சனி, டிசம்பர் 18, 2010

அரசு எந்திரம்

25 கருத்துகள் :

அரசு எந்திரம் - ஒரு நாட்டு மக்கள்,தங்களை நிர்வகிக்க,தங்களை பராமரிக்க,பாதுகாக்க, எனவாரான தங்களது எண்ணற்ற தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள தாங்களே ஏற்படுத்தி ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைமையை அரசாங்கம்,அல்லது அரசு எந்திரம் என எளிமையாக விவரிக்கலாம்.

அப்படிப்பட்ட ஒரு அரசு எந்திரம் எத்தனை பொருப்புடன் இருக்கவேண்டும்,என அதை உருவாக்கிய ஒவ்வொரு குடிமகனுக்கும்,கனவு ஆசை இருக்கத்தான் செய்யும்.தன் தேவைகளை அரசே கையேற்று நிவர்த்தி செய்யவேண்டும்.தனக்கான பிரச்சனைகளை,கோரிக்கைகளாக வைக்கும் போது,அதை சிரமேற்கொண்டு,எனக்கான முக்கியத்துவமும் கொடுத்து செய்யவேண்டும்,என்பன பல...

அவ்வாறான ஆசையானது,வேறு சிலநாடுகளின் அரசு எந்திர செயல்பாட்டை பார்க்கும்போது, சே..எவ்ளோ சிறப்பான செயல்பாடு.நம் நாட்டிலும் இப்படி இருந்தால் நல்லா இருக்குமே என எண்ணச்செய்யும்.

அப்படியாக நான் சமீபத்தில் கண்ட காட்சி என்னை இப்படிப்பட்ட அரசு எந்திரம் நம் நாட்டில் இருந்தால்,எத்துனை சிறப்பாக இருக்கும் என எண்ணச்செய்தது.

திங்கள், நவம்பர் 29, 2010

இஸ்லாமிய பெண்ணியம்

11 கருத்துகள் :
தீன் கூறும் பெண்மணியே...

தடைகள் பல மலைகளாய்...

மார்க்கத்தின் பேர் சொல்லி
உனை படிதாண்டா பதுமையாக்க
உடல்கூறு தனை சொல்லி
உன் உள்ளமதின் பலம் நீக்க
குடும்பத்தின் நிலை சொல்லி
உனை வீட்டோடு முடமாக்க
கயவர்களின் கதை சொல்லி
உன் விழியிரண்டை குளமாக்க

ஞாயிறு, நவம்பர் 28, 2010

தாயகம் முதல் அமீரகம் வரை

11 கருத்துகள் :


கூடிய உறவின்
வாடிய முகம் கண்டு,
விழிதனில் மகிழ்வின்றி
விடைதர மொழியின்றி
நடந்திட வழியின்றி
நான் வரும் நேரம்


காத்திருக்கும் காதலிபோல்
ஓடுதளத்தில் நின்றிருந்தாய்...
வரமறுக்கும் காலிரண்டை
கம்பளமிட்டு வரவேற்றாய்...


பிரிவின் வேதனை அனல் கூட்ட,
குளிரூட்டிதனை கொண்டு
கனல் தணிக்க முற்பட்டாய்

புதன், நவம்பர் 24, 2010

ஃபத்வாவுக்கு கண்டனம்

5 கருத்துகள் :

இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட,பிரபலமாக ஃபத்வாக்களை வழங்கி வரும் தாருல் உலூம் தியோபாண்ட் மதரஸா இன்று ஒரு செய்தியை தனது ஃபத்வா பிரிவில் வெளியிட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதை அந்த மதரஸாவின் தளத்திற்கு சென்று சரிபார்த்தாகிவிட்டது.மூன்று ஃபத்வாக்களில் இரத்ததானம் குறித்து வெளியிடப்பட்டுள்ளது.

(Fatwa: 1166/957=L/1430) - இந்த ஃபத்வாவில்,இரத்ததானம் செய்யக்கூடாது எனவும்,ஆனால் ஒருவர் தனது உறவினரை காப்பாற்ற இரத்ததானம் கட்டாயத்தின் பேரில் வழங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

(Fatwa: 2145/3580=B/1429) - இரண்டாவதாக இந்த ஃபத்வாவில்,ஒருவர் எதிர்பாரா தேவைக்கும்,கட்டாயத்தேவைக்கும் இரத்ததானம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

(Fatwa: 1496/1496/M=1431) - மூன்றாவதாக, இந்த ஃபத்வாவானது,நோன்பு காலங்களில் இரத்தம் வெளியேறுவது நோன்பை முறிக்குமா என்ற கேள்விக்கு,பதிலாக,அது நோன்பை முறிக்காது என கூறிவிட்டு.இரத்ததானம்,தேவையும் கட்டாயமும் இருக்கும் போது மட்டும் தரலாம் எனக்குறிப்பிடுகிறது.

இம்மூன்று பத்வாக்களும் ஒன்றுடன் ஒன்று சற்றே முரன்படுகிறது.மற்றும் அனுமதித்த ஒன்றை அனுமதிக்கப் படவில்லை என சொல்லிவிட்டு,அவசியத்திற்கு அனுமதி,என்பது அறிவார்ந்த பத்வாவாக இல்லை.

லிவ்விங் டு கெதர் = விபச்சாரம்

23 கருத்துகள் :
லிவிங் டு கெதர்:

இது குறித்து பரவலாகவே,பதிவர்கள் ஆதரவாகவும்,எதிராகவும், தங்களது கருத்துக்களை பதிந்து வர.நானும்,என் பங்குக்கு,எனது கருத்தையும் சொல்லிவிடலாம் என முடிவெடுத்துவிட்டேன்.

லிவ்விங் டு கெதர்.அதாவது.ஆண் பெண் இருவரும் திருமணம் இன்றி,ஒன்றாக வாழ்வது.பிடித்து இருந்தால் சேர்ந்து வாழ்க்கை தொடரும்,இல்லை என்றால்,அவர் அவர் வழியை அவரவர் பார்த்துக் கொண்டு சென்றுவிடுவது.பிறகு,திரும்பவும் அவரவர் விரும்பியவருடன் வாழ்வை ஆரம்பித்துவிடுவது.

சற்றே இவ்விடயத்தை சிந்தித்தால்,இது விலங்குகளின் வாழ்வு முறையை ஒத்து காணப்படும். இதில் பல விலங்குகள் கூட ஒரு துணையுடன் வாழும் பண்புடையதாக இருக்கிறது.

