இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 24, 2013

விஸ்வரூபம்: முஸ்லிம்களின் மனநிலை என்ன?

21 கருத்துகள் :
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே!

பிழையான எண்ணம் கொண்டு இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தவறாக சித்தரிக்கும் கமல்ஹாசன் மனம் திருந்த மனதார பிரார்த்திக்கிறோம்.
விஸ்வரூபம் எடுத்திருக்கும் நடிகர் கமல்ஹாசனின் திரைப்பட வெளியீடு தொடர்பான பிரச்சனை, அடிப்படையில் முஸ்லிம்களின் எதிர்ப்பை பின்னனியாகக் கொண்டு இன்றைய நாளைக் கடந்தவண்ணம் இருக்கிறது. 

இந்த பிரச்சனை இப்போது எந்த அளவில் பேசப்படுகிறது? அல்லது பேசப்பட வைக்கப்படுகிறது என பார்த்தால்? இந்தப் படம் கொண்டிருக்கும் கருத்துக்களையோ, அல்லது அது உண்டாக்கவிருக்கும் தாக்கம் குறித்தோ சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ யாரும் பேசத் தயாராக இல்லை. இதை எதிர்த்து நிற்கும் முஸ்லிம்களை, அவர்களது எதிர்ப்பு கோஷங்களை, போராட்டங்களை மட்டுமே முன்னிருத்தி இந்த விசயம் பார்க்கப்படுகிற்து.

ஏன் இந்த போராட்டம்? எதற்கு இத்தனை கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள், இதன் பின்னனியாக முஸ்லிம்கள் எதைக் கையில் கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்தும் விரிவாக இல்லாவிடினும் குறைவாகவாவது அலசிப்பார்க்கவேண்டியது அவசியம்.

ஒரு பிரச்சனையை அணுகும் போது இருதரப்பு வாதங்களையும் கணக்கில் கொண்டு பார்வையை அதன்மீது சீராக்குவதே குறைந்த பட்ச நியாயமாக இருக்கும்.

முதல் தரப்பாக கமல்ஹாசன் குறித்து அதிகமாகவே விவாதிக்கப்பட்டிருக்கிறது. பெரும் பொருட்செலவு, பெரிய முயற்சி, புதிய தொழில் நுட்பம், என பல காரணிகள் அவரது தரப்பில் நியாயங்களாக முன்வைக்கப்படுகிறது.

இரண்டாவது தரப்பான முஸ்லிம்களின் நிலையை பார்வைக்கு கொண்டுவரும்முன்,  மையப்பொருளான சினிமா என்ற ஒன்று எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்வது, அல்லது ஒரு கனம் மனதில் இறுத்திக்கொள்வது, பிரச்சனையின் தீவிரத்திற்கான காரணத்தை அறிந்திட உதவும்.

சினிமா: இது  ஊடகங்களுக்கெல்லாம் தலை. ஒரு செய்தியை உச்சபட்சமாக  மக்கள் மத்தியில் எத்தனை தூரம் எடுத்துச்செல்ல முடியுமோ அந்த எல்லையை தொட்டு, ஒரு கருத்தை மனதில் பதியவைக்கும் காத்திரமான கருவி. 

இதன் வீரியம் அலாதியானது. சாதாரணமான ஒரு நிகழ்வை தக்க கோணத்தில் காட்சிப்படுத்தி, அதற்கு பின்னனியில் பொருத்தமான வசனம், இசையுடன் கூடிய நிகழ்வாக உருவகப்படுத்தி அசாதாரணமாக்கும் வல்லமை பொருந்தியது. அப்படிப்பட்ட காட்சி ஊடகத்தில் உருவாகும் ஒரு கருத்து, மக்களை சென்றடைந்தால், அது சரியோ, தவறோ, அதன் பொருண்மை வீரியம் இழப்பதற்கு காலங்கள் ஆகும்..

என்ன இப்டி சொல்ரீங்க இந்தக்காலத்துல யாரு சினிமா பாத்து விசயத்த மனசுல வாங்கிறா.. இது வெறும் பொழுதுபோக்கு ஊடகம். எந்திர வாழ்க்கைல சில மணிநேரம் மனஓய்வுக்கான கருவி அவ்ளோதான். அப்டி சொன்னீங்கன்னா... உண்மைதான்..

இந்தகாலம் இல்ல, எந்தக்காலத்துலையும் யாரும் சினிமாவை பார்த்து நடைமுறை வாழ்க்கையை வடிவமைப்பதில்லை. ஆனால் அதன் தாக்கம் எதார்த்த வாழ்வின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் அச்சுப்பிசகாமல் பிரதிபலிக்கிறது என்பது மறுக்கவியலாத உண்மை.

சரி! அப்படிப்பட்ட சினிமாவிற்கு சமூகத்தில் எத்தகைய பொருப்புகள் உண்டு.அது  தன் பொருப்புணர்ந்து செயல்படுதான்னு கேட்ட? மறுப்பதற்கு இல்லை என்பதைக் காட்டிலும் ஆழமான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை என்றே சொல்வேன். 

சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களின் மனதில் அசாதராண விசயங்களை பதிந்து பதிந்து, அதுகுறித்த தாக்கத்தை மழுங்கச்செய்வதை ஒரு கனம் யோசித்தால் உணர்ந்து கொள்ள முடியும்.

முன்னொரு காலத்தில் அரைகுறை ஆடைகளும், ஆபாசசினிமாக்களும் கடும் எதிர்ப்புக்குள்ளாகின... பொதுவாக சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பை முன்வைத்தாலும், குறிப்பாக பெண்களின் போராட்டம் பேசப்படும்படியாக இருந்திருக்கிறது.
இன்று? அப்படியான எண்ணம் ஆபாசம் அரைகுறை ஆடைகளுக்கு எதிரான சிந்தனை மொத்தமாக மழுங்கிப்போய் இருப்பதை உணர முடியும்.

இதுபோன்று வன்முறையையும் சொல்லலாம்.. முன்பு வன்முறையும், கொலை போன்ற பாதகங்களும் தீயவர்களுக்கே உரித்தான ஒன்றாக சினிமா படம்பிடித்தது. இப்போது ஆன்டி ஹீரோ எனும் கதாப்பாத்திரத்தின் மூலம் கொலைகளையும்,வன்முறைகளையும், அடிதடிகளையும் சர்வசாதாரண ஒன்றாக்கிவிட்டது. நிதர்சனத்தில் இன்றைய பிள்ளைகளிடம் இதன் விளைவைக் காணமுடியும்.

