திங்கள், அக்டோபர் 17, 2011

தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!

18 கருத்துகள் :

அஸ்ஸலாமு அலைக்கும் அருமை சகோதர சகோதரிகளே!

சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக! என்பதான பொருள் கொண்ட மேற்சொன்ன இந்த முகமன் இஸ்லாமியர்கள்,இன்று நேற்றல்ல இஸ்லாம் தோன்றிய காலம் தொட்டே பயன்படுத்தி வருவது பாமரரும் அறிந்த ஒன்று.தமிழ்மண திரட்டியின் நிர்வாகிகளுல் ஒருவரான ரமணிதரன்,இந்த முக்கியத்துவம் வாய்ந்த இஸ்லாமிய முகமனை தனது சுதந்திர பேச்சுரிமையால்,மிக மிக அற்பமாக,கேவலமாக விமர்சித்து இருக்கிறார்.

டெரர்கும்மி எனும் தளத்தில் வெளியிடப்பட்ட தமிழ்மணத்தின் சுயரூப டேட்டாவை மறுதலிக்க வந்த இந்த பெயரிலி நிர்வாகி,போகிர போக்கில் புளியமரத்தில் கல்லெறிந்த கதையாக இஸ்லாமியர்கள் மீது ஒரு கல்வீசி விட்டு போய் இருக்கிறார்..எவ்வித முகாந்திரமும் இல்லாமல்,..இவ்வாராக...

//சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்//

ரமணிதரனின் இந்தக்கருத்து இஸ்லாமிய முகமனை கேலிசெய்வதாக மட்டும் இல்லாமல் அது வக்கிரமான விமர்சனமாகவும் இருக்கிறது. பொதுவாகவே பெயரிலியாக வரும் இவரது போக்கு எல்லாரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும், குறிப்பிட்ட மதம் சார்ந்த ஒரு அசூசையான இவரது சாடல் இஸ்லாமியர்களை மட்டுமல்ல பொதுவாக எல்லோர் மனதிலும் ஒருவித விகல்ப்ப உணர்வை தமிழ்மணத்தின் மீது கொடுத்திருக்கிறது.

சீ...பெரியமனுஷனாயா  நீயெல்லா,..இது பதிவு தோஷமா இல்ல பழக்க தோஷமா??? முதலில் இது எனது மார்க்கம் சார்ந்த சொல்லை பழித்தாய் என பார்த்தால், அதன் ஊடாக சாந்தி என்றால் அமைதி என பொருள்படும் வார்த்தையை பெண்ணாக கற்பனை செய்து..அதற்கு வக்கிர முலாம் பூசி..இதை விட கேவலமாக ஒருவனால் பேசிவிட முடியாது.. சீ
 
இது ஒருபுறமென்றால்.அதற்கு உரியமுறையில் விளக்கம் கேட்க..அது தனது பேச்சு சுதந்திரம் எனவும்.இன்னும்

//சொன்னதற்கு மன்னிப்புக் கேள்" என்று தமிழ்த்திசைச்சொற்களுக்கு உரிமம் வைத்திருப்பதுபோல, கும்மும் அடுத்த குழு தவிர;  //

என அனைவரும் அவரவர் பயன்பாட்டு சொற்களுக்கு உரிமம் வைத்துதான் கண்டனம் தெரிவிப்பது போலவும் உளறி இருப்பது திமிரில் விளைந்த தடித்த வார்த்தையே அன்றி வேரல்ல...இது இவர்களது பேச்சு சுதந்திரமோ.!!!!.. ஒருவனது சுதந்திரம் அடுத்தவனது மூக்கின் நுனிவரை என்பதை இவர்கள் அறியவில்லை போலும்..இப்படிப்பட்ட இவர்களது பேச்சு சுதந்திரம்சாமி சரணத்தில் வந்து பார்க்கட்டுமே...! அதுகூட யாருடைய தனியுரிமை வார்த்தையல்ல.. அப்போது எழும் நியாயமான கேள்விகள்,அதற்கு தெனவெடுத்த இதுமாதிரியான பதில்கள்.. இவர்களின் பருப்பை வேகவைக்குமா என பார்ப்போம்?