மனிதனுக்கும்,விலங்குகளுக்கும்,அடிப்படையில் வேறுபாடு காணப்படுவது பகுத்தறிவு எனும் மேலான சிந்தனைத்திறனால்.அது தவிர்த்தும்வெட்க உணர்வு,பேச்சு,உறவுகள்,வாழ்க்கை முறை, என பல விடயங்களில் நாம் அவைகளில் இருந்து வேறுபடுகிறோம்.

சனி, நவம்பர் 20, 2010

வெறுப்புணர்ச்சி - ஜிஹாத் - பகுதி 2

11 கருத்துகள் :

இன்று உலகில் இஸ்லாமிய பெயர்தாங்கிகளால் முன்னிருத்தப்படும் அத்துனை வன்முறைகளும் ஜிஹாத்,என்ற டைட்டில் இல்லாமல் செய்யப்படுவதில்லை.இதுவல்லாது இஸ்லாமியர்களால் செய்யப்படும்,வேறுசில வன்முறைகளுக்கும்,தாராளமாக ஊடகங்கள் ஜிஹாத் என்ற லேபிள் ஒட்டியே மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன.

ஜிஹாத் குறித்து பிறமத சகோதரர்களின் தெளிவு எப்படிப்பட்டதெனில்......
ஜிஹாத் என்றால் என்ன?புனிதப்போர்...யார் செய்வது? இஸ்லாமியர்கள்.., கொல்லப்படுவது? அப்பாவி மக்கள்.....so இஸ்லாமிய புனிதப்போர்கள் அனைத்தும் அப்பாவி மக்களை கொல்லவதே. 
இது மட்டுமே ஜிஹாத் குறித்து பிற மக்கள் கொண்டுள்ள அபிப்ராயம்.அவர்களுக்கு இது போதுமானது.மேலும் இது குறித்த உண்மை நிலையை யாரும்,அவர்களிடம் கொண்டு சேர்க்காதிருக்க,இஸ்லாமிய எதிரிகளின் பிரச்சாரத்தை மட்டுமே எதிர்கொண்ட மக்களின் மனநிலை அதுவாக இருப்பதை குற்றப்படுத்த இயலாது.

சரி: ஜிஹாத் என்றால் என்ன? 

சனி, நவம்பர் 13, 2010

அரவிந்தன் நீலகண்டன்களுக்கு சில கேள்விகள்!

4 கருத்துகள் :
சமீபத்தில் ஹிந்து(த்துவா)க்களால் மிகவும் வரவேற்கப்பட்ட அரவிந்தன் நீலகண்டனின் உண்மையான கரசேவை என்ற "கட்டு"ரையை படிக்க நேர்ந்தது.

தீர்ப்புக்கு முன்னரே அவர்களது சேவைகளை சரியெனச் சொல்லிவந்தாலும்,அதுவரை யாரும் பாபர் மசூதி இடிப்பை வெளிப்படையாக நியாயப்படுத்தவில்லை.

அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு,அவர்களுக்கு சாதகமானதை தொடர்ந்து,அவர்களது வன்ம வார்த்தைகள் அந்த கருமம் பிடித்த சேவையால் இந்திய தேசத்திற்கு நிகழ்த்தப்பட்ட மாபெறும் அவமானத்தை நியாயப்படுத்த துவங்கி விட்டார்கள்.

இதோ.இந்திய தேச இஸ்லாமியர்களின் இரத்தத்தில் துவைத்து வண்ணமேற்றிய காவிக்கொடியுடன் நாடெங்கும் ர(த்)த யாத்திரை கொண்டு,மாபெறும் இன அழிப்பை நிகழ்த்திய அத்வானி,இத்தீர்ப்பிற்கு பிறகு "தனது யாத்திரை சரியாது தான்"என திருவாய் மலர்ந்து இருக்கிறார்.

இதே தான் அரவிந்தனின் நிலைப்பாடும்.அத்வானி ஆயிரம் தலைவாங்கிய ரதயாத்திரையை நியாயப்படுத்துகிறார்.அரவிந்தன்,அதன் பின் நடந்த தேச அவமானமான மஸ்ஜித் இடிப்பை நியாயப்படுத்துகிறார்.

ஞாயிறு, அக்டோபர் 31, 2010

ஹிந்து மதம் - சில கேள்விகள்

28 கருத்துகள் :
ஒரு சகோதரரின் தளத்தில் நடந்த பின்னூட்ட கலந்துரையாடலில்,இஸ்லாம் மற்றும் ஹிந்துமதத்தின் வரையறைகளை பற்றி விவாதித்தோம்.



அப்போது எனக்கு ஹிந்துமதத்தின் வரையறை பற்றி எழும்பிய சில கேள்விகளுக்கு விளக்கம் கேட்டிருந்தேன்..பதில் இல்லை.எனவே அந்த கேள்விகளை பொதுவில் வைத்தால்,விருப்பம் உள்ள ஹிந்து சகோதரர்கள் பதில் தர ஏதுவாகுமே என அவற்றை இங்கே பதிக்கிறேன்...


உலகில் உள்ள எந்த மதமாகட்டும்,அல்லது இஸங்கள் ஆகட்டும்,சில கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்படுகிறது,அந்த கொளகையில் பிடிப்பு உள்ளவர் அந்த குறிப்பிட்ட மதத்தையோ,அல்லது அந்தந்த இஸங்களையோ சார்ந்தவராவார்.

வியாழன், அக்டோபர் 28, 2010

வெறுப்புணர்ச்சி - ஜிஹாத் - பகுதி 01

4 கருத்துகள் :





இஸ்லாம் - உலக வரலாற்றை பொருத்தவரை சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிஉலகம் முழுவதிலும் வியாபித்து,இன்று அனைத்து மக்களாலும்,கவனிக்கப்படும் மார்க்கம் என்றால் அது இஸ்லாமே.இன்னும் உலகில் உள்ள மதங்கள் அனைத்திலும் அதிகம் விமர்சனங்களை எதிர்கொண்டுவரும் மார்க்கமும் இஸ்லாம் தான்.

கடந்த நூற்றாண்டு வரை இஸ்லாம் குறித்த உள்விவகார விமர்சனங்கள் பிறரிடம் இருந்தும்,அது தன்னை பாதிக்காது இருந்த காரணத்தால்பெரிய அபிப்ராயம் இல்லாதிருந்த உலகு இன்று,இஸ்லாத்தின் மீது தனது பார்வையை திருப்ப மிக முக்கிய காரணமாவதுஇஸ்லாத்தை முன்னிறுத்தி,செய்யப்படும் தீவிரவாதங்கள் என்றால் மிகையாகாது.