இப்படி தாக்கத்தை உண்டாக்கும் சினிமா, முஸ்லிம்கள் குறித்து என்னமாதிரியாக கருத்தை பதிவு செய்தது? செய்கிறது? என்பது மற்ற சமூகத்தாருக்கு ஒரு பொருட்டாக இல்லாவிட்டாலும் சம்பந்தப்பட்ட சமூகத்தினர் அதை கவனத்தில் கொள்வதை தவிர்க்க இயலாது.

இந்த கவனஈர்ப்பு பொதுவாக எல்லா சமூகத்தாருக்கும் பொருந்தும். தன் சமூகம் குறித்து என்னமாதிரியான கருத்துருவாக்கம் வைக்கப்படுகிறது என்பதை எல்லா சமூகத்தினரும் கவனித்தே வருகின்றனர்.

பிராமணர்களை கேலிக்குள்ளாக்கும் படம் அவர்களை காயப்படுத்தாமல் இருப்பதில்லை. ஆனால் அதை பார்க்கும் மற்றவர்களுக்கோ அது வெற்று கிண்டலாகவும், மிகப்பெரிய நகைச்சுவையாகவும் இருப்பதை பார்க்கமுடியும். 

முஸ்லிம்களை இந்த சினிமா உலகு எவ்வாறு புரிந்துவைத்திருக்கிறது. மிகச்சமீபகாலம் வரை அட்டைக்குல்லாவுடன், அருவருப்பான தமிழ் பேசும் மூன்றாம்தர மக்களாகவே புரிந்து காட்சிப்படுத்தி வந்தது.

இந்த 20 ஆண்டுகளில் முஸ்லிம்களின் முகவரி உலக அளவில் என்பதைக்காட்டிலும், குறிப்பாக இந்திய அளவில் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் தீவிரவாதம் என்ற ஒன்று முஸ்லிம்களுக்கு அடைமொழியாகவே மாறிவரும் அவலநிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்றைய மதஅரசியலும், ஊடகங்களும், முஸ்லிம்களை தீவிரவாதம் என்ற நிறக்கண்ணாடி இன்றி முன்னிருத்துவதே இல்லை. 

இதன் நீட்சியாக முழுக்க முழுக்க இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தீவிரவாத சக்திகளாக சித்தரித்து முழுநீள திரைப்படம் அதிக பொருட்செலவில் அழகிய பேனரில் வெளிவருவது இஸ்லாமியர்களுக்கு என்ன இனிப்பான செய்தியா?

இந்த கருத்துப் பதிவு மக்களை சென்றடைந்தபின், தயாரித்தவருக்கு லாபம் கிடைக்கிறது. பார்ப்பவர்களுக்கு, பொழுதுபோக்கும், கூடவே காட்சிப்படுத்தப்பட்டவர்கள் குறித்து ஒரு மனத்தோற்றம் உண்டாகிறது. 

காட்சிப்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு? அந்த மனத்தோற்றத்தின் விளைவல்லவா பரிசாகிறது? 

இதை குறித்து யார் சிந்திப்பது? எடுப்பவர்களோ, பார்ப்பவர்களோ சிந்திக்க கடமைப்பட்டவர்களாக இருக்கமுடியாது. அதன் பாதிப்பை உள்வாங்கும் சமூகம், உள்வாங்கிக் கொண்டிருக்கும் சமூகம் மட்டுமே சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறது.

இன்றை இந்தப் போராட்டமும் இந்தச் சிந்தனையின் விளைவே! இந்த போராட்டம் இரண்டு முக்கிய காரணிகளை மையமாகக் கொண்டு சுழல்கிறது. ஒன்று இஸ்லாம் இன்னொன்று முஸ்லிம்கள்.

அதென்ன இஸ்லாம் முஸ்லிம்கள்? என்றால் இப்படி பிரித்தறிவிக்க போதிய காரணங்கள் உண்டு.

முதலில் இந்த திரைப்படம் இஸ்லாமிய கொள்கைகளை தீவிரவாதத்திற்கு ஆதரவான ஒன்றாக புனைகிறது. இஸ்லாத்திற்கு எதிராக உலக அளவில் முன்னெடுக்கப்பட்டுவரும் சதிகளின் நீட்சியாக இதைப் பார்க்கலாம், அல்லது இஸ்லாம் என்ற ஒன்றை சரியாக புரிந்துகொள்ளாததன் வெளிப்பாடு எனக்கொள்ளலாம்.

ஆக எதுவாயினும், பெரும்பான்மையோ சிறுபான்மையோ பரவலாக மக்கள் மத்தியில் பின்பற்றப்படும் ஒரு நெறியை, ஒரு மார்க்கத்தை தவறாக சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மற்ற கொள்கைகளை பின்பற்றும் மக்கள் அதை எப்படி அணுகுகிறார்கள் என்பதில் பல்வேறு படித்தரங்கள் இருக்கலாம். ஆனால் எந்த மக்களைக்காட்டிலும் முஸ்லிம்கள் தாங்கள் சார்ந்திருக்கும் மார்க்கத்திற்கு அதன் கொள்கைக்கும் தனிச்சிறப்புமிக்க உண்ணதமான தரத்தைக்கொடுக்கிறார்கள். இதை வெறுமனே கொள்கை என்ற அளவில் பார்ப்பதைக்காட்டிலும் தங்களைப் படைத்த இறைவன், தங்கள் வாழ்வை நெறிசெய்து கொள்ள கொடுத்திருக்கும் ஒப்பற்ற வழிமுறையாக பார்ப்பதை பலரும் அறீந்திருப்பர். அப்படியான கொள்ளை எதிர்மறை கருத்துத்தோய்ந்து மக்களுக்கு காட்டப்படும் போது அதை பார்த்துக்கொண்டிருப்பது சாத்தியமில்லாத ஒன்று.

அடுத்தது முஸ்லிம்கள். முஸ்லிம்கள் என இஸ்லாத்தை பின்பற்றும் மக்களை இஸ்லாத்தில் இருந்து இந்த இடத்தில் தனிப்பட்டு பேசக்காரணம் உண்டு. இஸ்லாம் தோன்றிய இத்தனை காலத்தில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துருவாக்கம் இல்லாமல் இல்லை. எந்த மதத்திற்கும் இல்லாத அளவில் எல்லா காலத்திலும் இஸ்லாத்திற்கு எதிராக விமர்சனங்கள் இருந்தே வந்திருக்கிறது. அது சமகாலங்களில் சரியாக எதிர்கொள்ளப்பட்டும் வந்திருக்கிறது. அதுவே இன்றளவும் இஸ்லாம் புதுப்பொழிவுடன் இருக்க காரணமும் கூட..