வலைஞர்கள் மத்தியில் மிகபிரபல்யமான ஒன்றாக கருதப்படும் தமிழ்மணம் திரட்டி, தடம்மாறுவது உணரப்படுகிறது. சமீபகால செயல்பாடுகள் ஒரு சார்புடையதாகவும், வருத்தமளிப்பதாகவும் இருக்கிறது.மதரீதியான தளங்களை தணிக்கை செய்வதாக எண்ணிக் கொண்டு அதை கட்டணபதிவுகளின் கீழ் கொண்டுவந்து, பொதுவான பதிவுகளுக்கு மத்தியில் மதரீதியான பதிவுகளை கொடுப்பவர்களையும் அந்த வரிசையின் கீழ் கொண்டுவது அவர்களின் பதிவுகளை திரட்ட மறுக்கிறது.அதே நேரம் மதங்களை திட்டி தீர்ப்பதையே முழுநேர ஊழியமாக செய்யும் தளங்களையும் அவர்களது பதிவுகளையும் தாராளமாக வரவேற்பது முழுமையான முரண்பாடாக இருக்கிறது.இதில் குறிப்பாக இஸ்லாமிய பதிவுகள் திரட்டப்படாமல் புறக்கணிக்கப் பட்டதில் இருந்து இது குறிப்பிட்ட மதத்தினரையும்,அவர்களது கருத்துக்களை முடக்குவதற்கும் செய்யப்பட்ட சூத்திரமாகப் படுகிறது.
தமிழ்மணம் மட்டுமே திரட்டி போலவும்,அது இல்லாவிட்டால் பதிவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை என்பதான குருட்டுக்கனவின் வெளிப்பாடே இத்தகைய செயல்பாடுகள்.

புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பிற்கு நன்றி என பஞ்ச் டயலாக் விடுபவர்கள், முதலில் பிறரை புரிந்துணர்ந்து ஒத்துழைக்க தயாராக இருக்க வேண்டியது அவசியம் இல்லையா???

இறுதியாக,இஸ்லாமிய முகமனை கேலிக்கூத்தாக்கி வக்கிரமாக விமர்சித்த தமிழ்மண நிர்வாகி ரமணிதரன் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோர வேண்டும். அவருக்கு வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

இன்னும் இவரது பேச்சு முஸ்லிம்களை இப்போது தீண்டி இருக்கிறது.. ஆனால் சமீபமாகவே பல மாற்றுமத சகோதரர்களை தீண்டி அவர்கள் கண்டித்து.அதற்கு இவர் வசைபாடிவருவது நடந்து கொண்டுதான் இருக்கிறது..எனது அருமை சகோதரர்களின் சார்பாகவும் இவருக்கு எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

தமிழ்மணம்பார்க்க
தமிழ்மணம்ன்னா என்ன? என்று கேட்பவர்கள் - பார்க்க
டெரர்கும்மி தளம் - பார்க்க




இவ்வளவையும் பார்க்கும்போது தமிழ்மணம் மணக்கவில்லை..நெடியாகி குமட்டத்தான் செய்கிறது...


அன்புடன்
ரஜின்

ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

இதை விட சிறந்ததைச் சொல்லுங்களேன்!!! பகுதி - 01

1 கருத்து :


இஸ்லாம்!...தாங்க அந்த இது!...ஹ்ம்ம் திரும்பவும் ஆரம்புச்சுட்டானுங்கடா,இவன்களோட சுயபுராணத்தை,அப்டீன்னு நெனைக்கிறீங்க...தெரியுது...இது ஏதோ இஸ்லாத்தை உயர்த்திப் பிடிக்கும் நோக்கத்தில் மற்றவற்றை காலில் போடுவது அல்ல.
நான் சார்ந்திருக்கும் மார்க்கத்தில் இன்னன்ன நல்ல விஷயங்கள் இருக்கு,அதுபோலவோ, அல்லது அதைவிட சிறந்த கொள்கைகளோ இருந்தால் சொல்லுங்கள், என்பதுதானே ஒழிய வேறொன்னும் இல்லை...