தீவிரவாதங்கள் மூலம் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது,இஸ்லாத்தின் பெயரால் நியாயப் படுத்தப்படுவதால்,இன்று பிறமத சகோதரர்களின் உள்ளத்தில்,இஸ்லாம் பிறமதத்தினரை எப்படி அணுகுகிறது,அது பிற மக்களின் மீது வெறுப்புணர்ச்சியையும்,துவேஷத்தையும் முஸ்லீம்களிடம் வளர்க்கிறதாஎன்ற கேள்வி எழுகின்றது.

செவ்வாய், அக்டோபர் 12, 2010

பாபர் மசூதி தீர்ப்பு - சாதக பாதகம் ஒரு பகிர்வு

16 கருத்துகள் :

(முன்னால்) பாபர் மஸ்ஜித்" தீர்ப்பு பற்றி அரசியல்வாதிகள்,சமூகநல ஆர்வலர்கள்,மத தலைவர்கள்,பத்திரிக்கைகள் என பலரும் தங்களது கருத்தை பதிவு செய்கின்றனர்.இதில் சிலர் தீர்ப்பானது,கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு எனவும்,சிலர் சரியானது எனவும் மதிப்பிடுகின்றனர்.

பொதுவாக சில விடயங்களில் அனைவருக்குமே இருவேறு கருத்து இருக்கும்.முழுவதுமாக இது சரி,இல்லை தவறு என சொல்ல இயலாத சூழல் உண்டாகும்.இத்தீர்ப்பை பொருத்தமட்டில் பெரும்பகுதி ஏமாற்றம் மற்றும்,அற்ப ஆறுதல்என இருவேறு கருத்தோட்டம் என்னில உண்டு.

திங்கள், செப்டம்பர் 27, 2010

இஸ்லாம் - Revised Version தேவையா?

14 கருத்துகள் :


இஸ்லாத்தின் மீதான விமர்சனங்களும், அவதூறுகளும்,நாளொரு மேனியும்,பொழுதொரு வண்ணமுமாய் முஸ்லீம்களை வியாபித்துக் கொண்டே இருக்க.பெருவாரியான விமர்சனங்கள்,ஒரு கேள்வியை முன்வைத்தே எழுகின்றன.அது

"ஏன் குர்ஆனில் மாற்றம் செய்யக் கூடாது ? தேவையற்ற வசனங்களை நீக்கக் கூடாது ? - என்று"

பொதுவாக பிற மதத்தவருக்கு,குறிப்பாக ஹிந்துக்களுக்கு,இஸ்லாம் மீது பல்வேறு விமர்சனங்களும்,கேள்விகளும்,தவறான புரிதலும் உண்டு.

அவற்றை ஒரு ஹிந்துவாக இருந்து சிந்திக்கும் ஒரு மனிதனுக்கு,ஏன் இந்த குர் ஆனில் மாற்றம் கொண்டுவந்தால் என்ன? (revised version) அதில் தங்களுக்கு சாதகமான கருத்துக்களை வைத்துக் கொண்டு,மற்றதை நீக்கினால் என்ன? என்றதொரு பிரதான கேள்வி எழுகிறது.

வியாழன், செப்டம்பர் 09, 2010

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை :


பன்னிரு திங்கள் நெறிகாண
ஒற்றை திங்கள் ரமலானில்
முப்பது நாட்கள் நோன்பிருந்து
பசிகள் பலதுடன் போர் புரிந்து



வல்லோன் வகுத்த கடமைகளை
வாஞ்சை மேவி நிறைவேற்ற
உணவும் நீரும் உடனிருந்தும்
பசியும் தாகமும் கை கொண்டோம்