ஆனால் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் இஸ்லாத்தையோ, முஸ்லிம்களை பெரிய அளவில் பாதித்ததில்லை. ஆனால் இன்றைய முஸ்லிம்களில் நிலை அவ்வாறில்லை. 

முஸ்லிம்களை சமூகத்தில் இருந்து திட்டமிட்டு அப்புறப்படுத்தும் பணி நூற்றாண்டுத் திட்டங்களாக, இந்தியத்திருநாட்டில் நடைபெற்றுவருகிறது. அதன் முதல் இரண்டாவது கட்டங்களாகவே இன்றைய காலம் இருந்துவருகிறது.முழுக்க முழுக்க முஸ்லிம்களை மற்ற சமூக மக்களிடம் இருந்து தனிமைப்ப்படுத்துவதும், மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் குறித்து விகல்ப்ப எண்ணங்களை விதைத்து வெறுப்புணர்வை உண்டாக்கி அதன்மூலம் முஸ்லிம்களை வேரருக்க ஒரு கூட்டம் எப்போதும் தயாராக இருக்கும் ஆபத்தான காலகட்டத்தை முஸ்லிம்கள் எதிர்நோக்கி இருப்பதே இன்றைய முஸ்லிம்களுக்கான பெரும் பிரச்சனை.

இத்தகைய காலகட்டத்தில் இப்படியான படம் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றிய கதையாகிவிடாமல் இருக்கவே இந்த மாபெரும் எதிர்ப்பும் கண்டனங்களும் போராட்டங்களும்...

இந்த போராட்டங்களை மேலோட்டமாக பார்த்து முஸ்லிம்கள் என்றாலே வெறும் போராட்டக்காரர்கள் தானா என எண்ணம் கொள்ளாமல் அவர்களது மனநிலையையும் புரிந்து  அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள் சகோதரர்களே!

சரியான காரணம் இன்றி இப்படியான போராட்டங்களை முஸ்லிம்கள் கையில் எடுக்க மாட்டார்கள். மாற்றுமத சகோதரர்கள், கமல்ஹாசனை பெரும் கலைஞனாக பார்க்கக்கூடியவர்கள், பெரும் முயற்சிக்கு முஸ்லிம்கள் முட்டுக்கட்டையாக இருப்பதாக எண்ணி வேற்றுமை கொள்ளவேண்டாம்.

எந்தக்காரணம் DAM 999 திரைப்படம் தமிழகத்தில் திரையிட தடைவிதிக்கப்பட்டதோ, அதே அளவுகோலை இந்த திரைப்படத்திற்கும் கொடுத்து ஒரு சமூகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுகிறோம்.

அன்புடன்
ரஜின்

புதன், ஜூன் 06, 2012

மரணிக்கவிருப்போர் கவனத்திற்கு !!! - 03

7 கருத்துகள் :


என் தந்தையின் சந்திப்பு எனக்கு மிக ஆதரவாக இருந்தது, என் உறவினார்களும், என் நன்பர்களும்  இவ்வாறு எனது கப்ருக்கு (வந்து எனக்காக பிரார்த்தித்து) செல்வதை ஆசைப்பட்டேன்.
மேலும் '' என் தந்தையே என் பொறுப்பில் உள்ள என் கடனை செலுத்துவீர்களா! எனக்காக அந்த கடன் தொகையை தருமம் செய்து விடுவீர்களா! எனக்காக பிரார்த்தனை செய்வீர்களா! என நான் குமுருகின்ற குரலை என் தந்தை செவியுறமாட்டார்களா! என ஆசித்தேன் இருப்பினும் என் குரலை செவியுற எவ்வித வழியும் இல்லை என்பதைக் குறிக்கின்ற இறை வசனம்  وَحِيْلَ بَيْنَهٌمْ  وَبَيْنَ مَا يَشْتَهُوْنَ அவர்களுக்கும் அவர்களால் விரும்பப்படுகின்றவைகளுக்கு மத்தியில் திரையிடப்படும் ( அல் குர்ஆன் 34:54) என்ற அல்லாஹ்வின் வசனம் நினைவிற்கு வந்து விட்டது.
என் உடல் உஷ்ணம் சற்று குறைவதாகவும் சற்று கூடுவதாகவும் உணர்ந்தேன் , இதற்கும் எனது தந்தையின் சந்திப்பிற்கும் தொடர்பு உள்ளதா என்று கூட எண்ணினேன் ஆனால் அதுவல்ல, விஷயம் வேறாக இருந்தது

அது : திடீரென அறிமுகமான வெளிச்சம் ஒன்று வந்தது அதுதான் சூரா அல் முல்க்
அது (சூரா அல் முல்க்) என்னிடம் உனக்காக இரு நற்செய்திகள் உள்ளன என்றது
நான் : அதுவென்ன ? சீக்கிரம்; சொல் என்றேன்
சூரா அல் முல்க் : முதலாவது : உனது 10000 ரூபாய்க்குரியவருக்கு நீ தரவேண்டிய கடன் ஞாபகம் வந்துவிட்டது இருப்பினும் அல்லாஹ்விடமிருந்து நன்மையை எதிர்பார்த்தவராக நான் அவரிடமிருந்து பெற வேண்டிய கடனை விட்டுக் கொடுத்து விட்டேன், உன் குடும்பத்தினரிடமிருந்து அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை.

மரணிக்கவிருப்போர் கவனத்திற்கு !!!! - 02

கருத்துகள் இல்லை :


பின்னர் அவ்விருவரும் : நீ சுவர்க்க வாசியாக இருந்தால், கூடவே நாங்களும் இருப்போம், எங்களை நீ பார்ப்பீர்,
நான்: நான் பார்த்தும் செவியுற்றும் இன்னுமா நான் சுவர்க்கத்தில் நுழைவதில் சந்தேகம் உள்ளது என்றேன்
அவ்விருவர் : நீ சுவர்க்கத்தில் நுழைவது என்பது பற்றி அல்லாஹ் மாத்திரமே அதற்குரிய உரிமையைப் பெற்றிருக்கிறான், இம்மரியாதை நீ முஸ்லிமாக மரணித்ததன் காரணமாகத்தான் இன்னும் உன்னுடைய அமல்கள் மற்றும் தராசுப் போன்றவைகள் சமர்க்கிப்பட வேண்டியிருக்கிறது  என்றவுடன் என் முகம் மாறி அழ ஆரம்பித்து விட்டேன் ஏனெனில் மலை போல் உள்ள பாவங்கள் என் ஞாபகத்தில் வர ஆரம்பித்து விட்டன.

