செவ்வாய், மே 08, 2012

ஆல்கஹால் கலந்த வாசனைத்திரவியம் ஆகுமானதா???

6 கருத்துகள் :
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின்  சகோதர சகோதரிகளே!
வாசனைத்திரவியம் (PERFUME) - இதை நம்மில் விரும்பாதோர் யாரும் இருக்கமுடியாது.சிலருக்கு சில மணம் பிடிக்கலாம்,அல்லது பிடிக்காது போகலாம்,ஆனால் ஏதாவது ஒரு மணத்தில் மனங்கொள்ளாத மனிதன் இருக்கவே முடியாது. அப்படிப்பட்ட வாசனையை அள்ளிக்கொடுக்கும் திரவியத்தில், முஸ்லிம்களில் சிலருக்கு சில சங்கடங்கள் இருப்பதை உணரமுடிகிறது. அதாவது ஆல்கஹால். இது போதைப்பொருளாயிற்றே... அது கலந்திருக்கும் இந்த திரவியத்தை பயன்படுத்தலாமா? என்று.. என்னப்பா இதெல்லா ஒரு விஷயமா? என்ன அத ஒடச்சு வாயிலயா ஊத்துரீங்க.. போதை வர்ரதுக்கு எனும் கேள்வியோடு, படிப்பவர்கள் எம்மை எதிர்நோக்கலாம்... ம்ம்..


இந்தக் கேள்வியின் ஆதி இஸ்லாத்துடன் இழைகிறது... ஒரு பொருள் குறித்து, ஒரு தடையோ, சட்டமோ இருக்க...அப்பொருள் சார்ந்த பிற பொருட்களும் தடைசெய்யப்பட்டவையா அல்லது அனுமதிக்கப்பட்டவையா? என கேள்வி எழுப்புவதும்,அதை தெளிவுபடுத்திக்கொள்வதும் முஸ்லிம்களுக்கு அவசியமான ஒன்றுதான். இந்தக் கேள்வியும், பயன்படுத்தலாமா? என்ற அச்ச நிலையும் யாரைக்குறித்தும் வருவதில்லை..நம்மைப் படைத்த இறைவன்  இது தொடர்பான ஒன்றை தடைவிதித்திருக்க நாம் அறியாமல் அதைப் பயன்படுத்தி அவனுக்கு மாறு செய்துவிடக்கூடாதே என்பதால்தான்... இறை பக்தி, இறை அச்சத்தால்தான்...


சரி விஷயத்துக்கு வருவோம்!

வியாழன், மே 03, 2012

நித்தியாநந்தர்களை மக்கல் விரும்புகிறார்களா !?!

5 கருத்துகள் :
இந்தப்பதிவு யார் மனதையும் புண்படுத்தும்பதிவு அல்ல...சமீப வலையுலக அவதானிப்புக்களின் வெளிப்பாடு..அவ்வளவே!!!

என ஆரம்பித்த இந்தப்பதிவு..வலையில் வரம்பு மீறி முஸ்லிம்களையும், அவர்கள் சார்ந்திருக்கும் இஸ்லாமிய மார்க்கத்தையும் விமர்சிக்கும் சில பதிவர்களை விமர்சித்து எழுதியதே...

சமீபமாக இஸ்லாமும்,முஸ்லிம்களும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். எங்களின் பெருமதிப்பிற்குரிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதான விமர்சனங்களும், அவதூருகளும், ஆபாச பேச்சுக்களும் ஏச்சுக்களும் எக்கச்சக்கம்...

அதன் வெளிப்பாடாகவே அப்படி வரம்பு மீறி,விமர்சித்தவர்களை, விமர்சிக்கும் வண்ணம் எழுதப்பட்டது இந்தப்பதிவு..

இது நித்தியாநந்தர் எனும் தனிமனிதரையோ,அல்லது அவர்களது நம்பிக்கையையோ கிண்டல் செய்து எழுதப்படவில்லை....

இதுவரையும் இப்படி கேளிசெய்யும் விமர்சனப்பதிவுகள் இந்தத்தளத்தில் வெளிவந்ததில்லை...அதில் நமக்கு உடன்பாடும் இல்லை...இருந்தாலும் சிலவேலைகளில் ந்ம்மையும், அவர்களின் தரங்கெட்ட விமர்சனங்கள் உரசிப்பார்ப்பதை தவிர்க்கமுடிவதில்லை...

அதன்விளைவாக வெளியிடப்பட்ட இக்கட்டுரை..சகோதர முஸ்லிம்களின் அறிவுறுத்தல் காரணமாகவும்,இஸ்லாம் வலியுறுத்தும் மாண்பை காக்கும் பொருட்டும் நீக்கப்படுகிறது...

பிற மத தெய்வங்களை திட்டாதீர்கள்..6:108

முஃமீன்களே ஒரு சமூகத்தார் பிரிதொரு சமூகத்தாரை பரிகாசம் செய்யவேண்டாம்.ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்.அவ்வாறே எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்யவேண்டாம்).ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்.இன்னும் உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக்கொள்ளாதீர்கள்.இன்னும் (உங்களில்) ஒருவரை ஒருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்.ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய ) பட்டப்பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்.எவர்கள் அவற்றிலிருந்து மீளவில்லையோ,அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவர். 49:11

இப்படியான வேதவரிகளையும்,எங்கள் தூதர் மொழிகளையும், நினைவிற்கொண்டவர்களாக,இவற்றை தனதாக்கிக் கொண்ட நாங்கள் உண்மை முஸ்லிம்களாகவும்,இஸ்லாத்தின் மாண்பை காப்பவர்களாகவும், விமர்சனங்களுக்கு கடைசிவரையிலும் அழகிய முறையில் விளக்கம் அளிப்பவர்களாகவும் இருந்துவிட்டுப் போகிறோம்...

அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்..தீர்க்கமான அறிவுடையவன்...


அன்புடன்
ரஜின்

புதன், மே 02, 2012

அல் குர்ஆன் 2:178 - கொலைக்கு தீர்வு - கொலையா ??

3 கருத்துகள் :

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே!

இந்தப்பதிவானது அல்குர்ஆன் வசனத்தின் மீதான விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வேலையை செய்ய பணிக்கப்பட்டுள்ளது. இந்தப்பதிவை படிப்பதற்கு முன்போ அல்லது பின்போ, இதனுடன் நெருக்கமான தொடர்புடைய,அல்லது புரிதலை மேலும் எளிமைப் படுத்தக்கூடிய  இந்தப்பதிவை படித்துவிடுவது உங்களுக்கு நல்ல முன்னுரையை கொடுக்கவல்லது.

சரி விசயத்துக்கு வருவோம்...
அல்குர்ஆனின் வசனம் 2:178 ஆனது பழிக்குப் பழி தீர்ப்பது குறித்து பேசுகிறது.சமீபத்தில் தமிழ்ஹிந்து தளத்தில் பின்னூட்டத்தில் உரையாடும் போது இந்த வசனத்தின் மீதான விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

இதே விமர்சனத்தை சகோதரர் தங்கமணி என்பவரும் சுவனப்பிரியன் அவர்களது தளத்தில் வைத்திருந்ததை பார்க்க முடிந்தது..பரவாயில்ல...விமர்சிக்கவாவது, மக்கள் குர்ஆன் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்...

Counter

பிற பதிவுகள்