வியாழன், ஏப்ரல் 22, 2010

ஜின்னா பற்றி,ஒரு ஹிந்துவின் கருத்து

1 கருத்து :
இந்தியாவில் மிகவும் அறியப்பட்டவரான,பா ஜா கவின்,முக்கிய பிரமுகருமாக இருந்த முன்னால் ராணுவ அதிகாரி ஜஸ்வந்த் சிங்,முஹம்மது அலி ஜின்னா பற்றி குறிப்பிட்டவை இங்கே...
சரி இப்போது ஜின்னாவை பற்றி பேசவேண்டிய அவசியம் என்னவென்று தோன்றலாம்.அவருக்கு வக்காலத்து வாங்க இந்தப்பதிவல்ல
இது எனது முந்தைய பதிவில் சகோ விருச்சம் அவர்கள் ஜின்னா பற்றி செய்த விமர்சனத்துக்கு விளக்கமாகவும் அமையும்.
அத்துடன் ஒரு விஷயத்தில் நாம் கொண்ட வேறுபட்ட எண்ணத்தில் தெளிவும் பிறக்க ஒரு வாய்ப்பாகவும் அமையும் என்ற எண்ணத்திலே இதை பதிகிறேன்,,,,,,,,,
ஜஸ்வந்த் சிங்'கின் கருத்துடன் ஜின்னா விவகாரத்தில் எனது கருத்தும் ஒன்றி நிற்கிறது...
கரன் தாப்பர் பேட்டி விவரம்: சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியில் கரன் தாப்பரின் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் ஜஸ்வந்த் சிங் அளித்த பேட்டியின் சில பகுதிகள்... ஜின்னா சுதந்திர இந்தியாவுக்காக இங்கிலாந்து ஆட்சியாளர்களை எதிர்த்து தீவிரவமாக போராடியவர். அதேசமயம், இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் நலனுக்காகவும் போராடினார். அதற்காக இந்துக்களை ஜின்னா ஒருபோதும் வெறுத்ததில்லை. அவர் ஒருபோதும் இந்துக்கள் மீது துவேஷம் கொள்ளவே இல்லை. காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமே அவருக்கு கருத்து வேறுபாடு இருந்தது. இதை தனது கடைசிக்காலத்தில் வெளியிட்ட அறிக்கைகளிலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையிலும் அவர் தெளிவுபடத் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியுடன்தான் அவருக்கு மிகப் பெரிய கருத்து வேறுபாடு இருந்தது. காந்தியை ஒரு அரசியல் சுயநலவாதி என்று அவர் விமர்சித்துள்ளார். ஜின்னா ஒரு மாபெரும் மனிதர் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் வலிமைக்கும், இங்கிலாந்து ஆட்சியாளர்களின் அசாதாரண பலத்தையும் தாண்டி அவர் உயர்ந்து நின்றார். உண்மையில் இவர்கள் இருவருமே ஜின்னாவை விரும்பாதவர்கள்.
ஜின்னாவிடம் பல விஷயங்கள் எனக்குப் பிடிக்கும். அவர் சுயமாக வளர்ந்தவர். எந்தவித பின்னணியும் இல்லாமல் கடுமையாக உழைத்து வளர்ந்தவர். ஆனால் காந்தி அப்படி அல்ல. அவர் ஒரு திவானின் மகன். அதேபோல நேரு மிகப் பெரிய கோடீஸ்வரரின் வாரிசு. அவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்கள். ஆனால் ஜின்னா அப்படி அல்ல. தானே முயன்று, கடுமையாக உழைத்து தனக்கென ஒரு அரசியல் வரலாற்றை படைத்தவர் ஜின்னா. அவ்வளவு பெரிய மும்பையில், பரம ஏழையாகத்தான் அவரும் வாழ்ந்தார். அங்கு அவர் தாக்குப்பிடிக்க காரணம் அவரது மன வைராக்கியம் மற்றும் கடுமையான முயற்சிகளே. மும்பையில் அவர் வாட்சன்ஸ் ஹோட்டலின் மொட்டை மாடியில் தான் ஒரு அறையில்தான் தங்கியிருந்தார். ஜின்னா என்றில்லை, சுயமாக உயர்ந்த, கடுமையாக உழைக்கக் கூடிய யாரையும் நான் பாராட்டவே செய்வேன், அவர்களை மதிப்பேன். இந்தியாவும், இந்தியர்களும் முழுமையாகவே ஜின்னா குறித்து தவறான கருத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம். யாராவது ஒருவர் மீது பழியைப் போட வேண்டுமே என்பதற்காக ஜின்னாவை பழித்துக் கொண்டிருக்கிறோம். இது தவறானது. 1946ல் நடந்த தேர்தலில் ஜின்னாவின் முஸ்லீம் லீக் கட்சி அனைத்து முஸ்லீம் தொகுதிகளிலும் வென்றது. ஆனால் அவர்களால் ஆட்சியில் அமர முடியாத நிலை. காரணம், காங்கிரஸ் கட்சி ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட நிறுத்தாமல் பெரும்பாலான இடங்களில் வென்றிருந்தது. எனவே முஸ்லீம் லீக்கால் ஆட்சியில் இடம் பிடிக்க முடியவில்லை. அப்போதுதான் அவர் தேர்தலில் நின்றால் மட்டும் போதாது என்பதை ஜின்னா உணர்ந்தார். முஸ்லீம்களுக்கும் ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்பதை காங்கிரஸுக்கும் உணர்த்தினார். இதையடுத்தே இடஒதுக்கீடு உத்தரவாதம் தரப்பட்டது. முதலில் 25 சதவீதம் என்று அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீடு பின்னர் 33 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் இது சரிவர கடைப்பிடிக்கப்படவில்லை. பாரபட்சம் காட்டப்பட்டது, இது தான் நாடு பிளவுபடக் காரணமானது. நேருவுக்கும், ஜின்னாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. நேரு, அதிகாரம் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்திருக்க வேண்டும் என்று கருதினார். ஆனால் ஜின்னா அதிகராபப் பரவல் நிறைந்த பெடரல் அரசியலை வலியுறுத்தினார்.