அவ்விருவர் என்னிடம் : அல்லாஹ்வைப்பற்றி நல்லெண்ணம் கொள் மேலும் உன் ரப் எவர் மீதும் அநீதியிழைக்கமாட்டான் என நம்பு என சொல்லி விட்டு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என சொல்லியவாறு மேலே உயர்ந்து விட்டனர்.
நான் எனது உடலை நீட்டிவிடபட்ட நிலையில் பார்த்தேன், எனது முகத்தை என் பார்வைகள் உயர்ந்த நிலையில் பார்த்தேன், பின்னர் அழும் சப்தத்தை செவியுற்று திசை திரும்பினேன் : அது என் அன்பு மகனின் ஓசை, அவனுடன் என் தம்பியும் இருக்கிறார்,
சுப்ஹானல்லாஹ் : நான் இப்பொழுது எங்கே இருக்கிறேன்என் உடலைப்பார்க்கிறேன், அதில் தண்ணீர் ஊற்றப்படுகிறது உடனே நான் குளிப்பாட்டப்படுவதாக அறிந்து கொண்டேன், அழும் சப்தம் என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது, மிகவும் நெருக்கடி கடுமையாகி விட்டது இருப்பினும் ''அல்லாஹ் உன் இடத்தை நிரப்புவானாக! அல்லாஹ் உனக்கு ரஹ்மத் செய்வானாக! என என் தந்தை சொன்னது  என் மீது குளிர்ந்த தண்ணீர் ஊற்றியது போல இருந்தது பின்னர் என் உடலை வெள்ளைத் துணியால் சுருட்டினார்கள்.

மரணிக்கவிருப்போர் கவனத்திற்கு !!!! - 01

1 கருத்து :


சென்னை நகரை நோக்கி பல முறை பயணித்த பிரயாணங்களில் ஒன்றில்:
விமானம் புறப்பட சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன் விமான நிலையத்திற்கு புறப்பட எண்ணினேன் ஆனால் வழியின் நெரிசல் மற்றும் சோதனைச்சாவடிகள் என்னை உரிய நேரத்தில் சென்றடைவதை விட்டு சற்று தாமதப்படுத்திவிட்டன எனவே நான் அவசரத்திற்கு  கைதியாகிவிட்டேன்.
கார் நிறுத்துமிடத்தின் வாயிலை அடைந்து அதற்கான அனுமதிச் சீட்டை எடுத்துக் கொண்டு காரை ஓரங்கட்டினேன், நான் கார் நிறுத்திய இடம் விமானநிலையப் பணியாளர்களுக்குரியதா? அல்லது பயணிகளுக்குரியதா? என்று கூட எனக்கு தெரியாது.
எதுவாக இருக்கட்டும்!

எனது பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு நான் காரைவிட்டு அவசரமாக இறங்கினேன் இதுபோன்ற இடங்களில் அவசரமாக செல்வது என்பது ஆச்சர்யப்படுவதற்கல்ல ஏனெனில் இது எல்லோராலும் ரசிக்கின்ற காட்சி,
நான் புறப்பாடு கூடத்தில் நுழைந்த பின் சோதனையறையை அவசரமாக வந்தடைந்து எனது பாக்கெட்டில் உள்ளதை இறக்கிவைத்து  சோதனையறையைக் கடந்தேன், திடீரென ஒரு ஓசை ஒலித்தது, கொண்டுசெல்ல அனுமதிக்கப்படாத ஏதோ ஒன்று என்னுடன் இருப்பதாக உணர்ந்தேன் சிறு குழப்பம் ஏற்பட்டது, அதே நேரத்தில் என்னுடன் எனது கைக்கெடிகாரம் இருப்பதாக தெரிந்து கொண்டு அதையும் இறக்கி வைத்துவிட்டு சோதனையறையை விட்டு அமைதியாக வெளியேறி, விமானநிலைய அதிகாரியிடம் அவசரமாக வந்து சேர்ந்து அவரிடம் :
'நான் விமானம் எண் 546ல்  சென்னை செல்லும் பயணி' என்றேன்,

செவ்வாய், மே 08, 2012

ஆல்கஹால் கலந்த வாசனைத்திரவியம் ஆகுமானதா???

6 கருத்துகள் :
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின்  சகோதர சகோதரிகளே!
வாசனைத்திரவியம் (PERFUME) - இதை நம்மில் விரும்பாதோர் யாரும் இருக்கமுடியாது.சிலருக்கு சில மணம் பிடிக்கலாம்,அல்லது பிடிக்காது போகலாம்,ஆனால் ஏதாவது ஒரு மணத்தில் மனங்கொள்ளாத மனிதன் இருக்கவே முடியாது. அப்படிப்பட்ட வாசனையை அள்ளிக்கொடுக்கும் திரவியத்தில், முஸ்லிம்களில் சிலருக்கு சில சங்கடங்கள் இருப்பதை உணரமுடிகிறது. அதாவது ஆல்கஹால். இது போதைப்பொருளாயிற்றே... அது கலந்திருக்கும் இந்த திரவியத்தை பயன்படுத்தலாமா? என்று.. என்னப்பா இதெல்லா ஒரு விஷயமா? என்ன அத ஒடச்சு வாயிலயா ஊத்துரீங்க.. போதை வர்ரதுக்கு எனும் கேள்வியோடு, படிப்பவர்கள் எம்மை எதிர்நோக்கலாம்... ம்ம்..


இந்தக் கேள்வியின் ஆதி இஸ்லாத்துடன் இழைகிறது... ஒரு பொருள் குறித்து, ஒரு தடையோ, சட்டமோ இருக்க...அப்பொருள் சார்ந்த பிற பொருட்களும் தடைசெய்யப்பட்டவையா அல்லது அனுமதிக்கப்பட்டவையா? என கேள்வி எழுப்புவதும்,அதை தெளிவுபடுத்திக்கொள்வதும் முஸ்லிம்களுக்கு அவசியமான ஒன்றுதான். இந்தக் கேள்வியும், பயன்படுத்தலாமா? என்ற அச்ச நிலையும் யாரைக்குறித்தும் வருவதில்லை..நம்மைப் படைத்த இறைவன்  இது தொடர்பான ஒன்றை தடைவிதித்திருக்க நாம் அறியாமல் அதைப் பயன்படுத்தி அவனுக்கு மாறு செய்துவிடக்கூடாதே என்பதால்தான்... இறை பக்தி, இறை அச்சத்தால்தான்...


சரி விஷயத்துக்கு வருவோம்!

புதன், மே 02, 2012

அல் குர்ஆன் 2:178 - கொலைக்கு தீர்வு - கொலையா ??

3 கருத்துகள் :

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே!

