ட் சொன்ன தீர்ப்ப மேல் முறையீடு பண்ணலாம்னா?அப்ரோ என்ன மசுறுக்கு அதெல்லா இருக்கு....
நானறிந்த நடுநிலை நீதிமன்றம்:
மேல் சொன்ன இந்த முறை முற்றிலும் தவறானது...ஒரே கோர்ட்,(அப்டீன்னா ஒரே ஒரு கோர்ட் இல்ல,சென்னை உயர்நீதிமன்ற கிளை,மதுரையான எங்க ஊர்ல இருக்குல்ல அதுமாரி.தேவையான அளவு.)ஒரே,தெளிவான நடுநிலையான,தாமதம் இல்லாத,முறையான விசாரணை...ஒரே தீர்ப்பு...ஒரே தண்டணை....அது பாரபட்சமில்லாத இறுதியான கடுமையான தண்டணையாக இருக்க வேண்டும்.
மேல் முறையீடு,மறுவிசாரணை என இருப்பின் அதே கோர்ட்டில்,அதே நீதிபதி முன்னிலையில்,மற்றொரு நீதிபதி கொண்டு நடத்தப்பட வேண்டும்...இந்த வழக்கின் முந்தைய தீர்ப்பு தவறெனில்,,,அது தவறாக அமைய காரணமானவர்கள்,(காவல் துறை,சாட்சிகள்,வக்கீல்கள்,)வன்மையாக தண்டிக்கப் படவேண்டும்...நீதிபதியாயின்..மிக கடுமையான தண்டனை...அதை வழங்க,எந்த தலையீடும் இல்லாத தன்னிச்சையாக செயல்படும் குழு ஒன்றும் இருக்க வேண்டும்...
இதில் நான் வலியுருத்தும் ஒரு விஷயம் என்ன வென்றால்
"தண்டனைகள் கடுமையானால் தான் தப்புகள் குறையும்"என்பதே...இது 100% சரியானது கூட.இதை 99 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்...இது முக்கியமாக,இஸ்லாமிய சட்டமான கண்ணுக்கு கண்,பல்லுக்கு பல்,கற்பழிப்பு,கொலை செய்தவனுக்கு,மரண தண்டனை இன்னும் பல.போன்றவை...
(நான் ஒரு முஸ்லிம் என்பதால் இதை ஆதரிக்கிறேன்,என்பதல்ல.குற்றங்கள் குறைய,குற்றவாளிகள் முறையாக தண்டிக்கப்பட இதைவிட முறையான சட்டம் இருந்தால் சொல்லுங்கள்)
இந்த சட்டங்கள் கடுமையாக இருப்பினும்.அது பார்ப்பவனை தவறு செய்வதில் இருந்து தடுக்கிறது...கற்பழித்தால் தலை போய்விடும் என்ற எண்ணம் இருந்தால்..எவனுக்கு அந்த எண்ணம் தோன்றும்???...
இதை வெளியில் இருந்து பார்க்கும் ஒருவனுக்கு,மரண தண்டனை பெரிதாகவே தோன்றும்..நாளை தான் பாதிக்கப் படும் போது அதை உணர தலைப்படும்..
இந்த வழக்கை பொருத்தவரை,இந்த இரு பெண்கள் கற்பழிக்கப் படவில்லை...இந்த வழக்கை கையாண்ட நீதிபதி தலைமையில்,சகலரும் சேர்ந்து,நீதிமன்றத்திலே, பொதுமக்கள் முன்னிலையில் நீதி தேவதையை மாறி மாறி கொடூரமாக வன்புணர்ச்சி செய்துள்ளார்கள் என்பதே....எனது கருத்து.........
நன்றி
அன்புடன்
ரஜின்...
பின் குறிப்பு:
தவிர்க்க முடியாத காரணத்தால் தகாத வார்த்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு தணிக்கை செய்யப் பட்டுள்ளது.

1 கருத்து :

  1. சிறந்த பதிவு,
    இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடப்பதாகக்கூறி நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம்...

    பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்