திங்கள், ஆகஸ்ட் 29, 2011

பெருநாள் சிந்தனை!!! (ஆண்களின் ஆடை)

5 கருத்துகள் :


அஸ்ஸலாமு அலைக்கும் அருமைச் சகோதர சகோதரிகளே!

இனிய ரமலானில் கடைசிப்பத்தை கடந்து ,அத்துடன் முப்பது நாள் நோன்பின் கூலியான பெரும் மகிழ்ச்சிக்குரிய பெருநாளை எதிர்நோக்கி காத்திருக்கும் முஸ்லிம்/முஸ்லிமல்லாத அனைத்து உள்ளங்களுக்கும்,இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்தவனாக பெருநாள் சிந்தனைப்பதிவை உங்களுக்கு கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்!..


இஸ்லாமிய மக்கள் எல்லாரும் இந்நேரம் தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் பெருநாள் ட்ரெஸ் எடுத்திருப்பீர்கள்..ஆண் பெண் குழந்தைகள்,பெரியவர்கள் என அனைவருக்கும் பாரபட்சமின்றி செலவு செய்து ஆடைகளை வாங்கி இருப்போம்..மகிழ்ச்சி!..

புதன், ஆகஸ்ட் 24, 2011

முகமதியர்களையும்,கிறிஸ்தவர்களையும் தாய்மதம் திரும்ப(மதமாற்றம்) செய்யுங்கள்!!!

37 கருத்துகள் :


முகமதியர்களையும்,கிறிஸ்தவர்களையும் தாய்மதம் திரும்ப (மதமாற்றம்)  செய்யுங்கள்!!! என தமிழ் ஹிந்துவில் மலர்மன்னன் ஹிந்து(துவா)க்களுக்கு அரைகூவல் விடுத்திருக்கிறார்,,,

மதமாற்றம் என்பதே தவறு.தடைச்சட்டம் வேண்டும் என கொக்கரித்தவர்கள்,அதற்கு எதிராக ஆர்ப்பரித்து முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் சாடி வந்த இவர்கள்..இப்போது மதமாற்றம் செய்ய இறங்கி விட்டார்கள்...எதற்கு தங்களின் மதத்தை காக்கவா? இல்லை..பிற மதங்களை அழிக்க..(மனப்பால் குடிக்க வேண்டியதுதான்) இவர்கள் ஹிந்துமத கொள்கைகளை சொல்லி மதமாற்றம் செய்யமாட்டார்கலாம்.:( ஏன்னா புரியாதாம்.:( தவறாக புரிந்து கொள்வார்களாம்.:( அதனால்,இஸ்லாம் கிறிஸ்தவத்தில் உள்ள ஓட்டைகளை சொல்லி மாற்றப்போகிறார்களாம்!!!:)

//கீதையை அவர் படித்தால் அவரால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது, எல்லாம் தவறாகவே தோன்றும், நுட்பமான ஹிந்து சமயக் கோட்பாடுகளை இப்போது புரிய வைக்க முடியாது என்று சொன்னேன்// 
//கிறிஸ்தவ ஆலயங்களிலும் மசூதிகளிலும் ஆட்டு மந்தைகளைப் போல மக்கள் உட்கார வைக்கப்பட்டு போதகர்களால் சமூகப் பிரச்சினைகளில் இன்னவாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்படுவதுபோல் ஹிந்து ஆலயங்களில் நடைபெறுவ தில்லை என்று எடுத்துக் கூறுகிறேன்.//

//ஹிந்து சமூகச் சட்டங்களில் காலத்திற்கு ஏற்ற விதிகளை நடைமுறைக்குக் கொண்டு வருவது மிகவும் எளிதாகவே உள்ளது,//