இந்தப்பதிவானது அல்குர்ஆன் வசனத்தின் மீதான விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வேலையை செய்ய பணிக்கப்பட்டுள்ளது. இந்தப்பதிவை படிப்பதற்கு முன்போ அல்லது பின்போ, இதனுடன் நெருக்கமான தொடர்புடைய,அல்லது புரிதலை மேலும் எளிமைப் படுத்தக்கூடிய  இந்தப்பதிவை படித்துவிடுவது உங்களுக்கு நல்ல முன்னுரையை கொடுக்கவல்லது.

சரி விசயத்துக்கு வருவோம்...
அல்குர்ஆனின் வசனம் 2:178 ஆனது பழிக்குப் பழி தீர்ப்பது குறித்து பேசுகிறது.சமீபத்தில் தமிழ்ஹிந்து தளத்தில் பின்னூட்டத்தில் உரையாடும் போது இந்த வசனத்தின் மீதான விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

இதே விமர்சனத்தை சகோதரர் தங்கமணி என்பவரும் சுவனப்பிரியன் அவர்களது தளத்தில் வைத்திருந்ததை பார்க்க முடிந்தது..பரவாயில்ல...விமர்சிக்கவாவது, மக்கள் குர்ஆன் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்...

திங்கள், ஏப்ரல் 23, 2012

ஃபர்தா என்ன சாதித்துவிட்டது??? - 03 (இருக்கு ஆனா இல்ல)

16 கருத்துகள் :
பாகம் 01 , பாகம் 02

ராதிகாவோ..தன் நீண்ட அமைதியும்,பதில் பேசாமலிருப்பதும்,தான் பர்தாவின் கூற்றை ஏற்கும் நிலைக்கு வந்துவிட்டோமோ,என சுதாரித்து...உடம்ப மறைக்கிறெதெல்லாம் சரி..ஆனா அவங்கவங்க போட்டுக்கிற ட்ரெஸ்ஸ அவங்க தேர்வு செய்ய உரிமை இருக்கு... இதுதா என்னோட கருத்து.இதுல எந்த மாற்றமும் இல்ல..என தன்னை அந்தக் கருத்தில் இருந்து மீட்டுக்கொள்ள முயன்றாள்...(பாகம் 02)

ரொம்ப சரியா சொன்ன ராதி.. நிச்சியமா என்னோட கருத்தும் அதுதான்.நம்ம ட்ரெஸ்ஸ நாம தேர்வு செய்ய முழு உரிமை நமக்கே.. சரி நீ உன்னோட ட்ரெஸ்ஸ தேர்வு செய்யிர, நல்லதாவே... ஓக்கெ... அதேமாதிரி நம்ம ஃபேஷன் குயினையும், அவங்க விருப்பத்துக்கே ட்ரெஸ் செலக்ட் பண்ண சொல்லிடலாமா? என அவர்களது வகுப்பிற்கு வரும் ஒரு ஆசிரியை குறித்துக் கேட்டாள் ஹதிஜா.. உனக்கு ஏண்டி இந்த வம்பு? அவங்க போடுரதெல்லா ட்ரெஸ்ஸா?? அந்தந்த ப்ரொஃபஷன்க்குன்னு ஒரு மரியாத இல்லயா? என ராதிகா மறுதலித்தாள்...ஏன்? என்ற ஹதிஜாவின் கேள்விக்கு, ஆசிரியர் பணி புனிதமானது, அவக இந்த வேலைல இல்லைன்னா, என்னவேண்ணா போட்டுக்கலாம்.. என்றாள் யோசனையாய்...

சனி, ஏப்ரல் 21, 2012

ஃபர்தா என்ன சாதித்துவிட்டது??? - 02 (10% வேறுபாடு?)

28 கருத்துகள் :
முந்தைய பாகத்தை படிக்க: க்ளிக் செய்யுங்கள் பாகம் 01 


ஹதீஜா - ராதிகா 

ஹதிஜா மௌனப்புன்னகையுடன் ராதிகாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. கோவம் தணிந்து வருத்தம் மேலிட..ஸாரிடி...இருந்தாலும் நீ இப்டி பண்ணிருக்ககூடாது என நிதானமானாள் ராதிகா..இந்த சமயத்துக்காய் காத்திருந்தவள்போல் ஹதிஜா பேசத்துவங்கினாள்... (முதல் பாகம்)

ராதிகாவை இயல்புநிலைக்கு கொண்டுவர,.. ஹதிஜா, பொய்சிரிப்போடு... ராதி...ஏய், ப்ச், இங்க பார்டி... இன்னக்கி ஒருநாள் போடாம இருந்தா என்னான்னு கேக்குற... இது நாங்க போடுர யூனிஃபார்ம்ன்னு நெனச்சிக்கிட்டியா என்ன? இன்னைக்கி லீவுதானே, வேர போட்டா என்னான்னு கேக்க??...என்றதும்,... இல்லப்பா அப்டில்லா நெனைக்கல,என ராதிகா சிறு தவிப்புடன் பதிலளித்தாள்... தொடர்ந்து ஹதிஜா....அப்படியா? சரி! அப்போ பர்தா எதுக்காக நாங்க போடுறோம்? சொல்லேன்...என விளையாட்டுத் தனமாக கேள்விகளை தொடர்ச்சியாக கோர்க்க...

ராதிகா, யோசித்தவளாய்!!!,.. என்ன? உங்க மத்துல பொம்பளைங்க மட்டும், இப்டித்தா இருக்கனும்ன்னு சொல்லிவச்சுருக்கு,அத கட்டாயம் ஃபாலோப் பண்ணனும்ன்னு செய்யிரீங்க... இதுனால என்ன பெனிஃபிட்? பாரு நாங்கள்லா எவ்வளவு சுதந்திரமா இருக்கோம்...நீங்க அப்டி இல்ல.. அப்டி நீங்க இருக்க உங்க மதமும் அனுமதிக்கல,... விதியேன்னு போட்டுட்டு இருக்கீங்க... இல்லயா? என பொடிவைத்து புன்முறுவலுடன் பதிலளித்தாள்...