முஸ்லீம்களுக்கு அதிகாரம் வழங்க காந்தி ஒப்புக் கொண்டார். ஆனால் அதை நேரு விரும்பவில்லை. இந்தியா பிரியும் வரை தனது கருத்தில் நேரு உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருந்தார்.
இந்தத் தவறை பின்னால்தான் நேரு உணர்ந்தார், அதை ஒப்பும் கொண்டிருக்கிறார். இந்தியா இரண்டாகப் பிரிந்ததற்கு நேருவும், அதேபோல ஜின்னாவும்தான் முக்கிய காரணம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. இதை நான் குற்றச்சாட்டாக கூறவில்லை. உண்மையைப் பதிவு செய்கிறேன். அந்த சமயத்தில் என்ன நடந்தது, எந்தச் சூழ்நிலை பிரிவினைக்கு இட்டுச் சென்றது என்பதைக் கூறுகிறேன். எனது கருத்து என்னவென்றால் ஜின்னா மட்டுமே பிரிவினைக்குக் காரணம் அல்ல. அப்படிப்பட்ட கருத்தை நாம் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே. மேலும் ஜின்னா பாகிஸ்தான் என்ற வார்த்தையை நெடுங்காலத்திற்கு பயன்படுத்தவில்லை. முஸ்லீம்களுக்கு தனி இடம் வேண்டும் என்று மட்டுமே கோரினார். சில மாகாணங்களை முஸ்லீம்களுக்காக ஒதுக்க வேண்டும். அவை இஸ்லாமிய மாகாணங்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். மேலும், இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றார். சிறுபான்மையினருக்கும் அதிகாரத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தால்தான் பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமுதாயத்தில் கெளரவத்துடனும், அதிகாரத்துடனும் இருக்க முடியும் என அவர் நினைத்தார். அதுதான் அவரது முதன்மையான நோக்கமாக இருந்ததே தவிர பிரிவினை அவரது முதல் எண்ணமாக இல்லை. அதாவது இந்தியாவுக்குள் சுயாட்சி கொண்ட ஒரு பாகிஸ்தானையே அவர் விரும்பினார். அந்தக் கருத்து சாத்தியமானதுதான் என்றும் அவர் நினைத்தார். அவரது எண்ணத்திற்கு மதிப்பளித்திருந்தால் பிரிவினையே ஏற்பட்டிருக்காது. இந்துக்களை அவர் ஒருபோதும் வெறுத்ததில்லை. காங்கிரஸ் மீதும், காங்கிரஸ் தலைமை மீதும்தான் அவரது கோபம் இருந்தது. இந்துக்களை நான் எதிரியாகவே நினைக்கவில்லை என்று அவர் தொடர்ந்து கூறி வந்திருக்கிறார் என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். முதன் முதலாக காந்தியிடம் ஜின்னாவை கோகலே அறிமுகப்படுத்தியபோது, காந்தி சொன்ன வார்த்தை இது- ''ஒரு முஸ்லீம் தலைவரை வரவேற்பதில் பெருமை அடைகிறேன்''. அங்கேயே பிரிவினை வந்து விட்டது. ஜின்னாவை ஒரு முஸ்லீம் என்ற கோணத்தில்தான் காந்தியே பார்த்திருக்கிறார். ஆனால் தான் ஒரு முழுமையான இந்தியர் என்ற எண்ணத்துடன் இருந்தவர் ஜின்னா. தன்னை ஒரு முஸ்லீமாக பார்ப்பதை அவர் விரும்பாதவர். ஜின்னாவுக்கும், காந்திக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஜின்னா ஒரு சிறந்த பேச்சாளர், சிறந்த நாடாளுமன்றவாதி, நாடாளுமன்ற அரசியலில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். பிரிவினைவாதத்தை எந்த நிலையிலும் அவர் ஏற்காதவர். ஆனால் காந்தி, தனது கருத்துக்களைக் கூற மதத்தைத் துணைக்கு அழைத்தவர். ஆனால் ஜின்னா மதம் என்ற சொல்லை கடைசி நேரத்தில்தான் கையில் எடுத்தார். ஆனால் காந்திக்கோ, அவரது அரசியலின் ஆரம்பத்திலிருந்தே மதமும் கலந்தே இருந்தது. ஆனால் ஜின்னா, அரசியலில் மதம் கலக்கக் கூடாது என்று உறுதியாக இருந்தவர். இந்திய, பாகிஸ்தான் பிரிவினையை நான் ஜின்னாவின் மாபெரும் வெற்றியாக கூற மாட்டேன். அதேபோல தான் நினைத்ததை ஜின்னாவும் சாதிக்கவில்லை. பாகிஸ்தான் உருவான சில காலத்திலேயே ஜின்னாவின் கொள்கைகள், நோக்கங்கள் அடிபட்டுப் போய் விட்டன. அந்த வகையில் காந்தியும் சரி, ஜின்னாவும் சரி தோல்வியடைந்தவர்களே...
- ஜஸ்வந்த் சிங்
இதை ஒரு முஸ்லிமான நான் சொன்னால் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மனம் வராது.இந்திய முஸ்லிம்களே இப்படித்தான்,பாவி இந்தியாவை கூறுபோட்டவனை கொண்டாடுகிறார்கள் என சொல்வார்கள்.எனவே தான் ஒரு ஹிந்துவான ஜஸ்வந்த் அவர்களின் கருத்தை முன்வைக்கிறேன்.அவரது கருத்துக்கு வழிமொழிகிறேன்,,,,
நன்றி
அன்புடன்
ரஜின்.

