வியாழன், செப்டம்பர் 09, 2010

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்



பன்னிரு திங்கள் நெறிகாண
ஒற்றை திங்கள் ரமலானில்
முப்பது நாட்கள் நோன்பிருந்து
பசிகள் பலதுடன் போர் புரிந்து



வல்லோன் வகுத்த கடமைகளை
வாஞ்சை மேவி நிறைவேற்ற
உணவும் நீரும் உடனிருந்தும்
பசியும் தாகமும் கை கொண்டோம்


கட்டிய மணாளி அருகமர்ந்தும்
இச்சை இன்பம் தவிர்த்திட்டோம்
நண்பர் குழாம் சூழ்ந்தாலும்
கேளிக்கை,விளையாட்டை வெறுத்திட்டோம்


தீயோன் ஒருவன் பகை கொள்ள
நோன்பாளி நான்னென்று விலகிட்டோம்
இத்துனை பாக்கியம் நமக்களித்த
ஏகணை வணங்கி நன்றி சொல்லி


ஈதலை போற்றும் நன்நாளாம்
ஈகைத்திருநாள் கொண்டாடி
முப்பது நாளின் படிப்பினையே
முழுவதும் வாழ்வின் நெறியாகி


அனைவர் வாழ்விலும் அருள் சேர
இருகரம் ஏந்தி துஆச் செய்வோம்.





அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
அன்புடன் 
ரஜின் அப்துல் ரஹ்மான்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்