வியாழன், ஏப்ரல் 19, 2012

ஃபர்தா என்ன சாதித்துவிட்டது??? - 01

13 கருத்துகள் :

அட அல்லா! சரிடி.. ஃபோன மொதல்ல வைய்யி..அம்மா கத்துராக... பேச ஆரம்பிச்சா நிறுத்த்தமாட்டியே..!! வச்சுட்டேம்மா...என அம்மாவுக்கு பதில் சொல்லியவாரே.. வைய் வைய் நீ சொன்னதுலா நியாபகம் இருக்க்க்கு...சரி சரி.... என அம்மாவின் தொனதொனப்பு பொருக்காமல் ஹதிஜா போனை துண்டித்தாள்..ஏம்மா ராத்திரி நேரத்துல தொண்டத்தண்ணி வத்த, இப்டி கத்திட்டு இருக்க? என பொய்ச்சடவுடன் அறைக்குள் நுழைந்தாள்.. அந்த ராதிப்புள்ளக்கி போன எடுத்தா வெக்கெத்தெரியாதெ..என தனக்குத்தானே அம்மா புலம்புவதை கவனிக்காதவளாய், கவரை பிரித்து புதிதாய் வாங்கிய புடவையை தோளில் போட்டு பார்த்துக்கொண்டிருந்தாள்.. ஹதி....இன்னும் லைட்ட அமத்தலியாடி..என அம்மா குரல்கொடுக்க... அமத்திட்டேம்மா என்ற குரலோடு விளக்கை அணைத்துவிட்டு,புடவையை கொடியில் போட்டுவிட்டு உறங்கச்சென்றாள்.

மறுநாள்:பரபரத்தவளாய்!..காலேஜுக்கு நேரமாச்சுமா...ராதிவேர நேரா காலேஜுக்கே வந்துர சொல்லிட்டா.. நான் கேண்டீன்ல எதாவது சாப்டுக்கிறேன்.. என சொல்லியவாரே, சைக்கிளை வெளியே எடுத்துக் கொண்டு வேகமாக புறப்பட்டுவிட்டாள்..அடியே அடியே ஒருவா சாப்டு போடி... அம்மாவின் அடுப்படி குரலுக்கு, நீ சாப்டுமா என தெருவிலிருந்தே பதில் கொடுத்தவாறு ஹதிஜா சைக்கிளை அழுத்த..அம்மாவின் குரலும் மெல்ல ஓய்ந்தது..

சனி, ஏப்ரல் 14, 2012

அல்குர்ஆனை அறிவோம்...(என் ஹிந்து சகோதரர்களே)

3 கருத்துகள் :



அல்குர்ஆன் - தற்போது அனைவருக்கும் இதை அறிந்துகொள்ள,மற்றும் இதனைப்பற்றி விவாதிக்க துவங்கியிருக்கும் நிலையில்,இந்த இடுகையானது குர் ஆனைப் புரிதல் பற்றிய சில அடிப்படை செய்திகளை,முஸ்லீம் அல்லாத சகோதரர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

1400 ஆண்டுகளுக்கு முன்பு, இறைவனால் அனுப்பப்பட்ட இறுதித்தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு, இறைவன் வஹி எனும் இறைச் செய்தி மூலம் வழங்கியதே அல் குர்ஆன்.


குர்ஆன் என்பது ஒரே நாளில் அல்லது ஒரு மனிதர் சில காலம் செலவிட்டு ஒட்டுமொத்தமாக,எழுதி வெளியிட்ட புத்தகம் அல்ல.

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

ஒரு பயணமும் பரிணாமமும் - ??????களும்

7 கருத்துகள் :


காலைல எழுந்ததே லேட்.. வேகவேகமா குளிச்சு ரெடியாகி ஆஃபிஸ் போனாலும் கொரஞ்சது ஒன் ஹவர் லேட்டாகாம ரீச் பண்ண முடியாது. கம்பெனி பஸ்ஸவிட்டா அப்ரம் மெட்ரோ தான்.கெளம்பினா 15 நிமிஷம் வாக்குக்கு பெறகு மெட்ரோ ஸ்டேஷன். போர வழியிலயே காலை,மதிய உணவுகளை திரட்டிக்கொண்டு,ஸ்டேஷனை அடைய 20 நிமிஷம் ஆகிவிட்டது. கார்ட் ஸவைப் பண்ணி உள்ள போனா.. செம கூட்டம்.. என்னப் போலத்தா போல எல்லாரும்ன்னு நெனச்சுட்டு இருக்கும் போதே அறிவிப்பு..

(அர்ரஜா அல்இத்திபாஹ் அல் கிதாமுல் முத்தஜத் இலா மதீனத்துல் லுபையித் துஃகிய்யா ஸயெசித் இலா ரசீதுல் ஹூர் : The train to Dubai health care city will arrive at Creek Platform) இந்த அறிவிப்பை கேட்டதுமே இயல்பாய் மக்கள் கூட்டம் வாசலை நெருங்கியது. அறிவித்து முடிக்க, சரியாக ட்ரெயினும் வந்தடைந்தது.

மக்கள் கூட்டம் ட்ரெயினிலும் ததும்பி வழிந்தது! வேரவழி இல்ல போயித்தான் ஆகனும்.. ஒரு வழியா எனக்கு 1x1ft அளவுக்கு நிக்கிறதுக்கு மட்டும் இடம் கெடச்சது. ஸ்ஸபா.... இதாவது கெடச்சதேன்னு நிம்மதி...

(அல் அபுவாபுத் துஃஹ்லாத் : doors closing)ஆட்டோமேடிக் வாய்ஸ் கெய்ட் சொல்ல, அத்தோடு கதவும் அடைக்கப்பட்டு வண்டி கிளம்பியது.அடுத்த ஸ்டேஷன் அண்டர் க்ரவுண்டில் இருப்பதால், ரயிலானது மண்புழு போல லாவகமாய் பூமிக்குள் நுழைய, வெளிப்புற வேடிக்கைகள் மறைந்து,சன்னல் கண்ணாடிகள் என்னையே பிரதிபலிக்க..., ரயிலின் உட்புறம் பார்வை விரிந்தது.

புதன், டிசம்பர் 14, 2011

YOUSUF (PBUH) HISTORY - COMPLETE pdf

6 கருத்துகள் :
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே!

நபி யூஸுஃப் (அலை) அவர்களின் வரலாறு..... முழுமையான பாகம்...pdf

தர்ஜுமா டாட் காம் வெளியிட்ட 65 பாகங்கள்,மூன்று மொழிகளில் உள்ளதை.. தமிழில் மட்டும் ஒரே தொகுப்பாக்கி மின்னூல் ஆக்கப்பட்டுள்ளது...

முழுமையான குர் ஆன் ஆதாரத்துடன் சிறப்பாக இருந்ததால் அனைவருக்கும் அறியச்செய்ய சிறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது....

இந்த ஆதாரப்பூர்வ வரலாறானது அல்குர் ஆன் வசனங்களை அடிப்படையாகக் கொண்டது.நபி (ஸல்) அவர்களை பொய்ப்பிக்க யூதர்கள், நபி யூஸுஃப் (அலை) அவர்கள் குறித்துகேட்டபோது, அல்லாஹ் நபி (ஸல்)அவர்களுக்கு அத்தியாயம் பன்னிரண்டு யூஸுஃப் ஐ வஹி மூலம் அறிவித்து,யூஸுஃப் நபி அவர்களின் முழுமையான வரலாற்றை குர் ஆன் மூலம் வெளிப்படுத்தி,அவர்களை உண்மைப்படுத்தினான்..