செவ்வாய், ஏப்ரல் 13, 2010

இந்திய முஸ்லிம்கள் குறித்த ஹிந்துத்துவாக்களின் பார்வை...

58 கருத்துகள் :
இந்த பதிவு இந்திய முஸ்லிம்கள் குறித்த ஹிந்துக்களின்,இல்ல ஹிந்துத்துவாக்களின் பார்வையை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடித்துண்டாக இருக்கும்..என்னை வந்தடைந்த,முஸ்லிம்கள் குறித்த இந்தக் கண்ணோட்டமே மொத்த ஹிந்துத்துவாக்களுக்கும் கற்பிக்கப் படும் பாடமாக இருக்கிறது,எனபது இவரின் வாதத்தில் இருந்து எனக்கு புலப்படுகிறது...
சரி விஷயத்துக்கு வருவோம்..
எனது முந்தைய பதிவில் தமிழ்ஹிந்து தளத்தின் தரம் பற்றி எழுதியிருந்தேன்...இருப்பினும் அவர்களின் கட்டுரைகளை படித்து,இயன்ற அளவு அவர்களின் தளத்திலே பதில்தர முயல்வேன்..அங்கு எனது கருத்துக்கள் பலவேலைகளில் திரிபு செய்யப்பட்டாலும் பதில் தருவேன்,ஏனென்றால் எனது தரப்பு நியாயங்கள,அங்கு வரும் ஒரு ஹிந்து சகோதரனுக்காவது புரியாத என்ற ஆதங்கத்திலே..ஆனால் அதைவிட எதிர்ப்புகளும்,கண்டங்களும் அதிகம் வரும் அவை இந்த ஹிந்துத்துவாக்களின் செயல் என தெரியும்.இருந்தாலும் அவற்றுக்கும் பதில் அளிப்பேன்..
ஆனால்,கடந்தமார்ச் 29 அன்று தமிழ்ஹிந்து தளம் வெளியிட்ட அங்காடித்தெரு பட விமர்சனம் வெளியிட்டது..அதில் எனது ஆதங்கத்தை பின்னூட்டமாக்கி இருந்தேன்..அது மட்டுறுத்தப்பட்டது வேறுவிடயம்..ஆனால் அதற்கு பதில் வந்தது பாருங்கள்..அப்படியே ஹிந்துத்துவ பிம்பம்..
படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கி நீங்களே பாருங்கள்...
அவரது அந்த கேள்விகளுக்கு பதிலும் விளக்கமும் அளிக்க கடமைப்பட்டுள்ளேன்..
அவரது கேள்விகள் சிவப்பு வண்ண எழுத்தில் குறிப்பிட்டுள்ளேன்...
திரு ரஜின் அவகளுக்கு எனது வேண்டுகோள். தயவு செய்து எந்தச் சார்பும் இன்றி சுய பரிசோதனை செய்துகொள்ளவும். ஹிந்துக்களின் தேசமான இங்கு, ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ள இங்கு, சிறுபான்மை யினர் என்ற தகுதியில் உங்களுக்கு உள்ள, ஹிந்துக்களுக்கு இல்லாத உரிமைகளை எண்ணிப் பாருங்கள்.
ஐயா இந்தியா ஹிந்துக்களின் தேசம் தான்.ஆனால் தாங்கள் கூறுவதுபோல் ஹிந்துத்துவாக்களின் தேசம் அல்ல.முதலில் ஹிந்து என்பதன் அர்த்ததை புரிந்து கொள்ளுங்கள்..இதெல்லா ஒங்களுக்கு சொல்லித்தரவே மாட்டங்க...ஏன் ஹிந்துக்களின் தேசம் என்கிறேன் என்றால்,இந்திய நிலப்பரப்பு சார்ந்து இந்தியகுடிமகனான,ஒரு முஸ்லிமான நானும் ஹிந்துதான்,அதற்கான விளக்கம் "நானும் ஒரு ஹிந்து" எனும் எனது பதிவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.படித்துவிட்டு தொடருங்கள்...
அப்படி இருக்கும் போது நீங்கள் மதம் சார்ந்து ஹிந்துக்களின் தேசம் எனச் சொல்வீர்களானால்.உங்க மேல கேஸ் போட்டு உள்ள தள்ள முடியும்..என்னய பாத்து நீ இந்தியனே இல்லங்ர...(சாரிங்க மரியாத குடுக்க மனசு வரல)இந்தியா, இங்கு பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் பாரபட்சமின்றி உரிமையானது,,
வெறும் மதம் சார்ந்து இருக்கும் ஒரேகாரணத்துக்காக இந்தியாவே ஹிந்துத்துவாக்களோடதா?..என்னடா பைத்தியக்காரத்தனமா இல்ல..(சாரிங்க மரியாத குடுக்க மனசு வரல)
ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தா? சிறுபான்மையாக இருக்கிறவன் என்ன அகதியா வாழனும்கிறீர்களா? ஹிந்துக்களுக்கில்லாத உரிமைகள் எதை இந்திய அரசியல் சட்டம் எங்களுக்கு கொடுத்துவிட்டது?..அதையும் சொல்லிருக்கலாமே?..3.5% இட ஒதுகீடுக்கு நாய் மாதிரி போராடி,அதை அப்படி இப்படி குடுத்துவிட்டால் ...அதை வைத்து என்ன இந்தியாவையே வாரி சுருட்டீரப்போரோமா?
வேறு எந்த நாட்டிலாவது பெரும்பான்மையினர் இந்த அளவுக்கு சிறுபான்மையினரை நடத்துகின்றனரா?
ஐயா.. மத்த நாட்ல உள்ள சிருபான்மையினருக்கும்,இந்தியாவில் உள்ள சிருபான்மையினருக்கும் வித்தியாசம் தெரியாம இருக்கீங்களே....
உங்களுக்கு புரியும்படியே சொல்றேன்....மலேசியாவில உள்ள ஹிந்துக்கள் சிருபான்மையினர்...அது ஒரு முஸ்லிம் நாடு..அந்த நாட்ல,உள்ள பூர்வீக குடிகளான மலாய் களுக்கு சிலவற்றில் முன்னுரிமை உண்டு..ஆனால் அங்கு வசிக்கும் குடியேரிகளான இந்திய மக்களுக்கு சிலவற்றில் மலாய்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை வழங்குவதில்லை..அதற்காக அங்கு மக்கள் ஒடுக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது,
மலேசியாவின் பூர்வீக குடிகள் அனைவரும் முஸ்லிம்களும் அல்ல...அங்கு குடியேரிய மக்கள் அனைவரும் ஹிந்துக்களும் அல்ல..இந்திய முஸ்லிம்களும் அங்கு குடியேரிகளாக உள்ளனர்.அவர்களுக்கும்,இதே நிலைதான்,,,
ஆனால் அந்த நாட்டின் நிலையுடன்,இந்திய முஸ்லிம்களின் நிலையை ஒப்பிட முடியாது..இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் ஒன்றும் வந்தேரிகள் அல்ல.முதலில் அதை விளங்கிக் கொள்ளவேண்டும்..
சில தலை முறைகளுக்கு முன்னர் குப்பனாகவும் சுப்பனாகவும் இருந்த என்னுடைய மூதாதையர்..இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு,தனது மார்க்கமாக அதை தேர்வு செய்து கொண்டவர்கள்.அவ்வளவுதான்.....
எப்படி இப்பொ பேராசிரியர் பெரியார்தாசன்,அப்துல்லாஹ் ஆனாரோ..அதே மாதிரிதான்..என்னோட மூதாதையர்களான முனியாண்டி,முஹம்மதாக மாறினர்.அவ்ளோதா...என்னை பார்த்து இரண்டாம்தர குடிமகனா இருக்க சொல்ரீங்க...