இந்த ஈயப்புச்சுக்கு என்னால் கடுமையான விமர்சனங்களை வைக்க முடியும்.ஆனால் இந்த கட்டுரையின் பேசுபொருள் இதுவல்ல.."தேவைபட்டால் " இன்னொரு இடத்தில் பார்ப்போம்.
//ஹிந்துக்களை மத மாற்றம் செய்வது எளிதாக இருக்கிறது ஆனால் கிறிஸ்தவர்களையும் முகமதியரையும் தாய் மதம் திரும்பச்(மதமாற்றம்) செய்வது எளிதாக இல்லை. அவர்களால் முடிவது நம்மால் ஏன் முடிவதில்லை என்று யோசிக்க வேண்டும்.
நம்மாலும் முடியும் என்ற திட சங்கற்பத்துடன் முயற்சி செய்தால் முடியும் என்பதை உணர வேண்டும். ஹிந்துக்கள் ம்தம் மாறுவதைத் தடுப்பதில் ஒரு அணியினரும் மாற்றுச் சமயம் தழுவிய ஹிந்துக்களைத் தாய் மதம் திரும்பச் செய்வதில் இன்னொரு அணியினருமாகப் பணியைப் பகிர்ந்துகொண்டு இதில் இறங்க வேண்டும்.
தாய் மதம் திருமபச் (மதமாற்றம்) செய்தலை ஓர் இயக்கமாகவே தீவிரமாக நடத்தத் தொடங்கினால் அதைக் கண்டு ஏற்படும் மிரட்சியின் காரணமாகவே மத மாற்ற முயற்சிகள் பெருமளவு குறைந்து விடும். - மலர்மன்னன்//

செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

நோன்பும்,சில சுவாரஸ்ய நினைவுகளும்!!!

26 கருத்துகள் :

அஸ்ஸலாமு அலைக்கும் அருமைச்சகோதர சகோதரிகளே! இனிய ரமலானை களிப்புடன் கழித்துக்கொண்டிருக்கும் நம் அனைவரின்  மீதும்,மற்றும் இவ்வுலக மக்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

இந்த இனிய ரமலானில்,நோன்பு குறித்த எனது அனுபவங்களையும்,எனது ஊர் பழக்கங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பாக கொள்கிறேன்.இது என்னை அன்புடன் தொடர்பதிவுக்கு அழைத்து,நான் எழுதாததால்,உரிமையுடன் கோபித்துக்கொண்ட எனதருமை சகோதரியையும் திருப்திபடுத்துமாயிருக்கும்..இன்ஷா அல்லாஹ்.

முதலில் ஊர்.அடியேன் ”இராம்நாட் அல்ல,இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் எனும் ஊரை சொந்த ஊராகக் கொண்டவன்.முஸ்லிம்கள் அதிகம்.அதே அளவு ஹிந்து சகோதரர்களும் இருக்கிறார்கள்..

எங்க ஊர் நான்கு பள்ளிகளை தன்னகத்தே கொண்டது..ஊர் பெரிய பள்ளிவாசல்,எனக்கு தெரிந்து சுற்றுவட்டாரத்தில் இத்தனை பெரிய இரட்டை மனரா(Tower??) உள்ள பள்ளி இதுவாகத்தான் இருக்கும்.நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னே கட்டப்பட்டது.அடுத்து ஊரணிப்பள்ளி,இது ஊரில் உள்ள ஊரணிக்கரையோரம் இருப்பதால் அதுவே பெயர்காரணம் ஆனது.அடுத்தது கீழப்பள்ளி(எங்க ஜமாத்),இது ஊரின் கிழக்கு திசையில் இருப்பதால் இதுவும் காரணப்பெயர் தான்.அடுத்தது வடக்குப்பள்ளி.ஸேம்.வடக்கு திசையில் இருப்பதால் வந்த பெயர் அது..

ஞாயிறு, ஜூலை 31, 2011

இனிய ரமலான்!!!

7 கருத்துகள் :

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (திருக்குர்ஆன் 2:183)


இனிய ரமலான்!!!’...
அஸ்ஸலாமு அலைக்கும் அருமைச் சகோதர சகோதரிகளே...இதோ ரமலான் எனும் அருள்வளம் பொருந்தியதொரு மாதம் நம்மை அடைந்திருக்கும் நிலையில் உங்கள் அனைவருடனும் உரையாடுவதில்,எனது உள்ளக்கிடக்கை பகிர்ந்துகொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்...

Counter

பிற பதிவுகள்