நபிமார்களின் வரலாறு பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கே தெரியாத நிலை இருக்க,இதை மேலும் எளிமைப்படுத்தி,முழுமையாக வெளியிடும் வாய்ப்பை வழங்கிய வல்லோன் அல்லாஹ்வுக்கும்,தொகுக்க உதவிய தர்ஜுமா டாட் காம் தளத்தாருக்கும் எனது நன்றியை நவின்றவனாக,இதை பயன்பாட்டிற்கு அளிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்...

இதன் மூலம் குர் ஆனில் உள்ள அத்தியாயம் யூசுஃப் குறித்த தெளிவான விளக்கத்தையும் இதை படிக்கும் போது பெற்றுக்கொள்ளலாம்...ஒரு நபியுடைய வரலாறு தெரிந்ததாகவும் ஆச்சு...

பதிவிறக்க சுட்டி : YOUSUF (PBUH) HISTORY - COMPLETE pdf

பதிவிறக்க பக்கத்தில் நீல நிறத்தில் இருக்கும் DOWNLOAD பட்டனை க்ளிக் செய்யுங்கள்

இன்ஷா அல்லாஹ் படித்து, பகிர்ந்து கொள்ளுங்கள்....

அன்புடன்
ரஜின்

சனி, டிசம்பர் 03, 2011

SAHEEH MUSLIM TAMIL FULL PART - DOWNLOAD

30 கருத்துகள் :

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே....

ஸஹீஹ் முஸ்லிம் - மின்நூல் முழுமையான பாகம் தமிழில்..


இஸ்லாமிய அடிப்படைகளான குர் ஆன் ஹதீஸ் கிரந்தங்களில், இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் நம் கையை எட்டிவிட்ட சூழலில்,மிக முக்கிய அடிப்படையான ஸஹீஹ் முஸ்லிமானது முழுமையாக கிடைக்கவில்லை...

அதிகபட்சம் 500 ஹதீஸ்கள் pdf  தொகுப்பாக வெளிவந்து வலையில் கிடைக்க காணலாம்...ஆனால் அவ்வளவு தானா???

மொத்தமாக 5700 க்கும் மேற்பட்ட ஆதாரப்பூர்வ ஹதீஸ்களை உள்ளடக்கியதல்லவா ஸஹீஹ் முஸ்லிம்....

இன்னும் இவை சில தளங்களில் ஆன்லைன் எடிஷனாக இருக்கிறது. இருப்பினும் எவ்வித தங்குதடையின்றி நினைத்த நொடியில் திறந்து பயன்படுத்த, pdf தொகுப்பே உகந்த ஒன்று.

இதை அனுபவ ரீதியில் நான் உணர்ந்ததும்,வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையுமே இந்த தொகுப்பு உருவாக காரணமாக அமைந்தது...இன்ஷா அல்லாஹ் இதுபோன்ற தொகுப்புகளை மின்னூல் கோப்புகளாக மாற்றி அனைவரின் பயன்பாட்டிற்கு அளிக்கும் வாய்ப்பை வல்ல அல்லாஹ் தொடர்ந்து வழங்க பிரார்த்தித்தவனாக இம்மாபெரும் ஹதீஸ் களஞ்சியத்தை மின்நூல் கோப்பாக அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் எளிதாக்கி அளிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்...

ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம், சென்னை ரஹ்மத் அறக்கட்டளை நான்கு பாகங்களாக வெளியிட்டது.இம்மின்நூலானது ஆன்லைன் பிஜெ தளத்தில் உள்ள,ரஹ்மத் அறக்கட்டளை வெளியிட்ட ஸஹீஹ் முஸ்லிம் தொகுப்பை மூல ஆதாரமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த களஞ்சியத்தை மூலத்துடன் சரிபார்த்தும்,மேலதிக ஆலோசனை வழங்கியும்,முழுமையான ஆதரவளித்து உதவிய உம்மத் வலை குழும சகோதர சகோதரிகளை இந்நேரத்தில் நினைவுகூறி நன்றி நவிழ கடமைப்பட்டுள்ளேன்..

பதிவிறக்க சுட்டி : 


2Shared.com Site Link : ஸஹீஹ் முஸ்லிம் to Download

Google Site Link : ஸஹீஹ் முஸ்லிம் to view and Download

பதிவிறக்கிக்கொள்ள இயலாதவர்கள் என்னை மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்.
askabt.islam@gmail.com

இவ்வாக்கத்தை பயன்படுத்த துவங்கும் முன்,கவனிக்க வேண்டிய சில


முகப்பை அடுத்த,முன்னுரையை முழுமையாக படித்துவிட்டு தொடருங்கள்..


அத்தியாய அட்டவணை,தலைப்பை க்ளிக் செய்தால்,அந்தந்த அத்தியாயத்தை அடையும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது...


மேலும் அட்டவணை தலைப்பின் அருகில் உள்ள இந்த ஆரோவை க்ளிக் செய்து,அந்தந்த அத்தியாயத்தில் உள்ள துணைத் தலைப்புகளையும், அதன் பக்க எண்களையும் எளிதில் அறிந்து,குறிப்பிட்ட ஹதீஸ்களை எளிதாக அடையும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது..

இன்ஷா அல்லாஹ் பயன்படுத்தி பயனடையுங்கள்,அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்....

அன்புடன்
ரஜின்

ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

இதை விட சிறந்ததைச் சொல்லுங்களேன்!!! பகுதி - 01

1 கருத்து :


இஸ்லாம்!...தாங்க அந்த இது!...ஹ்ம்ம் திரும்பவும் ஆரம்புச்சுட்டானுங்கடா,இவன்களோட சுயபுராணத்தை,அப்டீன்னு நெனைக்கிறீங்க...தெரியுது...இது ஏதோ இஸ்லாத்தை உயர்த்திப் பிடிக்கும் நோக்கத்தில் மற்றவற்றை காலில் போடுவது அல்ல.
நான் சார்ந்திருக்கும் மார்க்கத்தில் இன்னன்ன நல்ல விஷயங்கள் இருக்கு,அதுபோலவோ, அல்லது அதைவிட சிறந்த கொள்கைகளோ இருந்தால் சொல்லுங்கள், என்பதுதானே ஒழிய வேறொன்னும் இல்லை...

திங்கள், ஆகஸ்ட் 29, 2011

பெருநாள் சிந்தனை!!! (ஆண்களின் ஆடை)

5 கருத்துகள் :


அஸ்ஸலாமு அலைக்கும் அருமைச் சகோதர சகோதரிகளே!