ஹிந்துக்கள் தங்கள் மத சம்பந்தமான ஊர்வலம் செல்லக் கூட ஆயிரம் தடங்கல் செய்கிறீர்கள். மீறிச் சென்றால் பெருங் கலவரத்தில் இறங்கிவிடுகிறீர்கள் (ஹைதராபாத் சமீப உதாரணம்). உங்கள் ஊர்வலம் இவ்வாறு ஹிந்துக்களால் பாதிக்கப்படுவதுண்டா? ஏன் சிறிதளவு சகிப்புத்தன்மையும் இல்லாமல் இருக்கிறீர்கள்?
அடேயப்பா ரெம்ப நல்லவன் மாதிரியே பேசுரீங்களே எப்புடிப்பா?ஐயா நீங்க சொல்லவர்ரது என்ன விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் தான...அது கலவரத்த உருவாக்கவே உருவாக்கப்பட்ட ஊர்வலமாச்சே,.....அது தா ஹிந்துக்களின் ஊர்வலம் இல்லயே..ஹிந்துத்துவாக்களின் வெறிவலம் ஆச்சே...
எனக்கு தெரிஞ்சு 1980களுக்கு பிறகுதான தமிழ்நாட்ல விநாயகசதூர்த்தி ஊர்வலங்கள் நடக்குது..அது 1991க்கு அப்பரம் ரொம்ப தீவிரமா வன்முறை கட்டவிழ்த்து விட ஏதுவானமுறையில் நடத்தப்படுகிறது....
முஸ்லிம்களின் ஊர்வலத்துல எதும் காலித்தனம் பன்றதில்லயேப்பா?ம்ம்..ஊர்வலம் போரவர்கள்,மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் சென்றால் யார் என்ன சொல்லப் போகிறோம்.அப்படி தொல்லை நேரும்போது என்னன்னு கேக்காம "சகிப்புத்தன்மையோட" இரண்டாம் தர குடிமகனா இருக்க சொல்ரீங்களா...
சகிப்புத்தன்மை என்பது என்ன?ம்ம்.சகிக்கமுடியாத ஒன்று நிகழும் போது சகித்து பொருத்துக் கொள்வதே சகிப்புத்தன்மை.அப்போ அங்க சகிக்கமுடியாம எதும் நடந்தாலும் கண்டுக்காது சும்மா இருக்க சொல்ரீங்களா?
அமைதியான முறைல நடந்தா யார் என்ன சொல்ல போரான்....
ஹிந்துக்களை பெரிதும் மதிக்கிறோம்.ஹிந்துத்துவாக்களை அல்ல...ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்துச்சொல்லும் பழக்கமே எங்களுக்கு உண்டு,....
ஜமாத் என்று நீங்களாக ஒன்று கூடிக்கொண்டு போட்டி ராஜாங்கமே நடத்துகிறீர்கள். சிவில் சட்டத்திற்கு ஷரியாவை வற்புறுத்திக் கடைப்பிடிக்கும் நீங்கள், அதன் கிரிமினல் பிரிவை மட்டும் வெகு சாமர்த்தியமாக மறந்துவிடுகிறீர்கள். நாங்கள் இஸ்லாமியர் எனவே கிரிமினல் குற்றங்களுக்கு ஷரியாவின் படியே எங்களை நடத்துங்கள் என்று ஏன் கோருவதில்லை?
இந்த ஜமாத்'கள பத்தி எனக்கு சொல்லிதராதீங்க.அதுல உள்ள உள்குத்து எல்ல உங்களுக்கு தெரியாது..எனக்குதா தெரியும்.அப்டியே ஒன்னா இருந்துட்டாலும்...
ஐயா அறிவாளி...எந்த முஸ்லிம்'ங்க கிரிமினல் சட்டத்துக்கு ஷரியா சட்டம் வேணான்னு சொல்லுவான்..அதுக்கு ஒரு வாய்ப்பு இருந்தால் சிவப்பு கம்பலம் இட்டல்லவா வரவேற்ப்போம்..அது ஏன் இந்தியாவுல கடைப்பிடிக்கிரதில்லன்னு சொல்ரேன்..
ஒரு விஷயத்த தெளிவா புரிஞ்சுக்கனும்...ஷரியத் சட்டம்,அல்லாஹ் உடைய,அல்லாஹ்வை ஏற்ற முஸ்லிம்களுக்கான சட்டம்.மற்றவர்களுக்கல்ல..முஸ்லிம்கள் மீதான ஜகாத் கடமை எப்படி முஸ்லிம்களல்லாதவர்களுக்கு பொருந்தாதோ,அதுபோல சட்டங்களும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பொருந்தாது.
இந்திய முஸ்லிம்கள் தங்களது மத சுதந்திர அடிப்படையில்,திருமணம்,சொத்து, விவாகரத்து,உள்ளிட்ட 12க்கும் குறைவான விவகாரங்களிலே...ஷரியத் சட்டங்களை கோருகின்றனர்...மீதம் உள்ள அத்துனைக்கும் இந்திய அரசியல் சாசன சட்டத்தையே பின்பற்றுகிறனர்...
சரி...ஏன் இதுமாதிரியான சிவில் சட்டங்களில் மட்டும் ஷரியத்.கிரிமினல் வழக்குகளில் இந்திய சட்டமென கேட்பது சிந்திக்காமல் கேட்கும் கேள்வியானாலும் பதில் சொல்லப்பட வேண்டிய கேள்வி..
முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் சிவில் சம்பந்தமான ஷரியத் சட்டங்கள அனைத்திலும் முஸ்லிம்களே அங்கம் வகிப்பார்கள்..அதாவது வாதியும் முஸ்லிமாக இருப்பான்,பிரதிவாதியும் முஸ்லிமாக இருப்பான்.அப்படி இருக்க அது இங்கே எந்த வித குழப்பத்துக்கும் இடம் இன்றி இருவரும் ஏற்றுக் கொள்ளும் முகமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.உதாரணமாக திருமணமோ,அல்லது தலாக் இது போன்றவை....
சரி கிரிமினல் வழக்கு என்றல்ல,இன்னபிற வியாபாரம் போன்ற சிவில் சட்டம் தொடர்பான விடயங்களில் கூட இந்திய முஸ்லிம்கள் ஷரியத்'ஐ பின்பற்றமுடியாது....ஏனென்னில் மேற்சொன்ன சில சிவில் சட்டங்கள்(திருமணம்,சொத்து போன்றவை) போக..இன்னபிற அனைத்திலும்,எனது ஹிந்து சகோதரனும் பிரதிவாதியா இருப்பான்,கிருத்தவனும் இருப்பான்...
இப்போது,ஒருவன் கொலை செய்தால்,ஷ்ரீயத் சட்டப்படி தலை போய்விடும்..சரி ஒரு முஸ்லிம் செய்தால் தலை எடுத்துவிடலாம் .கேட்க முடியாது..அதுவே ஒரு முஸ்லிமை ஹிந்து கொன்று இருந்தால் அப்போ பாதிக்கப்பட்டவன் முஸ்லிமாக இருக்க அவனுக்கு ஷரியத் சட்டத்தின் படி தீர்ப்பு சொல்வதானால் ஹிந்துவின் தலை இருக்காது..முஸ்லிம் திருடினால் கை இருக்காது..முஸ்லிமின் வீட்டில் திருடினால் ஹிந்துவின் கையும் இருக்காது..ஈவ்டீஸிங் பண்ணூனால்லா தாருமாரா தண்டனை இருக்கும் பரவா இல்லயா?
முஸ்லிம்களுக்கு ஓக்கெ.ஏன்னா இந்த மேட்டர்ல..பொதுவா இல்லனாலும் குறிப்பா முஸ்லிம்கள் மேல கை வெக்க மாட்டாங்கள்ல இந்த ஹிந்துதுவாவாதிகள்..
ஷரியத் சட்டத்துனால அதிகம் பாதுகாப்பு அடைவது முஸ்லிம்களானாலும்..பொதுவாக குற்றங்கள் குறைந்து எல்லாருமே நிம்மதியா இருப்போம்.நாளை குற்றங்களுக்கான தண்டனைகளை பார்த்துவிட்டு,ஹிந்துக்களும் வரவேற்கலாம்...
இப்பொ சொல்லுங்க ஷரியத் சட்டத்தை கிரிமினல் வழக்குகளிலும் கேட்கனுமா?கேட்கிறோம்...
அது இந்தியாவிற்கு சாத்தியம் இல்லாத ஒன்று...
கப்பித்தனமா கேள்வி கேக்க கூடாது,,,சரியா?