இனிய ரமலானில் கடைசிப்பத்தை கடந்து ,அத்துடன் முப்பது நாள் நோன்பின் கூலியான பெரும் மகிழ்ச்சிக்குரிய பெருநாளை எதிர்நோக்கி காத்திருக்கும் முஸ்லிம்/முஸ்லிமல்லாத அனைத்து உள்ளங்களுக்கும்,இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்தவனாக பெருநாள் சிந்தனைப்பதிவை உங்களுக்கு கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்!..


இஸ்லாமிய மக்கள் எல்லாரும் இந்நேரம் தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் பெருநாள் ட்ரெஸ் எடுத்திருப்பீர்கள்..ஆண் பெண் குழந்தைகள்,பெரியவர்கள் என அனைவருக்கும் பாரபட்சமின்றி செலவு செய்து ஆடைகளை வாங்கி இருப்போம்..மகிழ்ச்சி!..

ஞாயிறு, ஜூலை 31, 2011

இனிய ரமலான்!!!

7 கருத்துகள் :

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (திருக்குர்ஆன் 2:183)


இனிய ரமலான்!!!’...
அஸ்ஸலாமு அலைக்கும் அருமைச் சகோதர சகோதரிகளே...இதோ ரமலான் எனும் அருள்வளம் பொருந்தியதொரு மாதம் நம்மை அடைந்திருக்கும் நிலையில் உங்கள் அனைவருடனும் உரையாடுவதில்,எனது உள்ளக்கிடக்கை பகிர்ந்துகொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்...

வியாழன், ஜூலை 14, 2011

இஸ்லாமும்,அடிமைகளும்!!!...

16 கருத்துகள் :

ராஜா வேலை முடித்து,கம்பெனி பஸ்ஸில் வந்து இறங்கி,எப்போதும் போகும் டீக்கடைக்குள் நுழைகிறார்.அங்கே சற்றுமுன் வந்து சேர்ந்த அவரது நண்பர் அப்துல்லா அப்போதுதான் டீ சொல்லிவிட்டு மாலைமலரை புரட்டிக் கொண்டிருக்க,..பேச்சு ஆரம்பிக்கிறது....


ராஜா:என்ன மாப்ள இன்னக்கி சீக்கிரம் வந்துட்டாப்ள இருக்கு...


அப்துல்லா:அட! வா மாப்ள!..(தம்பி இன்னோரு டீ’ப்பா,..சக்கர ஜாஸ்தி)... உன்னப்பத்திதா நெனச்சுக்கிட்டு இருந்தேன்..என்னடா பயள இன்னும் காணோமே,எப்போவும் நமக்கு முன்னாடியே வந்துருவானேன்னு...சரி போவட்டும்,வேலை எப்டி போச்சு இன்னைக்கு?..

ஞாயிறு, மே 01, 2011

கடவுள்!..ஹிந்துக்களின் புரிதல்....

16 கருத்துகள் :

கடவுள்!....சரி,அதென்ன அடுத்து "ஹிந்துக்களின் புரிதல்"?...தலைப்பை பார்க்கும் போதே...ஆஹா ஆரம்பிச்சுட்டான்னுங்கடா...ஹிந்து மதத்தையும், ஹிந்து கடவுள்களையும் இனி திட்டி தீக்க போரானுகன்னுதா பொதுவா எல்லாத்துக்கும் தோனும்...ஏன்னா?ஹிந்துமதத்தப் பத்தி முஸ்லீமும், இஸ்லாத்தை பத்தி ஹிந்துவும் எழுதுனா,அது எதிர்மறை கருத்துப் பதிவாகத்தான் இருக்கும் என்பது பொதுவான புரிதல்,அது ஒருவகையில் உண்மையும் கூட...எதிர்மறைக் கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் அவை விரச விமர்சனங்களாக இல்லாமல், நாகரீகமாக, இருப்பது அவசியம்.

இங்கு கடவுள் குறித்த ஹிந்துக்களில் புரிதல்! என குறிப்பாக ஹிந்துக்களை மட்டும் வம்புக்கு இழுப்பது ஏன்?அப்படியானால், இஸ்லாமிய,கிருஸ்தவ புரிதல் எல்லாம் என்ன ஆச்சுன்னும் கேக்கலாம்..

வியாழன், மார்ச் 31, 2011

இஸ்லாமிய எதிர்ப்பு வாதங்களும் வலையுலகமும்,நானும்....

20 கருத்துகள் :

வலையுலகில் கால் பதித்திருக்கும் முஸ்லீம்களில் பெரும்பான்மையோர் வரலாறு ஒன்றாகத்தான் இருக்கும்.முதலில் இன்டர் நெட் அறிமுகமும்,பின் செய்திகள் ஈ மெயில் படிப்பது,அனுப்புவது,படங்கள்,பாடல்கள்,யூட்யூப் வீடியோக்கள்,முகப்புத்தகம், சாட்டிங்,வேலைவாய்ப்பு,குறைவாகவே படிப்பு குறித்த தேடல்,எனவாறாக வலையுலக அறிமுகம் பெரும் மக்கள்,இவற்றில் குறிப்பிட்ட காலம் பிஸியாக இருந்துவிட்டு,சற்றே அவர்களின் எல்லை விரிவாகும் போது வலைப்பூக்களின் அறிமுகமும் கிடைக்கிறது.அங்கங்கு கிடைக்கும் சுட்டிகள்,ஒன்றில் இருந்து மற்றொன்று எனவாறாக வலைப்பூ அவர்களை தம்பக்கம் இழுக்க....ஆங்காங்கு இஸ்லாம் எனும் வார்த்தை குறுக்கிடுவதையும் கண்ணுற நேரும்..

சனி, மார்ச் 12, 2011

அந்நிய ஆக்கிரமிப்பு மதங்கள் இந்தியாவில்???

12 கருத்துகள் :

இந்தியா - பல்வேறு மத,இன,மொழி,பண்பாடு, கலாச்சாரம், நிறம், வழிபாடு, என மனிதவாழ்வின் வகைப்படுத்தக்கூடிய பெரும்பாலான காரணிகள் அத்துனையிலும் வேறுபாடுகளை கொண்ட ஒரு பன்முக சமுதாயத்தின் தாய் நாடு.ஆனால் இத்துனை வேற்றுமைகளை கொண்ட மக்கள் ஒரு சமுதாயமாக வாழ்வதை உலகில் வேறெங்கும் காண முடியாது.இந்தியாவை உலகின் வேறெந்த நாட்டுடனும் ஒருபோதும் ஒப்பிட்டுவிட முடியாது....

Counter

பிற பதிவுகள்