அன்பு கூர்ந்து குரானை முழுமையாகப் படியுங்கள். உங்கள் மனச்சாட்சியை சுத்ந்திரமாகப் பேச விடுங்கள். குரானில் வரிக்கு வரி உங்கள் மனச் சாட்சிக்கு உடன்பாடானதாகத்தான் உள்ளதா, காலத்திற்கு ஒவ்வாதவையாகவும் பிற சமயங்கள், கலாசாரங்கள் மீது துவேஷத்தினை வளர்ப்பவையாகவும் சில உள்ளனவா இல்லையா என்று தீர்ப்பளிக்கும் உரிமையை உங்கள் மனச் சாட்சியிடம் விடுங்கள். அதன் பின் உங்கள் மீது மற்றவர்கள் கண்ணோட்டம் அமைவதன் நியாய அநியாங்களை மதிப்பீடு செய்யுங்கள்.
நான் குர் ஆன்'அ படித்திருக்கேன்.ஐயா நீங்க முதல்ல குரான பாத்து இருக்கீங்களா?என்னமோ படிச்சு முடிச்சமாதிரி பாடம்லா எடுக்குரீரே...ம்ம்..யாரோ ஏதோ சொன்னத வச்சுகிட்டு வந்து இங்க ஜல்லிஅடிக்க கூடாது.
காலத்திற்கு ஒவ்வாமையா இன்னக்கி உலகம் முழுவதும் 120கோடிக்கும் மேலாக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.காலத்திற்கு ஒவ்வாததாக இருந்திருந்தால் அதன் வளர்ச்சி சரிந்து,காலப்போக்கில் அழிந்தல்லவா போய் இருக்கும்.
பிற சமய கலாச்சாரங்களை பழிப்பதாக குரானில் எங்கு எந்த வாசகம் இருக்கிறது?தயவு செய்து குறிப்பு தாருங்களேன்.அதுக்கும் பதில் சொல்கிறேன்,இன்ஷா அல்லாஹ்...
நீங்கள் அனுசரிக்கும் மதம்தான் அரேபியாவிலிருந்து வந்தது, உங்க்ள் கலாசாரம் இங்குள்ளதுதான். ஆனால் அதை மறப்பதும் மறுப்பதும் ஏன் என்று யோசியுங்கள். சில இஸ்லாமியர் இதனை உணர்ந்து அதனை வெளிப்படுத்தும்போது அவர்களை என்ன பாடு படுத்துகிறீர்கள் என்பதையும் எண்ணிப் பாருங்கள்.
ஐயா இஸ்லாம் அரேபியாவில் இருந்து வந்ததல்ல..அது அரேபியாவில் புதுப்பொலிவு பெற்றது..அவ்வளவே.நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த கலாச்சாரம் அரேபிய கலாச்சாரம் அல்ல.அது இஸ்லாமிய கலாச்சாரம்.இஸ்லாம் ஆன்மீகம்,வாழ்வியல் என இரு தனிப்பாதைகளை கொண்டதல்ல..அது வாழ்வியலுடன் ஆன்மீகத்தை பிணைக்கிறது.இரண்டையும் பிரிக்கவியலாது இரண்டரக்கலந்த ஒன்றுதான் இஸ்லாம்.
சரி இந்திய கலாச்சாரம் என எதை சொல்கிறீர்கள் ஐயா? சிந்து சமவெளி கலாச்சாரத்தையா?ம்ஹும்...அது பார்ப்பனர்களின் கலாச்சாரம்.அது ஹிந்துக்களின் கலாச்சாரம் கூட இல்லை.இந்திய பாரம்பரிய உடைகளை அணிகிறோம்.இந்திய பாரம்பரிய உணவுகளை உண்ணுகிறோம்..இந்திய மொழி பேசுகிறோம்..இந்தியராகவே வாழ்கிறோம்.வெரென்ன பண்ணனும்.இதுல எங்க இந்திய கலாச்சாரத்த விட்டுட்டோம்?..
எங்களது மார்க்கம் சில வரைமுறைகளையும் செயல்பாடுகளையும் கொண்டுள்ளது.அதை இந்திய அரசியல் சாசன சட்டத்துக்குட்பட்டு.அதன் முழு அனுமதியுடன் செய்கிறோம்..இதனால் யாருக்கு என்ன பாதிப்பு..?
தாங்கள் குறிப்பிடும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்??களான சல்மான் ருஷ்டி'யும் தஸ்லிமா நஸ்ரினும் தானே?...அவங்கல்லா,ஹிந்து மதத்துல உள்ள குருக்கள் தேவனாதன்,மற்றும் நித்தியை போன்றவர்கள்.அவர்களுக்கு ஹிந்துமக்கள்(ஹிந்துதுவாக்கள் அல்ல.) மத்தியில் இப்போது என்ன அந்தஸ்து இருக்கிறதோ.அதுதான் ருஷ்டிகளுக்கும் இஸ்லாத்தில்....அவ்வளவே...
சிறிதளவாவது சகிப்புத்த்ன்மையுடன் இருக்க நீங்கள் பழகினால் போதும். மேல் விஷாரம் (வேலூர் அருகில் உள்ளது) போன்ற ஊர்களுக்குச் சென்று அங்கு ஹிந்துக் களின் நிலை என்னவென்பதை நேரில் கண்டறியுங்கள்.
ம்ம்.எவ்வளவுங்க...சகிப்புத்தன்மை வேணும் எங்களுக்கு...குஜராத்'ல,கர்ப்பிணிகளை கற்பழித்து,வயிற்று சிசுவை கிழித்தெடுத்து,தரையில் அடித்தும்,நெருப்பில் இட்டும் கொன்றவன்,எம் பெண்மக்களையும் ஆண்மக்களையும் பாலகன்களையும் பெட்ரோல் ஊற்றி கொழுத்தியவன்.வயதான முன்னால் எம் பி,இஹ்ஸான் ஜாஃப்ரி உள்பட பல்லாயிரம் பேரின் உறுப்புகளை சிதைத்து சித்ரவதை செய்து எரித்து நரகவேட்டை ஆடியவன்,எல்லா வக்கனையா பேட்டி குடுத்துகிட்டு.துளியும் தண்டனையின்றி வெளியில் சுத்துரானே,..அதையும் பாத்துகிட்டு கையாளாகாம இருக்கோமே.....இதைவிடவும் சகிப்புத்தன்மை வேணுமா உங்களுக்கு?
மேல்விஷாரம் அத பத்தி தெரியாதுங்க...ஆனா இந்தியாவுல நீங்க தேடித்தேடி ஒரு மேல் விஷாரத்த கண்டு புடிச்சு.கதைக்கிறீர்கள்...ஆனா இந்தியாவுல முஸ்லிம்கள் வசிக்கும் பெரும்பாலான இடங்கள் மேல்விஷாரமாத்தான் இருக்கு....
குஜராத்,ஒரிஸா,அஸ்ஸாம்(நெல்லி),மும்பை,கோவை,பாஹல்பூர்(பிஹார்),மீரட்...என இந்தியாவின் வடகோடியில் இருந்து தென் கோடிவரை பெரும்பாலான முஸ்லிம்களை திட்டமிட்டே இரண்டாம்தர குடிகளாக்கி வைத்திருகிறீர்களே....இந்த கொடுமையை எங்க போய் சொல்ல..
அன்புகூர்ந்து மீண்டும் த்மிழ்ஹிந்துவில் உங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
கடைசியா சொன்னீரே ஒன்னு,...அப்பப்பா?நான் நீங்க கேட்ட கேள்விகெல்லா இவ்வளவு டீடைல்ல பதில் சொல்ல வேண்டி இருக்கு..உங்க தளத்துல சும்மா ஹிந்துத்துவம்னாலே அங்க கருத்து காத்துல பறந்துடும்..இவ்வளவும் சொன்னா.....அனுமதிப்பது சந்தேகமே..
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சகோதரர்களே..மேலே,நான் சொன்ன செய்திகள் அனைத்தும் எந்த ஒரு ஹிந்துவையும் முன்வைத்து பதில் சொல்லப்படவில்லை...ஹிந்துத்துவ சிந்தனை கொண்டு முஸ்லிம்கள் மீது சீற்றம் கொள்பவர்களை நோக்கியே பதில் தரப்பட்டுள்ளது...
இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் பதியப்படவில்லை..
நன்றி
அன்புடன்
ரஜின்

Counter

பிற பதிவுகள்